12/31/2013

மலேசியாவில் உள்ள அழகிய பள்ளிவாசல்


அழகிய பள்ளிவாசல்கள்





 செனகலில் உள்ள பள்ளிவாசல்

சிந்திக்க ஒரு நபிமொழி

நபி صلى الله عليه وسلم அவர்கள்
 இந்த சமுதாயத்தின் வழிகேட்டைப்பற்றி இவ்வாறு கூறுகின்றார்கள்.
“நீங்கள் உங்கள் முன்னோர்களின் வழிமுறைகளை
 ஜானுக்கு ஜான் முழத்திற்கு முழம் பின்பற்றுவீர்கள்.
 எதுவரை என்றால் அவர்கள் உடும்பின் பொந்துக்குள் நுழைந்தால்
 நீங்களும் அதனுள் நுழைவீர்கள்” என்று.அதற்கு நாங்கள் (நபித்தோழர்கள்)
 “அவர்கள் யகூதி, நஸரானிகளா? என்று கேட்டதற்கு,
 வேறு யார் என்று பதிலளித்தார்கள். அறிவிப்பாளர்: அபூஸயீதுல் குத்ரீ(ரலி) நூல்: முஸ்லிம்-இல்ம், புகாரி-இஃதிஸாம்.

நபிமொழிகள் தொழுகை 6

 ஒரு மனிதர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து,
 " ஆட்டிறைச்சியை உண்பதால்
 உளூச் செய்ய வேண்டுமா?" என்று கேட்டார்.
 அதற்கு நபி(ஸல்) அவர்கள்
  நீ விரும்பினால் உளூச் செய்து கொள்!
விரும்பினால் உளூச் செய்யாமல் இருந்து கொள்!!
 என்று கூறினார்கள்.
ஒட்டகத்தின் இறைச்சியை உண்பதால் நாங்கள் உளூச் செய்ய வேண்டுமா?
 என்று அவர் கேட்டார். அதற்கு நபி(ஸல்) அவர்கள் ஆம் ஒட்டக இறைச்சியைச் சாப்பிட்டால்
 உளூச் செய் என்று நபி(ஸல்) விடையளித்தார்கள்.
 
 அறிவிப்பவர் : ஜாபிர் பின் ஸமுரா(ரலி)
 நூல் : முஸ்லிம் 588

12/24/2013

நபிமொழிகள் தொழுகை 5

 குளிர் தாங்க முடியாத போது தயம்மும் செய்தல்

 தாதுஸ்ஸலாஸில் எனும் இடத்தில் நடந்த போரில்
 குளிராக இருந்த ஒரு இரவில் எனக்குத் தூக்கத்தில் விந்து
 வெளியானது. நான் குளித்தால் நாசமாகி விடுவேன் என்று அஞ்சினேன்.
 எனவே, தயம்மும் செய்து என் சகாக்களுக்கு சுப்H தொழுவித்தேன்.
 இதை நபி(ஸல்) அவர்களிடம் (பின்னர்) தெரிவித்தேன்.
 அம்ரே! உமக்கு குளிப்பு கடமையாக இருந்த போது உமது சகாக்களுக்குத்
 தொழுவித்தீரா? என்று நபி(ஸல்) கேட்டனர்.
 குளிப்பதற்கு தடையாக இருந்த காரணத்தை அவர்களிடம் கூறினேன்.

 உங்களை நீங்களே  மாய்த்துக்கொள்ளாதீர்கள். அல்லாH உங்கள் மீது
 இரக்கம் உள்ளவனாக இருக்கிறான் என்று அல்லாH கூறுவதை நான்
 செவியுற்றுள்ளேன் (4:29) என்று விளக்கினேன். இதைக்கேட்ட
 நபி(ஸல்) அவர்கள் சிரித்தார்கள். வேறு எதையும் கூறவில்லை.
 அறிவிப்பவர் ; அம்ரு பின் அல் ஆஸ் (ரலி)
 நூல்கள் : அபூதாவூத் 283 , அகமத் 17144.

12/18/2013

தொழுகை நபிமொழிகள் 4

இரண்டு ரக் அத்கள் தொழுதல்

 எனது உளூவைப் போல் யார் உளூச் செய்து
 வேறு எண்ணத்திற்கு இடமளிக்காமல்
 இரண்டு ரக் அத்துக்கள் தொழுகின்றாரோ அவரது முன் பாவங்கள்
 மன்னிக்கப்படும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

 அறிவிப்பவர்; உஸ்மான் (ரலி)
 நூல்: புகாரி 160

இறைவனின் அருட்கொடைகள்


விளிஞ்ஞம் பள்ளிவாசல்

 திருவனந்தபுரம் அருகே உள்ள
 விளிஞ்ஞம் பள்ளிவாசல்

12/11/2013

நபிமொழிகள் தொழுகை 3

 "கடமையான குளிப்பை நிறைவேற்றும் போது
 நானும், நபி(ஸல்) அவர்களும் ஒரு பாத்திரத்தில்
 ஒன்றாகக் குளித்திருக்கின்றோம்" என்று ஆய்ஷா (ரலி)
 அறிவிக்கின்றார்கள்.

 நூல்: புகாரி (263)


12/04/2013

நபி மொழிகள் தொழுகை 2

 கடல் நீரில் உளூச் செய்யலாமா?

 நபி(ஸல்) அவர்களிடம் கடல் நீர் பற்றி கேட்கப்பட்டது.
 அதற்கு அவர்கள் "அதன் தண்ணீர் தூய்மையானது;
 அதில் செத்தவையும் உண்ண அனுமதிக்கப்பட்டவை"
 என்று பதிலளித்தார்கள்.
 அறிவிப்பவர் : ஜாபிர்(ரலி)
 நூல் : இப்னுமாஜா 382

தொழுகை நேரங்கள்

தொழுகையாளிகள் நமது பள்ளிவாசலுக்கு தினமும் பஜ்ர் தொழுகைக்கு அதிகமானோர் வருகின்றனர். இரன்டு வரிசை குறையாமல் மக்கள் வருகின்றனர். வாரந்தோ...