11/29/2011

பள்ளியில் ஒலிக்கும் பாங்கோசை

அழைப்புப் பணியில்...

சில வருடங்களுக்கு முன்
நாம் வீடுகளில் அஸர் முதல் மஹ்ரிப் வரை
அல்லது மஹ்ரிப் முதல் இஷா வரை
மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடத்திக்கொண்டு இருந்தோம்.
இடையில் சில காலங்கள் நடத்தவில்லை.
மீண்டும் அழைப்புப்பணிகள்

சென்றவாரம் முதன் முதலாக சகோ பீர் முகம்மது இல்லத்தில்
சொற்பொழிவு நடத்தினோம்.

அதில் ஆண்களும் பெண்களும் கலந்துக்கொண்டனர்.
அது போல இந்த வாரமும் சூர்யதோட்டத்தில்
சகோ ராவுத்தர்ஷா வீட்டில் நடந்தது.
ஏராளனமான பெண்கள் கலந்துக்கொண்டு பயன்பெற்றனர்.
ஆண்களுக்கு தனி இட வசதி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
அல்ஹம்துலில்லாஹ்.

இந்த வார ஜும்மா மேடை

நமது பள்ளியில் இடையில் குத்பா உரைக்காக
யாராவது ஒருவரை அழைத்து உரையாற்றுவது வழக்கம்.
அது போல் சென்ற வார ஜும்மா உரையை
நமது வழக்கறிஞர் அஷ்ரப் அலி அவர்கள் ஆற்றினார்கள்.
முதலாவது குத்பா உரையில்
நமது சமுதாய ஒற்றுமையை வலியுறுத்தி பேசினார்கள்.

இரன்டாவது குத்பா உரையில்
சட்ட சம்பந்தமான சில கருத்துக்களை சொன்னார்கள்.

வழக்கம்போல பள்ளியில்
ஆண்கள் மற்றும் இல்லாமல்
ஏராளனமான பெண்களும் இருந்தனர்.
ஜும்மா உரை அனைவருக்கும் பயனுள்ளதாக இருந்தது.
இதன் வீடியோ பதிவு விரைவில்
பதிவேற்றம் செய்யப்படும்.

எல்லா புகழும் இறைவனுக்கே!

மின் மாற்றி



நமதூரில் அடிக்கடி மின் தடை ஏற்படுகிறது.
இது அன்றாடம் நமக்கு பழக்கமாகி விட்டது.
பள்ளியில் இது போல மின் தடை ஏற்படும் போது
அதனால் பல சிரமங்கள் ஏற்பட்டது.
அதற்காக சில தினங்கள் முன் மின் மாற்றியாக பேட்டரி வசதி பொருத்தப்பட்டுள்ளது.
இதற்காக பாடுபட்ட அனைவருக்கும் அல்லாஹ்
இரு உலகிலும் நற்பாக்கியங்கள் தருவானாக! ஆமின்.

11/24/2011

இறைவனின் அருட்கொடை


பெருமழைக்காலம்

விரைவில் வெளிவருகிறது

அன்பானவர்களே

நமது காலண்டர் வருடா வருடம்
ஆங்கில வருடத்தின் இறுதியில் வரும்
என்பது நாம் அனைவரும் அறிந்ததே
அதுபோல இந்த வருடத்தில் காலண்டர்
இன்ஷால்லாஹ் விரைவில் வர இருக்கிறது.
அதற்கான பணிகள் நடந்து வருகிறது.


அழகிய வடிவில் அமைக்கப்பட்டு
அதில் இஸ்லாமிய சிந்தனைகள்
ஆதாரப்பூர்வமாக தொகுக்கப்பட்டது சிறப்பம்சம்.

இன்ஷால்லாஹ் விரைவில் உங்கள் பார்வைக்கு....

அன்பான வாசகர்களே!

நமது வலைத்தளத்தில் மாதாமாதம்
நடைபெறும் மார்க்க வினா விடையில்
பரிசு பெற்றவர்களின் பரிசுகள்
அவர்கள் இல்லங்களில் சேர்க்கப்பட்டது.
எல்லா புகழும் இறைவனுக்கே!



