இறையின் கிருபையால் நமது பள்ளி வளாகத்தில் இனிதே பெரு நாள் தொழுகை சிறப்பாக நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்..அல்ஹம்துலில்லாஹ்.. காலை சரியாக 7.15 மணிக்கு தொழுகை என அறிவித்து இருந்தோம். 6.45முதலே பெண்கள் வரத்துவங்கி விட்டனர்.. அதிலிருந்து பெண்களும் ஆண்களும் கொஞ்சம் கொஞ்சமாக வர..

சரியாக 7.18முதல் பெரு நாள் தொழுகை எப்படி தொழவேண்டும் என விளக்கி விட்டு பெரு நாள் தொழுகை நடைபெற்றது. தொழுகையின் போது நமது மைதானம் நிரம்பியது. காலையில் இருந்த பனிப்பொழிவையும் பாராமல் மக்கள் குளித்து, புத்தாடை அணிந்து, நறுமணத்துடன் அல்லாஹ்வை அதிகம் புகழ்ந்தவர்களாக வந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக