4/25/2010

4/19/2010

பள்ளிவாசல்கள் அலங்கரிப்பு

இறைவனுடைய ஆலயத்தை
தொழுகையால் அலங்கரிக்க மக்கள் துவங்கி விட்டார்கள்.
சில தினங்களாக தொழுகைக்காக பள்ளியை நோக்கி வர துவங்கிவிட்டார்கள்.

இன்று சுப்ஹ் தொழுகைக்காக பள்ளி வந்தவர்கள் 18 பேருக்கு
குறையாமல் இருந்தார்கள். அதே போல மஹ்ரிப் தொழுகையிலும்
அதிகமானோர் கலந்துக்கொள்கிறார்கள்..
35 பேருக்கு குறையாமல் மஹ்ரிப் வக்தில் பர்ளான தொழுகையை நிறைவேற்றுகிறார்கள்.
தொழுகையின் அவசியத்தை உணர்ந்து இறைவனுக்கு ஸ்ஜ்தா செய்ய
பள்ளியை நோக்கி மக்கள் வர வேண்டும் என்பதே நமது ஆவல்..
எல்லாம் வல்ல இறைவன் போதுமானவனாக!

4/16/2010

இன்றைய குத்பா உரை

இன்று வெள்ளிக்கிழமை ஜும் ஆ பயான்
சகோ. உமர் பிர்தெளசி அவர்கள் நிகழ்த்தினார்கள்.
இன்றைய உரையில் மறுமை சிந்தனை கொடுத்து,
பின்னர் அழைப்பு பணியின் அவசியத்தை வலியுறுத்தி உரையாற்றினார்கள்.
நல்ல ஒரு சொற்பொழிவாக அமைந்தது.
நாம் இதுவரை கேட்டிராத நல்ல நபிமொழிகள் இன்று செவியேற்க முடிந்தது.
நாம் கேட்டதை நமது வாழ்வில் நடைமுறை படுத்த
இன்னும் இது போன்ற மார்க்க கல்வியை கற்று மேம்பட
எல்லாம் வல்ல இறைவன் ரஹ்மத் செய்வானாக! ஆமின்.

4/14/2010

இறைவனின் அத்தாட்சிகள்

وَيُنَزِّلُ مِنَ السَّمَاء مَاء فَيُحْيِي بِهِ الْأَرْضَ بَعْدَ مَوْتِهَا
إِنَّ فِي ذَلِكَ لَآيَاتٍ لِّقَوْمٍ يَعْقِلُونَ

அச்சமும், ஆசையும் ஏற்படும்படி அவன் உங்களுக்கு மின்னலைக் காட்டுவதும்; பிறகு வானத்திலிருந்து மழை பொழியச் செய்து, அதைக் கொண்டு பூமியை அது (வரண்டு) இறந்த பின்னர் உயிர்ப்பிப்பதும் அவன் அத்தாட்சிகளினின்றும் உள்ளன; நிச்சயமாக அதில் சிந்தித்துணரும் சமூகத்திற்கு அத்தாட்சிகள் இருக்கின்றன. (அல்குர்ஆன் 30:24 )


(picture ; gulf news)

அர் ரஹ்மான் செய்திகள்

எல்லாம் வல்ல அல்லாஹ்வின் உதவியால்
நமது அர் ரஹ்மான் மழலையர் & தொடக்கப்பள்ளி
முதலாம் ஆண்டு நிறைவு பெற்று,
விடுமுறை காலங்கள் தொடங்கிவிட்டது...
எல்லா புகழும் இறைவனுக்கே!


4/09/2010

ஸலவாத்

إِنَّ اللَّهَ وَمَلَـئِكَـتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِىِّ يأَيُّهَا
الَّذِينَ ءَامَنُواْ صَلُّواْ عَلَيْهِ وَسَلِّمُواْ تَسْلِيماً


இந்த நபியின் மீது அல்லாஹ் அருள் புரிகிறான். மலக்குகளும் அவருக்காக அருளைத் தேடுகின்றனர். முஃமின்களே நீங்களும் அவர் மீது ஸலவாத்து சொல்லி அவர் மீது ஸலாமும் சொல்லுங்கள். (அல்குர்ஆன் 33:56)

اللَّهُمَّ صَلَّ عَلى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ عَلَى إِبْرَاهيمَ وَعَلَى آلِ إِبْرَاهيمَ إِنَّك حَميدٌ مَجيدٌ اللَّهُمَّ بَاَرِكْ عَلى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍكَمَا بَارَكْتَ عَلى إِبْرَاهيمَ وَعَلَى آلِ إِبْرَاهيمَ إِنَّك حَميدٌ مَجيدٌ


பொருள்: இறைவா! இப்றாஹீம் (அலை) அவர்கள் மீதும் இப்றாஹீம் (அலை) அவர்களின் குடும்பத்தார் மீதும் நீ அருள் புரிந்ததைப் போல், முஹம்மது (ஸல்) அவர்களின் மீதும், முஹம்மது (ஸல்) அவர்களின் குடும்பத்தார்மீதும் நீ அருள்புரிவாயாக! நிச்சயமாக நீ புகழுக்குரியவனாகவும், கண்ணியத்திற்குரியவனாகவும் இருக்கிறாய்.

