11/29/2011

பள்ளியில் ஒலிக்கும் பாங்கோசை

அழைப்புப் பணியில்...

சில வருடங்களுக்கு முன்
நாம் வீடுகளில் அஸர் முதல் மஹ்ரிப் வரை
அல்லது மஹ்ரிப் முதல் இஷா வரை
மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடத்திக்கொண்டு இருந்தோம்.
இடையில் சில காலங்கள் நடத்தவில்லை.
மீண்டும் அழைப்புப்பணிகள்

சென்றவாரம் முதன் முதலாக சகோ பீர் முகம்மது இல்லத்தில்
சொற்பொழிவு நடத்தினோம்.

அதில் ஆண்களும் பெண்களும் கலந்துக்கொண்டனர்.
அது போல இந்த வாரமும் சூர்யதோட்டத்தில்
சகோ ராவுத்தர்ஷா வீட்டில் நடந்தது.
ஏராளனமான பெண்கள் கலந்துக்கொண்டு பயன்பெற்றனர்.
ஆண்களுக்கு தனி இட வசதி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
அல்ஹம்துலில்லாஹ்.

இந்த வார ஜும்மா மேடை

நமது பள்ளியில் இடையில் குத்பா உரைக்காக
யாராவது ஒருவரை அழைத்து உரையாற்றுவது வழக்கம்.
அது போல் சென்ற வார ஜும்மா உரையை
நமது வழக்கறிஞர் அஷ்ரப் அலி அவர்கள் ஆற்றினார்கள்.
முதலாவது குத்பா உரையில்
நமது சமுதாய ஒற்றுமையை வலியுறுத்தி பேசினார்கள்.

இரன்டாவது குத்பா உரையில்
சட்ட சம்பந்தமான சில கருத்துக்களை சொன்னார்கள்.

வழக்கம்போல பள்ளியில்
ஆண்கள் மற்றும் இல்லாமல்
ஏராளனமான பெண்களும் இருந்தனர்.
ஜும்மா உரை அனைவருக்கும் பயனுள்ளதாக இருந்தது.
இதன் வீடியோ பதிவு விரைவில்
பதிவேற்றம் செய்யப்படும்.

எல்லா புகழும் இறைவனுக்கே!

மின் மாற்றி



நமதூரில் அடிக்கடி மின் தடை ஏற்படுகிறது.
இது அன்றாடம் நமக்கு பழக்கமாகி விட்டது.
பள்ளியில் இது போல மின் தடை ஏற்படும் போது
அதனால் பல சிரமங்கள் ஏற்பட்டது.
அதற்காக சில தினங்கள் முன் மின் மாற்றியாக பேட்டரி வசதி பொருத்தப்பட்டுள்ளது.
இதற்காக பாடுபட்ட அனைவருக்கும் அல்லாஹ்
இரு உலகிலும் நற்பாக்கியங்கள் தருவானாக! ஆமின்.

11/24/2011

இறைவனின் அருட்கொடை


பெருமழைக்காலம்

விரைவில் வெளிவருகிறது

அன்பானவர்களே

நமது காலண்டர் வருடா வருடம்
ஆங்கில வருடத்தின் இறுதியில் வரும்
என்பது நாம் அனைவரும் அறிந்ததே
அதுபோல இந்த வருடத்தில் காலண்டர்
இன்ஷால்லாஹ் விரைவில் வர இருக்கிறது.
அதற்கான பணிகள் நடந்து வருகிறது.


அழகிய வடிவில் அமைக்கப்பட்டு
அதில் இஸ்லாமிய சிந்தனைகள்
ஆதாரப்பூர்வமாக தொகுக்கப்பட்டது சிறப்பம்சம்.

இன்ஷால்லாஹ் விரைவில் உங்கள் பார்வைக்கு....

அன்பான வாசகர்களே!

நமது வலைத்தளத்தில் மாதாமாதம்
நடைபெறும் மார்க்க வினா விடையில்
பரிசு பெற்றவர்களின் பரிசுகள்
அவர்கள் இல்லங்களில் சேர்க்கப்பட்டது.
எல்லா புகழும் இறைவனுக்கே!



சகோ அப்துல் ஸலாம் மஸ்தூக்கா அவர்கள்
நமது அருகாமை ஊரான திருப்பந்துருத்தியை சேர்ந்தவர்கள்
அவருக்கான பரிசு துரித தபால் சேவை மூலம் அனுப்பப்பட்டது.


வாசகர்கள் பதில் அனுப்பும்போது
மறவாமல் உங்கள் வீட்டு முகவரியையும்
சேர்த்து அனுப்பவும்.
வெளியூர் வாசகர்கள்
தொலைபேசி அல்லது அலைபேசி எண்ணையும் சேர்த்து அனுப்பவும்.

எல்லா புகழும் இறைவனுக்கே!

தொழுகை நேரங்கள்

தொழுகையாளிகள் நமது பள்ளிவாசலுக்கு தினமும் பஜ்ர் தொழுகைக்கு அதிகமானோர் வருகின்றனர். இரன்டு வரிசை குறையாமல் மக்கள் வருகின்றனர். வாரந்தோ...