10/26/2010

ஜப்பான் மற்றும் தைவானில், ஐரோப்பிய ராஜ்ஜியங்களில்
இருந்து புதியதாக வரும் சகோதரர்களை
வரவேற்கிறோம்.

10/24/2010

வெள்ளிக்கிழமை குத்பா உரை

இந்த வாரம் ஜும்மா பயானுக்காக
சகோ. மீரான் முகைதின் ஸலாஹி அவர்கள் வந்து இருந்தார்கள்
இந்த நாவின் பேச்சு நாவடக்கம் பற்றி நல்ல உரை நிகழ்த்தினார்கள்.
நமது நாவிலிருந்து வரும் பேச்சில் தான்
நமது நடவடிக்கைகள் மரியாதை அமையும் என
நல்ல ஒரு குத்பா உரையாக இருந்தது.
சில நபிகாளரின்(ஸல்) பொன்மொழிகளையும் நினைவுகூர்ந்தார்.

எவரது கரத்தினாலும், நாவினாலும்
பிற முஸ்லிம்கள் பாதுகாப்பு பெறுகிறார்களோ
அவரே உண்மையான முஸ்லிம் ஆவார்.

பள்ளியில் வழக்கம்போல நல்ல கூட்டம் இருந்தது.
ஏராளனமான பெண்களும் வந்து இருந்தனர்.

10/22/2010

அழகிய ஒரு துஆ

'அல்லாஹும்ம! இன்னீ அஊது பிக்க மின் ஸவாலி
நி;.மத்திக்க, வதஹவ்வுலி ஆ;.பியத்திக்க,
வ ;.புஜாஅத்தி நிக்மத்திக்க வ ஜமீஇ சகத்திக்க'

அப்துல்லாஹ் பின் உமர்(ரலி)
முஸ்லிம் 5289

இறைவா! உன் அருட்கொடை என்னை விட்டு நீங்குவதில் இருந்தும்,
நீ வழங்கிய நன்மைகள் என்னை விட்டு மாறிவிடுவதில் இருந்தும்,
திடீரென உனது தண்டனை வருவதில் இருந்தும்,
உனது கோபத்திற்குரிய அனைத்தில் இருந்தும்
உன்னிடம் நான் பாதுகாப்புத் தேடுகிறேன் என்று
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களின் பிரார்த்தித்து வந்தார்கள்.

10/18/2010

பள்ளிவாசலுக்கு.....

தஞ்சை மாவட்டத்தில்
ஏகத்துவ கொள்கையுடன் இயங்கிவரும்
பள்ளிகூடத்திற்கு அரபி ஆசிரியரும்,
பள்ளிவாசலுக்கு இமாம் மற்றும் ,முஅத்தின் (மோதினார்) தேவை.

மேலதிக விபரங்கட்கு
cell 090033 85399

நல்லறம் செய்திட நாள் நட்சத்திரமில்லை

நபி (ஸல்) அவர்கள் ஸபர் மாதத்தில் நோய்வாய்ப் பட்டிருந்ததால் அந்த மாதம் பீடை மாதம் என்ற நம்பிக்கை தமிழக முஸ்லிம்களில் சிலரிடம் இருந்து வருகின்றது. இந்த மாதத்தில் திருமணம் போன்ற நற்காரியங்கள் செய்யக்கூடாது என்றும் எண்ணிக் கொண்டிருக்கின்றனர். இப்படி நம்புவதற்கும் அதன் அடிப்படையில் செயல்படுவதற்கும் அனுமதி உண்டா என்று குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் ஆராய்வதற்கு முன் இது ஒரு மூட நம்பிக்கைதான் என்பதற்குறிய காரணங்களைப் பார்ப்போம்.