சகோ அப்துல் ஸலாம் மஸ்தூக்கா அவர்கள்
நமது அருகாமை ஊரான திருப்பந்துருத்தியை சேர்ந்தவர்கள்
அவருக்கான பரிசு துரித தபால் சேவை மூலம் அனுப்பப்பட்டது.


வாசகர்கள் பதில் அனுப்பும்போது
மறவாமல் உங்கள் வீட்டு முகவரியையும்
சேர்த்து அனுப்பவும்.
வெளியூர் வாசகர்கள்
தொலைபேசி அல்லது அலைபேசி எண்ணையும் சேர்த்து அனுப்பவும்.

எல்லா புகழும் இறைவனுக்கே!

11/21/2011

site map

அன்பான சகோதர சகோதரிகளே!


நமது வலைத்தளத்தில் வலது பக்கத்தில்
சில இனைப்புகள் உள்ளது. அதில் உள்ள சில முக்கிய
இனைப்புகளைப் பற்றி இங்கு அவசியம் சொல்ல வேண்டும்.
முதலாவதாக மொழி மாற்றம்

அதாவது நமது வலைத்தளம் முழுவதும் தமிழில் இருந்தாலும்
மொழி மாற்றம் பயன் படுத்தி அன்னிய மொழிகளில் படிக்கலாம்.
மேலும் தாங்கள் அலுவலகத்தில் சில வேற்று மொழி நண்பர்கள் இருப்பார்கள்.
அவர்களிடம் வலைத்தளம் அறிமுகப்படுத்தும்போது அவர்கள் தாய்மொழியில் வாசிக்கச்சொல்லும்போது
இன்னும் அதிகம் பயன்பெறுவார்கள். நாம் சொல்வது இறைச்செய்திகளை
இது எல்லா மக்களுக்கும் சென்றடையவேண்டும் என்பது நமது எண்ணம்.
எனவே மொழி மாற்றத்தை உபயோகப்படுத்துங்கள்.
Google Transalation Available

11/17/2011

குழந்தைகள் தினம்

நமது அர் ரஹ்மான் பள்ளியில்


குழந்தைகள் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது.



அதன் சில பதிவுகள் உங்களுக்காக...

11/10/2011

துல்காதா மாத பரிசுப்போட்டியில்

துல்காதா மாத பரிசுப்போட்டியில்
பரிசு வென்றவர்கள்

சரியான விடை எழுதியவர்களில்
குலுக்கல் முறையில் பரிசு வென்றவர்கள்

1) ஹபீபுல்லாஹ் துபாய்
2) உம்மு சமீஹா
3) அப்துல் ஸலாம் மஸ்தூக்கா
இவர்களுக்கான பரிசு பொதிகள் காலக்கிரமத்தில்
அவர்களின் இல்லங்களில் சேர்க்கப்படும்.

சரியான விடையை எழுதியவர்கள்

1) ஹபீபுல்லாஹ் துபாய்
2) உம்மு சமீஹா
3) அப்துல் ஸலாம் மஸ்தூக்கா
4) அஹமது முஸ்தபா மதுக்கூர்
5) முகமது பாதில் சென்னை

உம்மு ஸமீஹா தனது
வீட்டில் முகவரியை
மின்னஞ்சல் செய்யவும்.

தாருஸ் ஸலாம் என்ற நகரம்
இருக்கும் நாடு என பலரும் தான்சானியா எழுதி இருந்தீர்கள்.
அதே பெயரில் புருனேயிலும் ஒரு நகரம் இருக்கிறது.
அதை யாரும் எழுதவில்லை.

துல்கதா மாத பரிசுப் போட்டி- விடை

1) குர் ஆனில் கூறப்பட்ட நபிமார்கள் எத்தனை பேர்?

விடை: 25 பேர்
மனித சமுதாயத்தை நேர் வழிப் படுத்த ஏராளமான இறைத் தூதர்கள் இவ்வுலகில் அவதரித்தனர் என்றாலும் அவர்களில் 25 இறைத் தூதர்களிக் பெயர்கள் மட்டுமே திருக் குர்ஆனில் இடம் பெற்றுள்ளன.
1. ஆதம் அலைஹிஸ்ஸலாம்
2. நூஹ் அலைஹிஸ்ஸலாம்
3. இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம்
4. இஸ்மாயீல் அலைஹிஸ்ஸலாம்
5. இஸ்ஹாக் அலைஹிஸ்ஸலாம்;
6. இத்ரீஸ் அலைஹிஸ்ஸலாம்
7. இல்யாஸ் அலைஹிஸ்ஸலாம்
8. அய்யூப் அலைஹிஸ்ஸலாம்
9. அல்யஸஃ அiஹிஸ்ஸலாம்
10 யூசூஃப் அலைஹிஸ்ஸலாம்
11. யூனூஸ் அலைஹிஸ்ஸலாம்
12. தாவூத் அலைஹிஸ்ஸலாம்
13. சுலைமான் அலைஹிஸ்ஸலாம்
14. மூஸா அலைஹிஸ்ஸலாம்
15. ஹாரூன் அலைஹிஸ்ஸலாம்
16 யஹ்யா அலைஹிஸ்ஸலாம்
17. ஜக்கரியா அலைஹிஸ்ஸலாம்
18 யஃகூப் அலைஹிஸ்ஸலாம்
19. லூத் அலைஹிஸ்ஸலாம்
20. ஹுத் அலைஹிஸ்ஸலாம்
21. ஸாலிஹ் அலைஹிஸ்ஸலாம்
22. ஷுஐப் அலைஹிஸ்ஸலாம்
23. துல் கிப்ல்அலைஹிஸ்ஸலாம்
24. ஈஸாஅலைஹிஸ்ஸலாம்
25. முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
-------------------------------

2) குர் ஆனில் பெயர் வரும் பறவையின் பெயர் என்ன?
விடை: ஹுது ஹுது
27:20

அவர் பறவைகளை(ப் பற்றியும்) பரிசீலனை செய்து "நான் (இங்கே) ஹுது ஹுது(ப் பறவையைக்) காணவில்லையே என்ன காரணம்? அல்லது அது மறைந்தவற்றில் நின்றும் ஆகி விட்டதோ?" என்று கூறினார்.


3) மதீனாவின் பழைய பெயர் என்ன?
விடை:


யத்ரிப் என்னும் அழகிய மதினா


-------------------------------------------------------
4) ஒரு முஸ்லிம் பிற முஸ்லிம்க்கு செய்ய வேண்டிய கடமைகள் என்ன?
விடை

பாகம் 2, அத்தியாயம் 23, எண் 1240
என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்"

முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் ஐந்து. அவை ஸலாமுக்கு பதிலுரைப்பது, நோயாளியை விசாரிப்பது, ஜனாஸாவப் பின்தொடர்வது, விருந்தழைப்பை ஏற்றுக் கொள்வது. தும்முபவருக்கு மறுமொழி கூறுவது ஆகியவையாகும்.

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

--------------------------------------------------

5) தாருஸ் ஸலாம் என்ற நகரம் இருக்கும் நாடு எது?

விடை: தான்சானியா

11/08/2011

ஹஜ்ஜூப் பெரு நாள்

ஹஜ்ஜூப் பெரு நாள் வாழ்த்துக்கள்


அன்பான சகோதர,சகோதரிகளே!

நமது முக்கிய பெருநாளில் ஒன்றான
ஹஜ்ஜூப் பெரு நாள் நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்டது.
காலை 7.15மணிக்கு தொழுகை நடைபெறும் என அறிவிக்கப்பட்டு
தொழுகை பத்து நிமிடம் தாமதமாக தொழுகை வைக்கப்பட்டது.
தொழுகைக்குப்பின் சிறப்பு சொற்பொழிவான குத்பா உரை
சுமார் பத்து நிமிடம் நடந்தது. தொழுகையையும், குத்பா உரையையும்
நமது முனிர் ஸலாஹி அவர்கள் நடத்தினார்கள்.






