ஏகத்துவ பிரச்சாரம் துவங்கிய காலத்தில்
அங்கே இங்கே என ஒரு சிலர் இருந்தார்கள்.
அதாவது நாம் சொல்வது 1990க்கும் முன்னர்,
நம்மிடம் அந்த அளவுக்கு பொருளாதாரம் இல்லாத காலம்,
5க்கும் 10க்கும் பலரிடம் தேவைக்கு சென்ற காலம்,
ஒட்டு மொத்த தமிழகத்திலேயே அன்று சொன்னால்,
இந்த ஏகத்துவ கொள்கையிலே 500 பேர் கூட இருக்க மாட்டார்கள்.
அந்த மாதிரி காலத்தில் ஏகத்துவத்தில் வளந்தவர்களை
சொல்ல வேண்டுமானால் புத்தகம் படித்து வந்தவர்கள் எனலாம்.
அதில் அன்று 1985வாக்கில் ஏகத்துவ பணிக்காக பாடுபட்ட
ஒரு சகோதரர் நமது அருகே உள்ள ஊரான திருப்பந்துருத்தியைச் சேர்ந்த
'அப்துஸ் ஸ்லாம் மஸ்தூக்கா'
அன்றைய காலத்தில் அனைவருடன் ஒன்றி பணியாற்றியவர்.
புரட்சி மின்னல் புத்தகம் வெளிவர முக்கிய பங்காற்றியவர்.
அல்லாஹ் இரு உலகிலும் இவருக்கு நற்பாக்கியம் தர துவா செய்வோமாக!
இந்த சகோதரரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது அல்ஹம்துலில்லாஹ்.
சில மணி நேரங்கள் உரையாடினோம்.
அன்றைய அழைப்பு பணி பற்றியும் பேசினோம்.
சந்திக்க வேண்டிய மணிதர்.
பதவியோ புகழோ எதிர்பார்க்கவில்லை.
இன்று வளைகுடா நாடுகளில் வாழ்ந்து வருகிறார்.
எல்லா புகழும் இறைவனுக்கே!
இவர் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பை நமது இனையத்தில்
எழுத அனுமதி வழங்கினார்.
கண்மூடி பழக்கங்கள் மண்மூடி போகட்டும்
இன்ஷால்லாஹ் எழுதுவோம்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
தொழுகை நேரங்கள்
தொழுகையாளிகள் நமது பள்ளிவாசலுக்கு தினமும் பஜ்ர் தொழுகைக்கு அதிகமானோர் வருகின்றனர். இரன்டு வரிசை குறையாமல் மக்கள் வருகின்றனர். வாரந்தோ...
-
இறைவனுடைய ஆலயத்தை தொழுகையால் அலங்கரிக்க மக்கள் துவங்கி விட்டார்கள். சில தினங்களாக தொழுகைக்காக பள்ளியை நோக்கி வர துவங்கிவிட்டார்கள். இன்று...
-
புனித ரமலான் மாதம் இறையருளால் செல்கிறது. தினந்தோறும் பஜ்ர் தொழுகைக்குப்பின் சிறிது நேரம் குர் ஆன் விரிவுரை வகுப்புகள் நடைபெறுகிறது. தினமு...
-
நோன்பு நோற்க தடை செய்யப்பட்ட நாட்கள் - நயீமா பர்வீன் அல்லாஹ்விடம் விருப்பமான அமல்களில் ஒன்று நோன்பு. நமக்கு நன்மையான காரியங்கள் நடக்கும...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக