ஒருவனுடைய பண்புகளை அவனுடைய நடை, உடை, பாவனைகள் படம் பிடித்துக் காட்டுவதைப் போல் பல நேரங்களில் அவனது பேச்சுக்களும் படம் பிடித்துக் காட்டுகின்றன. அவனை நல்லவனாகவும் கொடியவனாகவும் மென்மையானவனாகவும் கடுமை காட்டுபவனாகவும் பிரதிபலிக்கச் செய்யும் சக்தி அவன் பேசும் பேச்சுக்கு உண்டு.
சில வேளைகளில் நாம் விளையாட்டாக சில வார்த்தைகளைக் கூறி விடுகிறோம். நாம் கூறிய பொருளை உண்மையில் நம் உள்ளத்தில் மனப்பூர்வமாக ஒத்துக் கொள்ளாமல் கேலிக்காக கூறிய போதிலும் கேட்பவர் அதை விபரீதமாக விளங்கிக் கொள்கிறார்.
நாம் நல்லவராக இருந்தாலும் நம்முடைய பேச்சு நம்மைத் தீயவனாக சித்தரித்து விடுகிறது. வார்த்தையை விட்டவர் ‘நான் ஒரு பேச்சிற்காகத் தான் சொன்னேன்’ என்று எவ்வளவு சமாளிப்புகளைக் கூறினாலும் மனதில் பதிந்த காயம் மறையாத வடுவாகப் பதிந்து விடுகிறது.
விளையாட்டு வார்த்தைகள் பல விபரீதங்களை விதைத்து விடுகின்றன. கடுமையான வார்த்தைகள் கலகத்தை உண்டு பண்ணுகின்றன. கனிவான வார்த்தைகள் கல் நெஞ்சம் கொண்டோரையும் கனிய வைத்து விடுகிறது. இது போன்று ஏராளமான இன்பங்களும் துன்பங்களும் நம் பேச்சின் பயனாக வந்தமைகின்றன.
மேற்கண்ட விஷயங்கள் அனைத்தையும் அன்றாட வாழ்வில் நாம் கண்கூடாகக் கண்டு வருகிறோம். அல்லாஹ்வை நம்பியவன், நம்பாதவன் ஆகிய இருவரும் முறையான பேச்சின் அவசியத்தை உணர்ந்து கொள்வதற்கு இந்நிகழ்வுகளே போதுமானதாகும்.
ஆனால் மனிதன் தனக்கு வழங்கப்பட்ட அறிவை முறைகேடாகப் பயன்படுத்துவான் என்பதால், ஆன்மீக ரீதியில் இஸ்லாம் அவனுக்கு இதை உணர்த்துகின்றது. அழகிய பேச்சுகளை மட்டுமே பேசும் படி இஸ்லாம் வலியுறுத்துகின்றது. பயனில்லாத பேச்சுக்களப் பேச வேண்டாம் என்று தடை விதிக்கின்றது.
நல்ல வார்த்தைகளை நவில வேண்டும்
நல்ல வார்த்தைகளால் பல நன்மைகள் நிகழும். மனம் ஒடிந்தவரிடம் ஆறுதலான வார்த்தைகளைக் கூறுவது அவருடைய காயத்திற்குக் களிம்பு தடவியதைப் போன்று இருக்கும். வேலையில் ஈடுபட்டு பரபரப்புடன் வருபவர்களிடம் கூறப்படும் நல்ல வார்த்தை அவர்களை சீரான நிலைக்குக் கொண்டு வரும். தவறு செய்தவர்களிடம் நல்ல வார்த்தைகளைக் கூறினால் அவர்கள் புனிதர்களாக மாறுவதற்கு வாய்ப்பாக அமையும்.
இது போன்ற ஏராளமான நன்மைகளை, நல்ல வார்த்தைகளின் மூலம் சமுதாயம் அடைகின்றது. இதனால் இஸ்லாம் நல்ல பேச்சுக்களைப் பேசும் படி ஆர்வமூட்டுகிறது. நற்காரியங்கள் அல்லாஹ்விடம் செல்வதைப் போல் நல்ல வார்த்தைகளும் அவனிடம் செல்கின்றன.
நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்! நேர்மையான சொல்லையே கூறுங்கள்! அல்குர்ஆன் (33:70)
யாரேனும் கண்ணியத்தை நாடினால் கண்ணியம் யாவும் அல்லாஹ்வுக்கே உரியது. தூய சொற்கள் அவனிடமே மேலேறிச் செல்லும். நல்லறம் அதை உயர்த்தும். தீய காரியங்களில் சூழ்ச்சி செய்வோருக்குக் கடுமையான வேதனை உண்டு. அவர்களின் சூழ்ச்சி தான் அழியும். அல்குர்ஆன் (35:10)
ஒருவன் தன்னுடைய செல்வத்தை தர்மம் செய்வதற்கு நிகரானது அவன் பேசுகின்ற நல்ல வார்த்தைகள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மக்கள் தமது மூட்டுக்கள் ஒவ்வொன்றுக்காகவும் சூரியன் உதிக்கின்ற ஒவ்வொரு நாளிலும் தர்மம் செய்வது அவர்களின் மீது கடமையாகும். இருவருக்கிடையே நீதி செலுத்துவதும் தர்மமாகும். ஒருவர் தன் வாகனத்தின் மீது ஏறி அமர (அவருக்கு) உதுவுவதும் தர்மமாகும். அல்லது அவரது பயணச் சுமைகளை அதில் ஏற்றி விடுவதும் தர்மமாகும். நல்ல (இனிய) சொல்லும் தர்மமாகும். ஒருவர் தொழுகைக்குச் செல்ல எடுத்து வைக்கும் ஒவ்வோர் அடியும் தர்மமாகும். தீங்கு தரும் பொருளைப் பாதையிலிருந்து அகற்றுவதும் ஒரு தர்மமேயாகும். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி (2989)
நம்முடைய முக்கிய குறிக்கோளாக இருக்கின்ற சொர்க்கத்தை நாம் அடைவதற்குரிய வழிகளில் ஒன்று நல்ல பேச்சுக்களைப் பேசுவதாகும். ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் சொர்க்கம் செல்வதற்கான வழியைக் காட்டும்படி கேட்ட போது, அழகிய முறையில் பேசும்படி அவருக்குக் கட்டளையிட்டார்கள்.
நான் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ”அல்லாஹ்வின் தூதரே! உங்களை நான் கண்டால் எனது உள்ளம் மகிழ்சியடைகிறது. எனது கண் குளிர்ச்சியடைகிறது. எனக்கு அனைத்து பொருட்களைப் பற்றியும் சொல்லுங்கள்” என்றேன். அதற்கு அவர்கள் ”அனைத்தும் நீரிலிருந்து படைக்கப்பட்டுள்ளது” என்று கூறினார்கள். ”எந்த காரியத்தை நான் செய்தால் சொர்க்கத்திற்குச் செல்வேனோ அப்படிப்பட்ட ஒரு காரியத்தை எனக்கு கற்றுக் கொடுங்கள்” என்று கூறினேன். ”சலாத்தைப் பரப்பு. நல்ல பேச்சைப் பேசு. உறவுகளை இணைத்து வாழ். மக்கள் உறங்கும் போது இரவில் நின்று வணங்கு. சாந்தியுடன் சொர்க்கத்தில் நுழைவாய்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: அஹ்மத் (9996)
நல்ல பேச்சுக்கள் சொர்க்கத்தை மாத்திரம் பெற்றுத் தராது. கடும் வேதனையான நரக நெருப்பிலிருந்து காக்கும் கேடயமாகவும் பயன்படும். நல்ல பேச்சுக்களைப் பேசியாவது நரகத்தை விட்டும் உங்களை காத்துக் கொள்ளுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பேரீச்சம் பழத்தின் ஒரு துண்டைத் தர்மம் செய்தேனும் நரகத்திலிருந்து உங்களைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள். அதுவும் இல்லையானால் இனிய சொல்லைக் கொண்டாவது (காப்பாற்றிக் கொள்ளுங்கள்).
அறிவிப்பவர்: அதீ பின் ஹாத்திம் (ரலி), நூல்: புகாரி (6023)
இஸ்லாம் சகுனம் பார்ப்பதைத் தடை செய்கிறது. மனிதன் துற்சகுனம் பார்ப்பதால் அவனுடைய அடுத்தக்கட்ட காரியங்களைச் செயல்படுத்தாமல் தள்ளிப் போடுகிறான். அவனுடைய முன்னேற்றத்திற்கு சகுனம் பார்த்தல் முட்டுக்கட்டையாக அமைகிறது. ஆனால் ஒரு நல்ல காரியத்திற்காகச் செல்லும் போது நல்ல வார்த்தையைச் செவியுற்றால் அந்தக் காரியத்தை பின் தள்ளாமல் பூரணப்படுத்துவதற்கு இந்த நல்ல வார்த்தைகள் தூண்டுகோலாக அமைகிறன. மனிதனின் முன்னேற்றத்திற்கு அவனது ஆசையை அதிகப்படுத்தக் கூடியதாக நல்ல வார்த்தைகள் இருப்பதால் இஸ்லாம் இதை மாத்திரம் அனுமதிக்கிறது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ”பறவை சகுனம் என்பது கிடையாது. சகுனங்களில் சிறந்தது நற்குறியே ஆகும்” என்று சொன்னார்கள். மக்கள், ”நற்குறி என்பதென்ன?” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், ”அது நீங்கள் செவியுறும் நல்ல (இனிய) சொல்லாகும்” என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)., நூல்: புகாரி (5754)
தீய பேச்சுக்களைப் பொதுவாக எங்கும் பேசக்கூடாது. குறிப்பாக மக்கள் நடமாடும் இடங்களில் மோசமான வார்த்தைகளைப் பயன்படுத்துவது மிக மோசமான செயலாகும். ஆனால் இந்த ஒழுக்கத்திற்கு மாற்றமாக பொது வீதிகளில் சண்டைத் தகராறுகள் ஏற்படும் போது கேட்பதற்குக் காது கூசுகின்ற அளவிற்குப் பயங்கரமான வார்த்தைகள் வீசி எறியப்படுகின்றன.
சந்தோஷத்திற்காக தெருக்களில் கூடியிருக்கும் இளைஞர்களிடத்திலும் இது போன்ற வார்த்தைப் பிரயோகங்கள் உண்டு. இதனால் பாதிக்கப்படுவது பொது மக்கள் தான். இதைக் கருத்தில் கொண்டு தெருக்களில் அமர்ந்திருப்போர் நல்லதையே பேச வேண்டும். இல்லாவிட்டால் அமரக்கூடாது என்று இஸ்லாம் கட்டளையிடுகிறது.
நாங்கள் வீட்டின் முற்றத்தில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம் வந்து, ”பாதையில் அமைந்துள்ள இடங்களில் என்ன செய்கிறீர்கள்? பாதையோரங்களில் அமைந்துள்ள இடங்களில் (அமர்வதை விட்டும்) தவிர்ந்து கொள்ளுங்கள்” என்று கூறினார்கள். ”தவறு செய்வதற்காக நாங்கள் உட்காரவில்லை. பேசிக் கொண்டும் கருத்துக்களைத் தெரிவித்துக் கொண்டும் அமர்ந்துள்ளோம்” என்று கூறினோம். அதற்கு அவர்கள், ”அப்படியானால் அதற்குரிய உரிமையைக் கொடுத்து விடுங்கள். பார்வையைத் தாழ்த்துவதும் சலாமிற்குப் பதிலுரைப்பதும் அழகிய முறையில் பேசுவதும் (அதற்குரிய உரிமையாகும்)” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூதல்ஹா (ரலி), நூல்: முஸ்லிம் (4020)
இஸ்லாம் காட்டும் பேச்சின் ஒழுங்கு முறைகளை கடைபிடித்து இம்மை மறுமை நன்மைகளை பெறுவோமாக!……………………….
5/02/2011
4/22/2011
கோடைகால சிறப்பு பயிற்சி முகாம்
பிஸ்மில்லாஹ்.....
இஸ்லாமிய மாணவ, மாணவிகளுக்கு
கோடைகால சிறப்பு பயிற்சி முகாம்
இன்ஷால்லாஹ் 25.04.2011 முதல் 15.05.2011 வரை
இஸ்லாமிய மார்க்க விளக்க வகுப்புகள் நடைபெறும்.
மாணவர்களுக்கு : காலை 10.00 மணிமுதல் 12.30 மணி வரை
மாணவிகளுக்கு : மாலை 4.00 மணிமுதல் 6.00 மணி வரை
தகுதி : பத்து வயதிற்கு மேற்பட்டவர்கள் மட்டும்.
பயிற்சிக்கட்டணம் : ரூபாய் 100.00 மட்டும்.
பயிற்சியின் முடிவில் தேர்ச்சி பெறும் மாணவ, மாணவிகளுக்கு
சான்றிதழும் பரிசுப்பொருட்களும் வழங்கப்படும்.

நடைபெறும் பாடங்கள்
1) குர் ஆன் விளக்க வகுப்புகள்
2) ஹதீஸ் விளக்க வகுப்புகள்
3) இஸ்லாமிய கொள்கை விளக்கம்
4) அன்றாட துஆக்கள் மனனம்.
5) சூராக்கள் மனனம்.
6) நபி( ஸல்) அவர்கள் வாழ்க்கை வரலாறு
7) தொழுகைப்பயிற்சி
சேர்க்கை ;
23.04.2011 & 24.04.2011 இரன்டு நாட்கள் மட்டும்
அர் ரஹ்மான் மழலையர் & தொடக்கப்பள்ளியில்
காலை 10.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை நடைபெறும்.
மேலதிக தொடர்புகளுக்கு :
98658 51693
90952 49489
90033 85399
இஸ்லாமிய மாணவ, மாணவிகளுக்கு
கோடைகால சிறப்பு பயிற்சி முகாம்
இன்ஷால்லாஹ் 25.04.2011 முதல் 15.05.2011 வரை
இஸ்லாமிய மார்க்க விளக்க வகுப்புகள் நடைபெறும்.
மாணவர்களுக்கு : காலை 10.00 மணிமுதல் 12.30 மணி வரை
மாணவிகளுக்கு : மாலை 4.00 மணிமுதல் 6.00 மணி வரை
தகுதி : பத்து வயதிற்கு மேற்பட்டவர்கள் மட்டும்.
பயிற்சிக்கட்டணம் : ரூபாய் 100.00 மட்டும்.
பயிற்சியின் முடிவில் தேர்ச்சி பெறும் மாணவ, மாணவிகளுக்கு
சான்றிதழும் பரிசுப்பொருட்களும் வழங்கப்படும்.

நடைபெறும் பாடங்கள்
1) குர் ஆன் விளக்க வகுப்புகள்
2) ஹதீஸ் விளக்க வகுப்புகள்
3) இஸ்லாமிய கொள்கை விளக்கம்
4) அன்றாட துஆக்கள் மனனம்.
5) சூராக்கள் மனனம்.
6) நபி( ஸல்) அவர்கள் வாழ்க்கை வரலாறு
7) தொழுகைப்பயிற்சி
சேர்க்கை ;
23.04.2011 & 24.04.2011 இரன்டு நாட்கள் மட்டும்
அர் ரஹ்மான் மழலையர் & தொடக்கப்பள்ளியில்
காலை 10.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை நடைபெறும்.
மேலதிக தொடர்புகளுக்கு :
98658 51693
90952 49489
90033 85399
4/18/2011
ஜும்மா பிரசங்கம்
சென்ற வெள்ளி ஜும்மா உரை
நன்றாக இருந்தது. இந்த உரையில்
நமது ஆடைகள் குறித்து உரையாற்றினார்.
இதற்கு குர் ஆனின் 7:26 வசனத்தை மேற்கோள் காட்டி
உரையை துவங்கினார்.
இந்த சொற்பொழிவில்
மறுமை நாளில் அல்லாஹ் மூன்று மனிதர்களிடம் இரக்கம் காட்டமாட்டான்
அந்த மூவரில் ஒருவர் தனது கனுக்காலுக்கு கீழ் பெருமையாக ஆடை அணிந்த அந்த
மனிதன் என்ற அந்த பெருமானாரின் பொன்மொழியை ஞாபக படுத்தினார்.
அதே போல ஒரு காலம் வரும் அந்த காலத்தில் பெண்கள் ஆடையனிந்தும் நிர்வானமாக இருப்பார்கள்
என்ற பொன்மொழியையும் நினைவூட்டினார். காரனம் இன்றைய
உலகில் நாகரீக மோகம் கொண்டு
மேற்கத்திய நாடுகளின் கலாச்சாரம்
நமது பெண்களின் உடைகளிலும் இருக்கிறது என்றால் மிகையல்ல.
இது இல்லாமல் மானத்தை மறைக்கக்கூடிய பர்தாவும்
மெல்லிய ஆடையாக இருக்கிறது... சுப்ஹானல்லாஹ்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
'எனது உம்மத்தில் பிந்திய காலத்தில் சில பெண்கள் தோன்றுவார்கள். அவர்கள் ஆடை அணிந்த நிர்வாணிகளாக இருப்பார்கள். அவர்களின் தலைகளின் மேல் ஒட்டகங்களின் திமில் போன்றவை (தலைமுடி வைக்கப்பட்டு) இருக்கும். அவர்களைச் சபியுங்கள்.
அதே போல இன்று பல பெண்கள் ஆண்களின் ஆடைகளை
அணிகின்றனர். இதையும் அண்ணலார்(ஸல்)கண்டித்துள்ளார்கள்.
'ஆண்களைப் போன்று ஆடை அணியும் பெண்களும், பெண்களைப் போன்று ஆடை அணியும் ஆண்களும் எங்களைச் சேர்ந்தவர்கள் அல்ல.' (அஹ்மத், நஸாஈ, ஹாகிம்)
இன்ஷால்லாஹ் இனிவரும் காலங்கள் இது போன்ற
நல்ல அமல்களை நமது வாழ்வில் பேணி,
இரு உலகிலும் வெற்றி பெற அல்லாஹ்விடம் இருகரம் ஏந்தியவர்களாக!
நன்றாக இருந்தது. இந்த உரையில்
நமது ஆடைகள் குறித்து உரையாற்றினார்.
இதற்கு குர் ஆனின் 7:26 வசனத்தை மேற்கோள் காட்டி
உரையை துவங்கினார்.
இந்த சொற்பொழிவில்
மறுமை நாளில் அல்லாஹ் மூன்று மனிதர்களிடம் இரக்கம் காட்டமாட்டான்
அந்த மூவரில் ஒருவர் தனது கனுக்காலுக்கு கீழ் பெருமையாக ஆடை அணிந்த அந்த
மனிதன் என்ற அந்த பெருமானாரின் பொன்மொழியை ஞாபக படுத்தினார்.
அதே போல ஒரு காலம் வரும் அந்த காலத்தில் பெண்கள் ஆடையனிந்தும் நிர்வானமாக இருப்பார்கள்
என்ற பொன்மொழியையும் நினைவூட்டினார். காரனம் இன்றைய
உலகில் நாகரீக மோகம் கொண்டு
மேற்கத்திய நாடுகளின் கலாச்சாரம்
நமது பெண்களின் உடைகளிலும் இருக்கிறது என்றால் மிகையல்ல.
இது இல்லாமல் மானத்தை மறைக்கக்கூடிய பர்தாவும்
மெல்லிய ஆடையாக இருக்கிறது... சுப்ஹானல்லாஹ்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
'எனது உம்மத்தில் பிந்திய காலத்தில் சில பெண்கள் தோன்றுவார்கள். அவர்கள் ஆடை அணிந்த நிர்வாணிகளாக இருப்பார்கள். அவர்களின் தலைகளின் மேல் ஒட்டகங்களின் திமில் போன்றவை (தலைமுடி வைக்கப்பட்டு) இருக்கும். அவர்களைச் சபியுங்கள்.
அதே போல இன்று பல பெண்கள் ஆண்களின் ஆடைகளை
அணிகின்றனர். இதையும் அண்ணலார்(ஸல்)கண்டித்துள்ளார்கள்.
'ஆண்களைப் போன்று ஆடை அணியும் பெண்களும், பெண்களைப் போன்று ஆடை அணியும் ஆண்களும் எங்களைச் சேர்ந்தவர்கள் அல்ல.' (அஹ்மத், நஸாஈ, ஹாகிம்)
இன்ஷால்லாஹ் இனிவரும் காலங்கள் இது போன்ற
நல்ல அமல்களை நமது வாழ்வில் பேணி,
இரு உலகிலும் வெற்றி பெற அல்லாஹ்விடம் இருகரம் ஏந்தியவர்களாக!
4/10/2011
அர் ரஹ்மான் செய்திகள்
நமது பள்ளியில் ஆண்டுத்தேர்வு நடைபெற்று வருகிறது.
இந்த தேர்வுகள் நாளையுடன் நிறைவு பெறுகிறது.
12ம் தேதி முதல் இன்ஷால்லாஹ் கோடை விடுமுறை
தொடங்குகிறது. இன்ஷால்லாஹ் மீன்டும் பள்ளி திறப்பு
ஜுன் மாதம் முதல் தேதி ஆகும்.
20/04/2011 முதல் LKG -
நான்காம் வகுப்பு வரை சேர்க்கை நடைபெறும்.
அலுவலக நேரம் காலை 10.00 முதல் 2.00 மணி வரை.
தொடர்புகளுக்கு...90033 85399


இந்த தேர்வுகள் நாளையுடன் நிறைவு பெறுகிறது.
12ம் தேதி முதல் இன்ஷால்லாஹ் கோடை விடுமுறை
தொடங்குகிறது. இன்ஷால்லாஹ் மீன்டும் பள்ளி திறப்பு
ஜுன் மாதம் முதல் தேதி ஆகும்.
20/04/2011 முதல் LKG -
நான்காம் வகுப்பு வரை சேர்க்கை நடைபெறும்.
அலுவலக நேரம் காலை 10.00 முதல் 2.00 மணி வரை.
தொடர்புகளுக்கு...90033 85399


குத்பா உரை
இந்த வார குத்பா உரையை
நமது பள்ளி இமாம் அவர்கள் நிகழ்த்தினார்கள்.
இந்த உரையில் நாவைப்பேணுவது,
அது போல புறம்பேசுவது, அவதூறு
ஆகியவற்றைப்பற்றி மிகவும் எச்சரித்து நல்ல ஒரு
ஜும்மா உரையை கொடுத்தார்.
குறிப்பாக இன்றைய நவீன உலகில்
நமது பெண்கள் வாழ்க்கை நடைமுறையில் ஏற்பட்டுள்ள
மாற்றங்களினால் வீணான அவச்சொற்கள் , சந்தேகங்கள்
நமது ஊரில் மட்டுமல்லாது பரவலாக தமிழகம் முழுவதும்
நமது மக்கள் பேசுவது பார்க்கிறோம்.
இறைமறையும், நபிகளாரின் பொன்மொழிகளும்
இது போன்ற அவதூறுகளுக்கு
எவ்வளவு எச்சரித்துள்ளது என்பதை
இதுபோன்ற உரைகளில் கேட்க முடிந்தது.
சுப்ஹானல்லாஹ்.
அல்லாஹ் நம் எல்லோருடைய
நல்ல அமல்கள் அனைத்தையும் ஏற்று
இரு உலகிலும் வெற்றியை தருவானாக! ஆமின்.
நமது பள்ளி இமாம் அவர்கள் நிகழ்த்தினார்கள்.
இந்த உரையில் நாவைப்பேணுவது,
அது போல புறம்பேசுவது, அவதூறு
ஆகியவற்றைப்பற்றி மிகவும் எச்சரித்து நல்ல ஒரு
ஜும்மா உரையை கொடுத்தார்.
குறிப்பாக இன்றைய நவீன உலகில்
நமது பெண்கள் வாழ்க்கை நடைமுறையில் ஏற்பட்டுள்ள
மாற்றங்களினால் வீணான அவச்சொற்கள் , சந்தேகங்கள்
நமது ஊரில் மட்டுமல்லாது பரவலாக தமிழகம் முழுவதும்
நமது மக்கள் பேசுவது பார்க்கிறோம்.
இறைமறையும், நபிகளாரின் பொன்மொழிகளும்
இது போன்ற அவதூறுகளுக்கு
எவ்வளவு எச்சரித்துள்ளது என்பதை
இதுபோன்ற உரைகளில் கேட்க முடிந்தது.
சுப்ஹானல்லாஹ்.
அல்லாஹ் நம் எல்லோருடைய
நல்ல அமல்கள் அனைத்தையும் ஏற்று
இரு உலகிலும் வெற்றியை தருவானாக! ஆமின்.
4/04/2011
பெண்கள் பள்ளிக்குச் செல்வதை நபி(ஸல்) அனுமதித்தார்கள்
‘உங்கள் மனைவியர் பள்ளிவாசலுக்குச் செல்ல அனுமதி கேட்டால் அவர்களைத் தடுக்காதீர்கள்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்கள்: புகாரீ 5238, முஸ்லிம் 666
முஃமினான பெண்கள் தங்களின் ஆடைகளால் போர்த்திக் கொண்டு நபி (ஸல்) அவர்களுடன் ஃபஜ்ருத் தொழுகையில் பங்கெடுப்பவர்களாக இருந்தனர். தொழுகை முடிந்ததும் தங்களின் இல்லங்களுக்குத் திரும்புவார்கள். இருட்டின் காரணமாக அவர்களை ஒருவரும் அறிந்து கொள்ள முடியாது.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்கள்: புகாரீ 578, முஸ்லிம் 1021
‘நீண்ட நேரம் தொழுவிக்கும் எண்ணத்துடன் நான் தொழுகையைத் துவக்குகின்றேன். அப்போது குழந்தையின் அழுகுரலை நான் கேட்கிறேன். (எனக்குப் பின்னால் தொழுது கொண்டிருக்கும்) அந்தக் குழந்தையின் தாயாருக்குச் சிரமமளிக்கக் கூடாது என்பதால் தொழுகையைச் சுருக்கமாக முடித்து விடுகிறேன்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூகதாதா (ரலி)
நூல்: புகாரீ 707
காஃப் வல்குர்ஆனில் மஜீத்’ என்று துவங்கும் அத்தியாயத்தை நபி (ஸல்) அவர்களின் நாவிலிருந்து தான் மனனம் செய்தேன். அதை அவர்கள் ஒவ்வொரு ஜுமுஆவிலும் மிம்பரில் மக்களுக்குச் சொற்பொழிவு நிகழ்த்தும் போது ஓதுவார்கள்.
அறிவிப்பவர்: உம்மு ஹிஷாம் (ரலி)
நூல்: முஸ்லிம் 1442
உமர் (ரலி) அவர்களின் மனைவியரில் ஒருவர் ஸுப்ஹ் மற்றும் இஷாத் தொழுகைகளில் பள்ளியில் ஜமாஅத்தில் கலந்து கொள்வார். அவரிடம், ‘(உங்கள் கணவர்) உமர் (ரலி) ரோஷக்காரராகவும், இதை விரும்பாதவராகவும் இருப்பதைத் தெரிந்து கொண்டே நீங்கள் ஏன் (பள்ளிக்குச்) செல்கிறீர்கள்?’ என்று கேட்கப்பட்டது. அதற்கு அப்பெண்மணி, ‘அவர் என்னைத் தடுக்கக் முடியாது. ஏனெனில் பெண்கள் பள்ளிக்குச் செல்வதை நீங்கள் தடுக்காதீர்கள் என்ற நபி (ஸல்) அவர்களின் சொல் (என்னைத் தடுப்பதை விட்டும்) அவரைத் தடுத்து விடும்’ என்று கூறினார்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: புகாரீ 900
பெண்கள் பள்ளிக்கு வரலாம் என்றாலும் இரவில் பள்ளிக்கு வரும் போது நறுமணம் பூசக் கூடாது.
‘நறுமணம் பூசிக்கொண்ட பெண் நம்முடன் இஷாத் தொழுகையில் கலந்து கொள்ள வேண்டாம்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: முஸ்லிம் 675
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்கள்: புகாரீ 5238, முஸ்லிம் 666
முஃமினான பெண்கள் தங்களின் ஆடைகளால் போர்த்திக் கொண்டு நபி (ஸல்) அவர்களுடன் ஃபஜ்ருத் தொழுகையில் பங்கெடுப்பவர்களாக இருந்தனர். தொழுகை முடிந்ததும் தங்களின் இல்லங்களுக்குத் திரும்புவார்கள். இருட்டின் காரணமாக அவர்களை ஒருவரும் அறிந்து கொள்ள முடியாது.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்கள்: புகாரீ 578, முஸ்லிம் 1021
‘நீண்ட நேரம் தொழுவிக்கும் எண்ணத்துடன் நான் தொழுகையைத் துவக்குகின்றேன். அப்போது குழந்தையின் அழுகுரலை நான் கேட்கிறேன். (எனக்குப் பின்னால் தொழுது கொண்டிருக்கும்) அந்தக் குழந்தையின் தாயாருக்குச் சிரமமளிக்கக் கூடாது என்பதால் தொழுகையைச் சுருக்கமாக முடித்து விடுகிறேன்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூகதாதா (ரலி)
நூல்: புகாரீ 707
காஃப் வல்குர்ஆனில் மஜீத்’ என்று துவங்கும் அத்தியாயத்தை நபி (ஸல்) அவர்களின் நாவிலிருந்து தான் மனனம் செய்தேன். அதை அவர்கள் ஒவ்வொரு ஜுமுஆவிலும் மிம்பரில் மக்களுக்குச் சொற்பொழிவு நிகழ்த்தும் போது ஓதுவார்கள்.