ஒரு நேரம், ஒரு நாள் ஒரு மாதம் எல்லோருக்கும் நன்மை செய்யக்கூடியது என்று நம்புவதும், அல்லது எல்லோருக்கும் கெடுதி செய்யகூடியது என்று நம்புவதும் இறைவன் ஏற்படுத்தியுள்ள நியதிக்கு மாற்றமாகும். ஒருவருக்கு மிகவும் நன்மைகள் வந்தடைந்த ஒருநாள் இன்னொருவருக்கு கேடுகள் வந்தடைந்த நாளாக இருப்பதைத்தான் நடைமுறையில் காண முடிகிறது. ஒரு நாளில் ஒருவருக்கு அழகான குழந்தை பிறந்திருக்கும். அதே நாளில் அவருக்கு பக்கத்து வீட்டில் உள்ள ஒருவர் மரணமடைந்திருப்பார். நல்ல நாள் என்று ஒன்று இருக்குமானால் உலகத்தில் வாழுகின்ற அனைவருக்கும் அந்த நாளில் வெறும் நன்மைகளாகவே நடக்க வேண்டும். ‘கெட்ட நாள் என்று ஒன்று இருக்குமானால் உலகத்து மாந்தர் அனைவருக்கும் அந்த நாளில் கெட்டவைகள் மட்டுமே சம்பவிக்க வேண்டும்.

எந்த நாளாக இருந்தாலும் அதில் சிலருக்கு நல்லவை ஏற்படுவதும், சிலருக்குக் கெட்டவைகள் ஏற்படுவதும் தான் நடைமுறை உண்மை. இதைப் புரிந்துகொள்ள பெரிய ஆதாரம் எதுவும் தேவையில்லை. தங்கள் வாழ்க்கையிலேயே அனைவரும் அனுபவ ரீதியாக உணர முடியும். முஹர்ரம் மாதம் பத்தாம் நாளை எடுத்துக் கொள்வோம். அந்த நாளில் ஹுஸைன்(ரலி) அவர்கள் படுகொலை செய்யப்பட்டதினால் அது கெட்ட நாள் என்று கூறினால் அதே நாள் மூஸா நபிக்கும் அவர்களைப் பின்பற்றிய மூமின்களுக்கும் நல்ல நாளாக அல்லவா இருந்துள்ளது. ரபீயுல் அவ்வல் பிறை 12ஐக் கவனியுங்கள் நபி (ஸல்) அவர்கள் அன்றுதான் பிறந்தார்கள் என்பதற்காக அது நல்ல நாள் என்று சொன்னால் அதே நாளில் தானே நபி (ஸல்) அவர்கள் மரணமடைந்திருக்கிறார்கள்.

மனிதர்களுக்கு அல்லாஹ் எதை விதித்திருக்கிறானோ அதுதான் நடக்கும். நாட்களால் அதில் எந்த மாறுதலையும் செய்ய முடியாது என்பதற்கு இவை தெளிவான சான்றுகளாகும். ஸபர் மாதத்தில் நபியவர்கள் நோய்வாய்ப்பட்டதினால் அந்த மாதமே பீடை மாதம் என்றால் (ஒரு கருத்துப்படி) ஸபர் மாதத்தில் அவர்கள் மேற்கொண்டுள்ள ஹிஜ்ரத் பயணம் மகத்தான வெற்றியை ஏற்படுத்தியுள்ளதே! அந்தப் பயணத்திற்குப் பின்புதான், இஸ்லாம் தனக்கென ஒரு நாட்டையே நிறுவ முடிந்தது.

பீடை மாதம் என்று ஒதுக்கிவிட்டு மற்ற நாட்களில் நம்மவர்கள் எல்லா நன்மையான காரியங்களையும் செய்கின்றனர் செய்தனர். தேர்ந்தெடுத்து நல்ல நாட்களில் நடத்தப்பட்ட பல திருமணங்கள் ஏன் ரத்து செய்யப்படுகின்றன? நாள் பார்த்து திருமணம் செய்த பல பெண்கள் விதவைகளாக இருப்பது ஏன்? நல்ல நாள் பார்த்துத் துவங்கப்பட்ட பல வியாபார நிறுவனங்கள் நஷ்டம் அடைந்தது ஏன்? நாள் பார்த்து அஸ்திவாரம் இட்டு நாள் பார்த்து திறப்பு விழா நடத்திய பல கட்டிடங்கள் இருந்த இடம் தெரியாமல் போனது ஏன்? அந்த நம்பிக்கையில் இருப்போர் பதில் சொல்ல வேண்டிய கேள்விகள் இவை.

