நமது அர் ரஹ்மான் பள்ளி தொடங்கி இறையருளால் இனிதே செல்கிறது. அல்ஹம்துலில்லாஹ். இந்தியாவின் 63வது சுதந்திர தினத்தில் நமது பள்ளியும் சேர்ந்து கொண்டாடியது. காலை முதலே நமது பள்ளிக்கூடம் கலைக்கட்ட,
பள்ளி மாணவ- மாணவிகள் வர சரியாக காலை 8.30 மணிக்கு நமது அழைப்பை ஏற்று நமது பெரியார் நகர் கவுன்சிலர் வருகை தந்தார். அதன் பின் மாணவ செல்வங்களின் அணிவகுப்பு நடைபெற்றது. பின்னர் சிறப்பு விருந்தினர் கொடியேற்றினர்.
அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. இதில் ஒரு சில பெற்றோர்களும் அந்த பகுதி மக்களும் கலந்துக்கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக