10/28/2012


ஹஜ் (சவுதி) பிறயை பின் பற்றி தொழுததால் நமது சகோதர சகோதரிகள் சனிக்கிழமை காலை தனித்தனியே தொழுதனர். அவர்கள் தொழுகைக்காக தயாராக இருந்த இடங்கள்.. அனைவருக்கும் பெரு நாள் வாழ்த்துக்கள். அடுத்த வருடம் அனைவ்ரும் ஒன்று சேர்ந்து தொழுவோம் இன்ஷால்லாஹ்.

ஹஜ் பெரு நாள்





ஹஜ் பெரு நாள் புகைப்படங்கள்


ஹஜ் பெரு நாள் புகைப்படங்கள்


எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே இறைவனின் உதவியால் நமதூரில் பெரு நாள் மிகச்சிறப்பாக கொண்டாடினார்கள். நமது பள்ளியில் வெள்ளிக்கிழமை பெரு நாள் தொழுகை சரியாக காலை 7.10மணிக்கு நடந்தது. தொழுகை மற்றும் பெரு நாள் உரையை நமது பள்ளி இமாம் அவர்கள் நடத்தினார்கள். சவுதி பிறையை பின் பற்றி பெரு நாள் முன்னதாக நடத்தியதால் வழக்கமான உற்சாகம் இல்லாமல் இருந்து தொழுகைக்குப்பின் பெரு நாள் சிறப்பாக இருந்தது. எல்லா புகழும் இறைவனுக்கே!


10/23/2012

பேச்சுப் பயிற்சி


நமது பள்ளியில் வாரந்தோறும் நடைபெறும் பேச்சுப்பயிற்ச்சியில் வெற்றிப்பெற்றவருக்கு நமது உதவி தலைவர் அவர்கள் பரிசு கொடுத்து வாழ்த்து சொன்ன போது...

அர் ரஹ்மான் செய்திகள்


நமது மாணவ மாணவிகளுக்காக சதுரங்க விளையாட்டு பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது. ஒரு சதுரங்க பயிற்சி வகுப்பின் போது...


. புதிய தலைத்துணியுடன்(ஸ்கார்ப்) பள்ளிக்கு செல்ல காத்திருக்கும் அர் ரஹ்மான் மாணவி.

ஜும்மா உரை


ஒரு வெள்ளிக்கிழமை குத்பா உரையின் போது சகோ. அதிரை அன்வர் அவர்கள்

மழைக்கால பதிவுகள்





யா அல்லாஹ் இந்த மழையை பயனுள்ளதாக ஆக்கித்தருவாயாக!






10/22/2012

தியாகத் திரு நாள்


எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே
இன்ஷால்லாஹ் இந்த வருடம் ஹஜ் பெரு நாள்
எதிர்வரும் வெள்ளிக்கிழமை இங்கே கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது. எல்லா புகழும் இறைவனுக்கே!
பெரு நாள் தொழுகை சரியாக காலை 6.45 மணிக்கு நடைபெறும்.


உங்கள் இல்லங்களில் உள்ள குர்பானி தோல்களை தவ்ஹீத் பள்ளிக்கு கொடுத்து நல்ல நடைமுறைகளில் செலவிட உதவி செய்யுங்கள்.

10/02/2012



மணமக்கள் இரு உலகிலும் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறோம்.

இறைவனின் அருட்கொடை


இறைவனின் அருட்கொடை




தென்மேற்கு பருவமழை நமது ஊரில் ஒரு மாலை நேரத்தில் வந்த போது..

நிக்காஹ்


நபிகள் நாயகம் صلى الله عليه وسلم அவர்கள் நவின்றார்கள்:
“பெண்களை அவர்களின் அழகுக்காக திருமணம் முடிக்காதீர்கள், அவர்களுடைய அழகு அவர்களை அழித்துவிடக் கூடும். பெண்களைச் செல்வந்தர்கள் என்பதற்காக மணம் முடிக்காதீர்கள், அவர்களுடைய செல்வம் வரம்பு மீறுவதிலும் அடங்காப் பிடாரித்தனத்திலும் அவர்களை ஆழ்த்திவிடக் கூடும். மாறாக மார்க்கப்பற்றின் அடிப்படையில் அவர்களை மணமுடித்துக் கொள்ளுங்கள்.
மார்க்கப்பற்று கொண்ட கறுப்புநிற அடிமைப்பெண், அல்லாஹ்வின் பார்வையில் வெண்ணிறமுடைய மார்க்கப்பற்றில்லாக் குடும்பப் பெண்ணைவிடச் சிறந்தவள் ஆவாள்.”(அல்முன்தகா)

அண்ணல் நபி صلى الله عليه وسلم அவர்கள் மொழிந்தார்கள்:

“எவருடைய மார்க்கப் பக்தியையும் நற்குணத்தையும் நீங்கள் விரும்புகின்றீர்களோ அத்தகைய மனிதர் உங்களிடம் திருமணம் கேட்டு வந்தால் அவருக்கு மணமுடித்துக் கொடுத்து விடுங்கள். நீங்கள் இப்படிச் செய்யாவிட்டால் பூமியில் குழப்பமும் தீமையும் விளைந்துவிடும்.” (திர்மிதி)
அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் அம்ர் رَضِيَ اللَّهُ عَنْهُ

உறவினரை இணைத்து வாழ்வீர்


ஒருவர் தம் உணவு (வாழ்வாதாரம்) தமக்கு அதிகரிக்கப்படவும், தம் ஆயுள் தமக்கு நீட்டிக்கப்படவும் விரும்பினால் அவர் தம் உறவினரை இணைத்து வாழட்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: அனஸ் (ரலி), நூற்கள்: புகாரீ, முஸ்லிம்
நிச்சயமாக அல்லாஹ், படைப்புகளைப் படைத்து முடித்தபோது `உறவு எழுந்து நின்றது. (என்னைத்) துண்டித்துக் கொள்வதைவிட்டு உன்னிடம் பாதுகாப்புக் கோரும் இடம் இது என்று கூறியது. ஆம் உன்னைச் சேர்த்துக்கொள்பவனை நானும் சேர்ப்பேன். உன்னைத் துண்டிப்பவனை நானும் துண்டிப்பேன் என்பதை நீ திருப்தியுறவில்லையா? என்று அல்லாஹ் கேட்டான். திருப்திதான் என உறவு கூறியதும், உனக்கு அது உண்டு என்று அல்லாஹ் கூறினான் என நபி (ஸல்) அவர்கள் கூறிவிட்டு, பின்பு, நீங்கள் விரும்பினால் (பின்வரும்) இறைவசனத்தை ஓதுங்கள் என்றும் கூறினார்கள்.
நீங்கள் பொறுப்பாளர்களாக வந்துவிட்டால் பூமியில் நீங்கள் குழப்பம் செய்திடவும், உங்களின் இரத்தத் தொடர்புடையவர்களை நீங்கள் துண்டித்துக் கொள்ளவும் விரு

ம்புகிறீர்களா? (துண்டிக்கும்) அவர்களை அல்லாஹ் சபித்துவிட்டான். அவர்களைச் செவிடாக்கிவிட்டான். அவர்களின் பார்வைகளைக் குருடாக்கி விட்டான். (47: 22-23) அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூற்கள்: புகாரீ, முஸ்லிம்
உறவு என்பது, அர்ஷைப் பிடித்துக்கொண்டு, என்னை இணைத்து வாழ்பவரை அல்லாஹ் இணைத்துக்கொள்வான். என்னைப் பிரித்துவிடுபவரை அல்லாஹ்வும் பிரித்துவிடுவான் என்று கூறும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: அன்னை ஆயிஷா (ரலி), நூற்கள்: புகாரீ, முஸ்லிம்
பிரதி உபகாரம் (உதவிக்கு உதவி) என வாழ்பவர், உறவை இணைத்து வாழ்பவர் அல்லர். எனினும் தன் உறவினர் தம்மைத் துண்டித்தாலும், இணைத்து வாழ்பவரே உறவை இணைத்து வாழ்பவர் ஆவார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் இப்னு அம்ரு இப்னு ஆஸ் (ரலி), நூல்: புகாரீ
நபி (ஸல்) அவர்களிடம், இறைத்தூதர் அவர்களே! சொர்க்கத்தில் என்னை நுழையச் செய்கின்ற, நரகத்திலிருந்து என்னைத் தூரமாக்கிவிடுகின்ற ஒரு செயலை என்னிடம் கூறுங்கள் என்று ஒருவர் கேட்டார். நீர் அல்லாஹ்வை வணங்குவீர்; எதையும் அவனுக்கு இணையாக்காதீர்; தொழுகையைப் பேணுவீர்; ஸகாத்தைக் கொடுப்பீர்; உறவினரை இணைத்து வாழ்வீர் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: காலித் இப்னு ஸைத் அல்அன்ஸாரீ (ரலி), நூற்கள்: புகாரீ, முஸ்லிம்
உங்களுள் ஒருவர் நோன்பு துறந்தால், ஒரு பேரீத்தம் பழத்தால் நோன்பைத் துறக்கட்டும். அதுவே அபிவிருத்தி தரும். ஒரு பேரீத்தம் பழம் இல்லையென்றால், தண்ணீர் (மூலம் நோன்பு துறக்கட்டும்); அதுவே சுகாதாரமாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறிவிட்டு, ஏழைக்குத் தர்மம் தருவது, ஒரு தர்ம(க் கூலி)தான். உறவினருக்குத் தர்மம் வழங்குவது இரண்டு (கூலி)களாகும். ஒன்று தர்மம்; மற்றொன்று உறவை இணைத்து வாழ்தல் என்றும் கூறினார்கள். அறிவிப்பாளர்: சல்மான் இப்னு ஆமிர் (ரலி), நூல்: திர்மிதீ

தொழுகை நேரங்கள்

தொழுகையாளிகள் நமது பள்ளிவாசலுக்கு தினமும் பஜ்ர் தொழுகைக்கு அதிகமானோர் வருகின்றனர். இரன்டு வரிசை குறையாமல் மக்கள் வருகின்றனர். வாரந்தோ...