சின்ன நகஸு, பெரிய நகஸூ என்றெல்லாம் கனித்துத் மக்களுக்குத் தொண்டு? செய்து வருகின்ற ஜோசியர்களை, பால்கிதாபு, மோர்கிதாபு என்று சொல்லி மக்களை மடமையிலேயே நீடித்திருக்க வைக்கும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளவர்களைக் கொஞ்சம் கவனியுங்கள்! இவர்கள் தங்களுக்கு மிகச் சிறந்த நல்ல நாளாகக் கணித்து அந்த நாளில் தங்கள் காரியங்களைத் துவக்கி நல்ல நிலையில் இருக்கிறார்களா? குறைந்த பட்சம் நல்ல நாளில் ஒரு தொழிலைத் துவக்கி மிகப்பெரும் செல்வந்தர்களாக மாறியுள்ளார்களா? இல்லையே! மாறாக மக்களிடம் ஐந்தையும் பத்தையும் கேட்டுப் பெறுகின்ற நிலமையில் தானே அவர்கள் உள்ளனர். பால்கிதாபு என்பதும் நகஸு என்று சொல்வதும் பித்தலாட்டம் என்பதற்கு இதைவிட வேறு என்ன ஆதாரம் வேண்டும்?

இதே ஸபர் மாதத்தின் இறுதி புதனில் தான் நபியபவர்கள் குணமடைந்து குளித்தார்களாம். அதனால் நாமும் ஒடுக்கத்துப்புதனில் குளித்து நமது முஸீபத்தை நீக்க வேண்டுமாம். இந்த நம்பிக்கையின் பெயரால் நாட்டில் இன்னும் பல மடமைகளும் நாட்டில் நடக்கின்றன.

ஓலை, மாயிலை என்று பல பெயர்களால் சில வாசகங்களை எழுதி கரைத்துத் குடிக்க ஒன்று, தலையில் தெளித்துக் கொள்ள ஒன்று, வீடு வாசல்களில் தெளிக்க வேறொன்று என்று மக்களை ஏமாற்றி வயிறு வளர்க்க சிலர் போட்ட திட்டமே ஒடுக்கத்து புதன் என்பது. அன்றைய தினத்தில் கடற்கரைக்கு சென்று முஸீபத்தை நீக்குகிறோம் என்று நீராடி வருவதும் சில பகுதிகளில் நடந்து வருகிறது. அன்றைய தினத்தில் நிறைய முஸீபத்துகள் இறங்கிக் கொண்டிருக்கிறதாம்! கடலில் குளித்தால் அது நீங்குமாம். இது போன்ற சடங்குகளை அறவே வெறுத்து வருகின்ற எத்தனையோ நாடுகளில் முஸீபத்துக்குப் பதிலாக செல்வங்கள் குவிந்துள்ளது ஏன்? என்றெல்லாம் மக்கள் இன்று சிந்திக்கத் துவங்கிவிட்டார்கள்.

அன்றை அரபிகள் ஷவ்வால் மாதத்தைப் பீடை மாதமாகக் கருதி வந்தனர். அந்த நாட்களில் எந்த நல்ல நிகழ்ச்சியும் நடத்தாதிருந்தனர். இந்த மடமை எண்ணத்தைத் தகர்த்தெரியும் வகையில் அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் “நான் ஷவ்வாலில் தான் மணமுடிக்கப்பட்டேன். ஷவ்வாலில் தான் என் இல்லறத்தைத் துவங்கினேன். நபி(ஸல்) அவர்களுக்கு என்னைவிட உகந்த மனைவியாக யார் இருந்தார்கள்?” என்று கூறினார்கள். (முஸ்லிம், அஹ்மத்)

நீங்கள் பீடை எண்ணி இருக்கின்ற ஷவ்வாலில் திருமணம் முடித்த நான் எவ்வளவு மகிழ்ச்சியோடு வாழ்ந்திருக்கிறேன் என்று அன்னை ஆயிஷா(ரலி) அவர்கள் கேட்டது இன்று ஸபரை பீடையாகக் கருதுவோர்க்கு பொருந்தாதா? சிந்தியுங்கள்!