அறிவிப்பவர்: உம்மு ஹிஷாம் (ரலி)
நூல்: முஸ்லிம் 1442
உமர் (ரலி) அவர்களின் மனைவியரில் ஒருவர் ஸுப்ஹ் மற்றும் இஷாத் தொழுகைகளில் பள்ளியில் ஜமாஅத்தில் கலந்து கொள்வார். அவரிடம், ‘(உங்கள் கணவர்) உமர் (ரலி) ரோஷக்காரராகவும், இதை விரும்பாதவராகவும் இருப்பதைத் தெரிந்து கொண்டே நீங்கள் ஏன் (பள்ளிக்குச்) செல்கிறீர்கள்?’ என்று கேட்கப்பட்டது. அதற்கு அப்பெண்மணி, ‘அவர் என்னைத் தடுக்கக் முடியாது. ஏனெனில் பெண்கள் பள்ளிக்குச் செல்வதை நீங்கள் தடுக்காதீர்கள் என்ற நபி (ஸல்) அவர்களின் சொல் (என்னைத் தடுப்பதை விட்டும்) அவரைத் தடுத்து விடும்’ என்று கூறினார்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: புகாரீ 900
பெண்கள் பள்ளிக்கு வரலாம் என்றாலும் இரவில் பள்ளிக்கு வரும் போது நறுமணம் பூசக் கூடாது.
‘நறுமணம் பூசிக்கொண்ட பெண் நம்முடன் இஷாத் தொழுகையில் கலந்து கொள்ள வேண்டாம்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: முஸ்லிம் 675
ஜப்பான் ஆழிப்பேரலைகள்

அவர்கள் இந்தக்குர் ஆனில்
என்ன இருக்கிறது என்று
ஆராய்ந்து பார்க்க வேண்டாமா?
அல்லது அவர்களின் இதயங்களின் மீது
பூட்டுக்களா போடப்பட்டிருக்கு?


இறைவேதத்தில் இதுபோல
ஏராளனமான அச்சமூட்டி எச்சரிக்கை செய்யும் வேதவரிகள் உள்ளது.
எல்லாம் வல்ல இறைவனுக்கு இனைவைப்பு என்ற காரியத்தை விட்டு,
அனைவரும் ஏக இறைவனாகிய அல்லாஹ் ஒருவனை மட்டும் வணங்குவோம்.

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ
قُلْ هُوَ اللَّـهُ أَحَدٌ ﴿١﴾ اللَّـهُ الصَّمَدُ ﴿٢﴾ لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ ﴿٣﴾ وَلَمْ يَكُن لَّهُ كُفُوًا أَحَدٌ
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
தொழுகை நேரங்கள்
தொழுகையாளிகள் நமது பள்ளிவாசலுக்கு தினமும் பஜ்ர் தொழுகைக்கு அதிகமானோர் வருகின்றனர். இரன்டு வரிசை குறையாமல் மக்கள் வருகின்றனர். வாரந்தோ...
-
அன்னை சுமையா பெண்கள் மதரஸா துவங்கி அல்லாஹ்வின் உதவியால் மிக சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதன் துவக்கமாக இப்போது மூன்று நேரங்களில் பெண்...
-
தினமும் லுஹர் தொழுகைக்குப்பின் பள்ளியில் நடைபெறுகிறது. அனைவரும் கலந்துக்கொண்டு பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
-
வெள்ளிக்கிழமை இன்றைய ஜும் ஆ உரையை நமது பள்ளியின் இமாம் மெளலவி நியாஸ் பிர்தெளஸி அவர்கள் நிகழ்த்தினார்கள். தலைப்பாக மன்னிப்பு ஓர் இறைவன...