குத்பா உரையில்
நல்ல பல நாயகம் (ஸல்) ஆற்றிய
உரையில் இருந்து எடுத்து சொற்பொழிவாற்றினார்.
நமது பள்ளி வளாகம் திடல் முழுவதும்
நிறைந்து இருந்தது. வானம் மழை இல்லாமல் இருந்ததால்
தொழுகை சிறப்பாக இருந்தது.
பெண்களும் ஆர்வமாக குழந்தைகளுடன்
தொழுகையில் பங்கேற்றனர்.
எல்லா புகழும் இறைவனுக்கே!




தஷ்ரீக்குடைய நாட்கள்

துல்ஹஜ் மாதம் பிறை 11,12,13 ஆகிய நாட்களில்
நோன்பு நோற்கக்கூடாது. இந் நாட்களும் பெருனாளைப்போன்று
மகிழ்வோடு இருக்க வேண்டிய நாட்களாகும்.
'தஷ்ரீக்குடைய நாட்கள் (துல்ஹஜ் 11,12,13) சாப்பிடுவதற்கும்
குடிப்பதற்கும், அல்லாஹ்வை நினைவு கூர்வதற்கும் உரிய நாட்களாகும்'
என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பாளர் : நுபைஷா (ரலி)
நூல் : முஸ்லிம் (ஹதீஸ் எண்: 2099)

ஹஜ்ஜூப் பெரு நாள் வாழ்த்துக்கள்









11/03/2011

துல்ஹஜ் மாத பரிசுப்போட்டி

பரிசுப்போட்டி எண் -4

1) பாங்கு இகாமத் இல்லாத தொழுகைகள் எது?

2) நாயகம்(ஸல்) அவர்கள் எத்தனை ஹஜ் செய்தார்கள்?

3) மக்கா மதீனா பள்ளிவாசல்களில் தொழுவதின் சிறப்பு என்ன?

4) நாயகம் (ஸல்) ஹஜ் செய்த போது இஹ்ராம் அணிந்த இடத்தின் பெயர் என்ன?

5) ஹஜ் செய்வது சம்பந்தமான குர் ஆன் வசனம் என்ன?


கேள்விக்கான விடைகளை எதிர்வரும்
27/11/2011க்குள் அனுப்பவும்
பதில்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி

'mkranwar@gmail.com'

<இந்த மாதம் பதில் எழுதும் போது
மறவாமல் பரிசுப்போட்டி எண் 4 என குறிப்பிடவும்.>

வருகைக்கு நன்றி

அன்பான வாசகர்களே
நமது வலைத்தளத்தில்
வரும் வாசகர்களின் எண்ணிக்கை 8000த்தை தாண்டியது.
எல்லா புகழும் இறைவனுக்கே!

இன்னும் அதிகமான எண்ணிக்கையில் வாசகர்கள்
வருகை வர புதிய ஏற்பாடுகள் எண்ணங்களில்..
இப்போது மாதாமாதம் நடைபெறும் பரிசுப்போட்டிகளில்
நமது வாசகர்களில் சிலர் பங்கு பெறுகின்றனர்.
பரிசு சின்னது தானே என நினைக்காமல்
ஆர்வர் உள்ள அனைவரும் பங்கு பெற வேண்டும் என்பது நமது ஆவல்.

வருகை பதிவுகள்
முதல் பத்து இடங்களில் இடம் பெறும் நாடுகள்

1) அமீரகம்
2) இந்தியா
3) கத்தார்
4) அமெரிக்கா
5) சவுதியா
6) இலங்கை
7) தைவான்
8) குவைத
9) பிரான்ஸ்
10) சிங்கப்பூர்

தொழுகை நேரங்கள்

தொழுகையாளிகள் நமது பள்ளிவாசலுக்கு தினமும் பஜ்ர் தொழுகைக்கு அதிகமானோர் வருகின்றனர். இரன்டு வரிசை குறையாமல் மக்கள் வருகின்றனர். வாரந்தோ...