S.கமாலுத்தீன் மதனி

பித்ராவின் பயணங்களில்

10/07/2010

லுஹருடைய முன் சுன்னத்

லுஹருடைய முன் சுன்னத்

நான் நபி صلى الله عليه وسلم அவர்களுடன் லுஹருக்கு முன் இரண்டு ரகஅத்துகளையும், லுஹருக்கு பின் இரண்டு ரகஅத்துகளையும், மக்ரிபுக்கு பின் இரண்டு ரக அத்துகளையும், இஷாவுக்கு பின் இரண்டு ரகஅத்துகளையும், ஜும்ஆ வுக்குப் பின் இரண்டு ரகஅத்துகளையும் தொழுது இருக்கிறேன். மக்ரிப், இஷா (தொழுகையினுடைய சுன்னத்)தொழுகைகளை நபி صلى الله عليه وسلم அவர்களது வீட்டில் தொழுது இருக்கிறேன். அறிவிப்பவர் இப்னு உமர்[ரலி] நூல்: புகாரி

நான் ஆயிஷா[ரலி] அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் صلى الله عليه وسلم அவர்களின் உபரியான வணக்கத்தை பற்றி வினவினேன். அதற்கு அவர்," நபி صلى الله عليه وسلم அவர்கள் என்னுடைய வீட்டில் லுஹருக்கு முன் நான்கு ரகஅத்துகள் தொழுது விட்டு, புறப்பட்டுச் சென்று மக்களுக்குத் தொழவிப்பார்கள். பிறகு என்னுடைய வீட்டுக்கு வந்து இரு ரகஅத்துகள் தொழுவார்கள்" என்று விளக்கமளித்தார்கள். அறிவிப்பவர் :அப்துல்லாஹ் பின் ஷிக்கீர்[ரலி] நூல் : முஸ்லிம்

அல்லாஹ்வின் தூதர் صلى الله عليه وسلم அவர்கள் லுஹர் தொழுகைக்குமுன் நான்கு ரகஅத்து களையும், ஃபஜ்ரு தொழுகைக்கு முன் இரண்டு ரகஅத்துகளையும் விடவே மாட்டார்கள். அறிவிப்பவர் : ஆயிஷா[ரலி] நூல் : புகாரி

நபி صلى الله عليه وسلم அவர்கள் லுஹருக்கு முன்பு நான்கு ரகஅத்துகளைத் தொழவில்லை என்றால் அந்நான்கு ரகஅத்துகளை லுஹருக்குப் பின் தொழுவார்கள். அறிவிப்பவர் : அயிஷா[ரலி] நூல் : திர்மிதி


லுஹருடைய பின் சுன்னத்

நான் நபி صلى الله عليه وسلم அவர்களுடன் லுஹருக்கு முன் இரண்டு ரகஅத்துகளையும், லுஹருக்கு பின் இரண்டு ரகஅத்துகளையும், மக்ரிபுக்கு பின் இரண்டு ரகஅத்துகளையும், இஷாவுக்கு பின் இரண்டு ரக அத்துகளையும், ஜும்ஆவுக்குப் பின் இரண்டு ரகஅத்துகளையும் தொழுது இருக்கிறேன். மக்ரிப், இஷா (தொழுகையினுடைய சுன்னத்) தொழுகைகளை நபி صلى الله عليه وسلم அவர்களது வீட்டில் தொழுது இருக்கிறேன். அறிவிப்பவர் : இப்னு உமர்[ரலி] நூல் : புகாரி

