8/25/2010

குர்ஆன் ஓதுவதின் சிறப்புகள்

1) நீங்கள் குர்ஆனை ஓதுங்கள். நிச்சயமாக அது நாளை மறுமையில் அதை ஓதியவருக்கு ''பரிந்துரை" செய்யும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: முஸ்லிம்)
2) குர்ஆனை ஓதி அதன்படி அமல் செய்தவரையும், குர்ஆனையும் நாளை மறுமையில் கொண்டு வரப்படும், குர்ஆனின் இரண்டு சூராக்கள் அல்பகரா, ஆல இம்ரான் முன் வந்து அந்த இரண்டையும் ஓதியவருக்காக அல்லாஹ்விடத்தில் வாதாடும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: முஸ்லிம்)
3) உங்களில் சிறந்தவர், குர்ஆனைக் கற்று அதை பிறருக்கு கற்றுக் கொடுத்தவர் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: புகாரி)
4) குர்ஆனை உரிய முறையில் ஓதி அதன் படி செயல்பட்டவர் நாளை மறுமையில் சங்கையான உயர்ந்த மலக்குகளுடன் இருப்பார். கஷ்டப்பட்டு திக்கித் திக்கி ஓதுபவருக்கு இரண்டு மடங்கு கூலி கிடைக்கும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: புகாரி, முஸ்லிம்)
5) அல்லாஹ்வுடைய வேதத்திலிருந்து (குர்ஆனிலிருந்து) யார் ஒரு எழுத்தை ஓதுகின்றாரோ, அவருக்கு ஒரு நன்மை கிடைக்கும். ஒரு நன்மை செய்தால், அதை பத்து மடங்காக்கப்படும். அலிஃப், லாம், மீம் என்பது ஒரு எழுத்து என்று நான் கூற மாட்டேன். அலிஃப் என்பது ஒரு எழுத்தாகும். லாம் என்பது ஒரு எழுத்தாகும், மீம் என்பது ஒரு எழுத்தாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: திர்மிதி)
6) ""எவருடைய உள்ளத்தில், குர்ஆனில் கொஞ்சம் கூட மனனம் இல்லையோ, அவருடைய உள்ளம் பாழடைந்த வீட்டைப்போல்"" என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: திர்மிதி)

ஜகாத் என்னும் தானங்கள்

ஜகாத் என்னும் தானங்கள்

1) தரித்திரர்களுக்கும்
2) ஏழைகளுக்கும்
3) தானத்தை வசூல் செய்யும் ஊழியர்களுக்கும்
4) இஸ்லாத்தின்பால் அவர்கள் உள்ளங்கள் ஈர்க்கப்படுபவர்களும்
5) அடிமைகளை விடுதலை செய்வதற்கும்
6) கடன்பட்டிருப்பவர்களுக்கும்
7) அல்லாஹ்வின் பாதையில்(போர் புரிவோருக்கும்)
8) வழிப்போக்கர்களுக்கும் உரியது...

அத் தவ்பா ;60

8/17/2010

அர் ரஹ்மான் செய்திகள்


நமது அர் ரஹ்மான் பள்ளியில் சுதந்திர தின விழா
சிறப்பாக கொண்டாடப்பட்டது.. நமது பள்ளியில் கொடியேற்ற
சிறப்பு விருந்தினராக ஜனாப். அபுபக்கர் அவர்கள் அழைக்கப்பட்டு இருந்தார்.
பள்ளி மாணவ மாணவிகளும், மற்றும் பெற்றோர்களும் வந்து இருந்தனர்.


8/16/2010

ரமலான் பிறையை பார்ப்பதற்காக....


நமது பள்ளியில் ஷாபான் மாதத்தில்
ரமலான் பிறையை பார்ப்பதற்காக
முயற்சி செய்தோம்.. ஆனால் மேகமூட்டமாக இருந்ததால்
பிறை தெரியவில்லை...
இதோ அந்த காட்சிகள்...


புனித ரமலான்

அன்பான கொள்கை சகோதரர்களே
ஆயிரம் மாதங்களை விட சிறந்த மாதமான
ரமளான் மாதத்தில் நாம் இருக்கிறோம்.
இதில் நம்மால் முடிந்த அளவு அமல்கள் செய்து
இரு உலகிலும் நற்பாக்கியங்கள் அடைவோமாக!

நமது பள்ளியில் இப்தார் நிகழ்ச்சிகள் சங்கையாக நடந்து வருகிறது.
தினமும் 150பேர் நோன்பு திறக்க வருகிறார்கள்.
எல்லா புகழும் இறைவனுக்கே!
அன்பான சகோதரர்களே!

நமது வலைத்தளம் தொடங்கப்பட்டு
ஏக இறைவனின் கிருபையால்
இரன்டாம் வருடத்தில் அடியெடுத்து வைத்து இருக்கிறது.
ஏதோ நமது அமைப்புக்காக ஒரு இனையம் தொடங்கலாம்
என எதிர்பார்த்து அதை முன்னோட்டமாக தான் blogspot-ல்
தொடங்கினோம்... இதிலேயே நமக்கு திருப்தி இருப்பதால்
தொடர்த்து நமது இனைய வழி பயணம் செல்கிறது..
எல்லா புகழும் இறைவனுக்கே!

8/08/2010

ஏக இறைவனின் திருப்பெயரால்..

எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே!
ரமளான் சம்பந்தமான ஆலோசனை அமர்வு,
இன்று மாலை மக்ரிப் தொழுகைக்குப்பின்,
நமது பள்ளியில் நடைபெற்றது.
இதில் ரமளானின் சிறப்பான அமல்கள்,
நமது செயல்பாடுகள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.
இப்தார் செயல்பாடுகள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டு
அதற்காக ஏழு பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.
எல்லா புகழும் இறைவனுக்கே!
அனைவருக்கும் 'Ramadan Mubarak'
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்...

அன்பு சகோதரர்களுக்கு ....
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

கடந்த 06/08/2010 அன்று மாலை மஃப்ரிப் தொழுகைக்கு பின் நடைபெற்ற "ஃபித்ரா 2010"



கமிட்டிக்கான பொறுப்பாளர்களை தேர்ந்தெடுக்கும் கலந்தாலோசனை அமர்வு அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் சிறப்பாக நடைபெற்றது. அது சமயம் தாயகத்திலிருந்து வருகை புரிந்துள்ள மதுக்கூர் தவ்ஹீத் தர்ம அறக்கட்டளையின் தலைவர் சகோதரர் SNM.முஹம்மது யாகூப் அவர்கள் ஃபித்ராவின் செயல்பாடுகளை விளக்கினார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்... புகழ் அனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே...!

8/05/2010

நாயகம் (ஸல்) பொன்மொழிகள் - 2

உளூச் செய்தபின் கூறவேண்டியவை

أَشْهَدُ أَنْ لاَّ إلَهَ إِلَهَ إِلاَّالله وَحْدَهُ لاَشَرِيْكَ لَهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًاعَبْدُهُ وَرَسُولُهُ

அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹூ வஹ்தஹு லாஷரீகலஹு வ அஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வரசூலுஹு என்று கூறினால் சுவனத்தின் எட்டு வாயில்களும் அவருக்காகத் திறக்கப்படுகின்றன என நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: உக்பா பின் ஆமிர் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்:முஸ்லிம்

பொருள்: வணங்கப்படத் தகுதியானவன் அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறு எவருமில்லை; அவன் ஏகன்; அவனுக்கு நிகராக எவருமில்லை என்று உறுதியாக நம்புகிறேன். முஹம்மத் صلى الله عليه وسلم அவர்கள் அவனது அடியாராகவும் தூதராகவும் உள்ளார்கள் என உறுதியாக நம்புகிறேன்.

8/04/2010

நாயகம் (ஸல்) பொன்மொழிகள்

உளூச் செய்வது

உஸ்மான்(ரலி), உளூச் செய்யும்போது (மக்களிடம்) 'நான் ஒரு ஹதீஸை உங்களுக்குச் சொல்லட்டுமா? ஒரு வசனம் மட்டும் இல்லையானால் அதை நான் உங்களுக்குச் சொல்லியிருக்க மாட்டேன்' என்று கூறிவிட்டு, 'ஒரு மனிதன் அழகிய முறையில் உளூச் செய்து, தொழவும் செய்வானாயின் அவன் தொழுது முடிக்கும் வரை அவனுக்கும் தொழுகைக்கும் இடையிலுள்ள பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன' என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதை கேட்டிருக்கிறேன் என்றார்கள்" ஹும்ரான் அறிவித்தார்.
அது எந்த வசனம் என்று குறிப்பிடும்போது 'நாம் அருளிய தெளிவான அத்தாட்சிகளையும், நேர் வழியையும் அதனை நாம் வேதத்தில் மனிதர்களுக்கும் விளக்கிய பின்னரும் மறைப்பவர்களை அல்லாஹ் சபிபிக்கிறான்; மேலும் அவர்களைச் சபிப்பவர்களும் சபிக்கிறார்கள்' (திருக்குர்ஆன் 02:159) என்ற வசனமாகும்" என உர்வா கூறினார்.

பாகம் 1, அத்தியாயம் 4, எண் 160 Bukhari

8/03/2010

அன்பான அல்லாஹ்வின் நல்லாடியார்களே
புதியதாக இன்ஷால்லாஹ் ஹதீஸ் நபிமொழிகள்
எழுத இருக்கிறோம்.. நாளை முதல் தொடராக வர இருக்கிறது.

தொழுகை நேரங்கள்

தொழுகையாளிகள் நமது பள்ளிவாசலுக்கு தினமும் பஜ்ர் தொழுகைக்கு அதிகமானோர் வருகின்றனர். இரன்டு வரிசை குறையாமல் மக்கள் வருகின்றனர். வாரந்தோ...