இறைவா இப்றாஹீம் (அலை) அவர்களுக்கும், இப்றாஹீம் (அலை) அவர்களின் குடும்பத்தாருக்கும் நீ விருத்தி செய்ததுபோல் முஹம்மத் صلى(ஸல்) அவர்களுக்கும், முஹம்மத் (ஸல்) அவர்களின் குடும்பத்தாருக்கும் விருத்தி செய்வாயாக! நிச்சயமாக நீ புகழுக்குரிவனாகவும், கண்ணியத்திற் குரியவனாகவும் இருக்கிறாய்.
அறிவிப்பவர்: கஅப் பின் உஜ்ரா (ரழி) நூல்: புகாரி

"யார் என்மீது ஸலவாத் சொல்கிறானோ, அதன் காரணமாக அல்லாஹ் அவனுக்குப் பத்து மடங்கு அருள்புரிகிறான்" என்று நபி(ஸல்) கூறியுள்ளனர். அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு அம்ரு (ரழி) நூல் : முஸ்லிம்.

"என்னுடைய கப்ரை திருவிழாக்கள் நடக்கும் இடமாக ஆக்காதீர்கள்! என்மீது ஸலவாத் கூறுங்கள்! நீங்கள் எங்கே இருந்தாலும் உங்கள் ஸலவாத் என்னை வந்து சேரும்" என்றும் நபி(ஸல்) கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி), நூல் : அபூதாவூது.

என்னைப் பற்றிக் கூறப்படும்போது எவன் என்மீது ஸலவாத் சொல்லவில்லையோ அவன் நாசமாகட்டும்" என்றும் நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளனர்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரழி) நூல் : திர்மிதீ

"என்னைப் பற்றிக் கூறப்படும்போது எவன் என் மீது ஸலவாத் கூறவில்லையோ அவன்தான் கஞ்சனாவான்". என்பதும் நபி(ஸல்) அவர்களின் பொன்மொழியாகும்.
அறிவிப்பவர் : அலி(ரழி) நூல் : திர்மிதீ

"யாரேனும் என்மீது ஸலவாத் கூறினால் (அதாவது துஆ செய்தால்) அவன் அவ்வாறு செய்யும் போதெல்லாம் மலக்குகள் (வானவர்கள்) அவனுக்காகத் துஆ செய்கிறார்கள்" என்று நபி(ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஆமிர் இப்னு வபிஆ (ரழி) நூல்கள் : அஹ்மத், இப்னுமாஜா.

அல்லாஹ் கூறுவதாக நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:- "நபியே! யார் உமக்காக ஸலவாத் சொல்கின்றாரோ, அவருக்கு நான் பாதுகாப்பு அளிக்கிறேன்".
அறிவிப்பவர் : அப்துர் ரஹ்மான் அவுபு(ரழி) நூல் : அஹ்மத்

4/04/2010

செய்திகள்

அன்பான வாசகர்களே,
சங்கைக்குரிய சகோதரர்களே!

நமது இனையத்தின் வாசகர்கள் பல நாடுகளில் இருந்து வருகிறார்கள்
என்பது நாம் அறிந்ததே. நமது இனையத்தை வந்து தினமும் படிக்கும்
வாசகர்களுக்கு நன்றிகள். அதே போல நமது இனையத்திற்கு வாசகர்களில்
அதிகமான வாசகர்கள் வரும் நாடுகளில் முதல் ஐந்து இடங்களை பிடிப்பது,

1. United Arab Emirates 1,199
2. India 315
3. Qatar 66
4. Saudi Arabia 46
5. United States 44

இதில் ஆச்சர்யமான தகவல் என்னவென்றால்,
ஐந்தாவது இடத்தை பிடித்தது அமெரிக்கா.
அல்ஹம்துலில்லாஹ். அங்கேயும் நமது இனையத்தை பார்க்கும்
வாசகர்கள் இருப்பது சந்தோசம்.
அல்லாஹ் மென்மேலும் நமது இனையத்தின் வளர்ச்சிக்கு
உறுதுனையாக இருக்க துவா செய்வோமாக! ஆமின்.

புதிய படங்கள்





இனையத்தின் செய்திகள்

மெகாபைட்ஸ்

அன்பான வலைத்தளத்தின் வாசகர்களே,
சங்கைக்குரிய சகோதரர்களே!

நமது இனையத்தில் நாம் ஏற்கனவே சொல்லியிருந்தோம்,
அதாவது வீடியோ பதிவுகள் துல்லியமாக தருகிறோம் என..
அதே போல வீடியோ பதிவுகளுக்கு முயற்சிகளும் மேற்கொண்டோம்.
ஆனால், பதிவேற்றத்தில் வந்த பிரச்சனை என்னவென்றால்,
மெகாபைட்ஸ் பிரச்சனை. அதாவது இந்தியா போன்ற நாடுகளில்
நாம் இனையம் இல்லங்களில் பார்க்க நாம் எடுப்பது மட்டுமே 1GB.
இதையே ஹோம் ப்ளான் என சொல்வார்கள்.

இதில் நமது வீடியோ பதிவுகள் பதிவேற்றம் செய்ய
மிகுந்த சிரமமே. உதாரனமாக, நமது ஆண்டு விழாவின்
ஒரு நிகழ்ச்சியை சுமார் 3 நிமிடங்கள் ஓடக்கூடியது 202MB,
அதை பதிவேற்றம் செய்ய முயற்சி செய்தோம்.
சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக அமர்ந்து இருந்தும்
பதிவேற்றம் செய்யமுடியவில்லை. ஆகவே, இது போன்றவைகள்,
துல்லிய பதிவுகள் பதிவேற்றம் செய்ய முடியாது என்பதை
வாசகர்களுக்கு தெரிவித்துக்கொள்கிறோம்.

தொழுகை நேரங்கள்

தொழுகையாளிகள் நமது பள்ளிவாசலுக்கு தினமும் பஜ்ர் தொழுகைக்கு அதிகமானோர் வருகின்றனர். இரன்டு வரிசை குறையாமல் மக்கள் வருகின்றனர். வாரந்தோ...