யார் லுஹருக்கு முன்பு நான்கு ரகஅத்துகளும் பின்பு நான்கு ரகஅத்துகளும் தொழுகின்றாரோ அவருக்கு நரகத்தை அல்லாஹ் தடுத்து விடுகிறான் என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் கூற நான் செவியுற்றேன். அறிவிப்பவர் : உம்மு ஹபீபா[ரலி] நூல் : திர்மிதி

அஸருடைய முன் சுன்னத்

நபி صلى الله عليه وسلم அவர்கள் அஸருக்கு முன் நான்கு ரகஅத்துகள் தொழுபவர்களாக இருந்தனர். அறிவிப்பவர் : அலி[ரலி] நூல் : திர்மிதி, நஸயீ, அபூதாவூத், இப்னுமாஜா

நபி صلى الله عليه وسلم அவர்கள் அஸருக்கு முன் இரண்டு ரகஅத்துகள் தொழுதார்கள். அறிவிப்பவர்: அலி[ரலி] நூல்: அபூதாவூத்

மக்ரிபுடைய முன் சுன்னத்

மக்ரிபுக்கு முன் இரண்டு ரகஅத்துகள் தொழுங்கள்! மஃரிபுக்கு முன் இரண்டு ரகஅத்துகள் தொழுங்கள்! விரும்புகிறவர் மஃரிபுக்கு முன் இரண்டு ரகஅத்துகள் தொழுங்கள்! என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் முகப்பல்(ரலி) நூல்:அஹ்மத்,புகாரி,அபூதாவூத்

நபி صلى الله عليه وسلم அவர்கள் மக்ரிபு தொழுகைக்கு முன் இரண்டு ரகஅத்துகள் தொழுதார்கள். அறிவிப்பவர் : அப்துல்லஹ் பின் முகப்பல்[ரலி]நூல் : இப்னு ஹிப்பான்

மஃரிபுடைய பின் சுன்னத்

நபி صلى الله عليه وسلم அவர்கள் மக்ரிபுக்குப் பின் இரண்டு ரகஅத்துகள் தொழுபவர்களாக இருந்தனர். அறிவிப்பவர்: ஆயிஷா[ரலி] நூல்: முஸ்லிம்,அஹ்மத், அபூதவூத்,திர்மிதி

இஷாவுடைய முன் சுன்னத்

இஷாவுக்கு முன்சுன்னத் உள்ளதா என்பதற்கு நேரடியாக எந்த ஆதாரத்தையும் காண முடியவில்லை. ஆயினும் ஒவ்வொரு தொழுகைக்கும் முன் சுன்னத் இருக்கின்றது என்று பொதுவாக ஹதீஸ் உள்ளதால் அதனடிப்படையில் இஷாவுக்கு முன் சுன்னத் தொழலாம். ஒவ்வொரு பாங்குக்கும் இகாமத்துக்கும் இடையில் ஒரு தொழுகை உண்டு. விரும்பியவர்கள் தொழலாம் என்று அல்லாஹ்வின் தூதர் صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் முகப்பல்[ரலி] நூல் : புகாரி, முஸ்லிம், திர்மிதி, நஸயி

இஷாவுக்குப் பின் சுன்னத்

நபி صلى الله عليه وسلم அவர்கள் இஷாவுக்குப்பின் இரண்டு ரகஅத்துகள் தொழுபவர்களாக இருந்தனர். அறிவிப்பவர்: இப்னு உமர்[ரலி] நூல்: புகாரி,முஸ்லிம், அஹ்மத்.


source : readislam

ஃபஜ்ருடைய முன் சுன்னத்

கடமையான தொழுகையின் முன் பின் சுன்னத்துகள்

அல்லாஹ்வின் தூதர் صلى الله عليه وسلم அவர்கள் ஒவ்வொரு கடமையான தொழுகைக்கும் முன்போ அல்லது பின்போ வழமையாக சுன்னத் தொழுகைகளைத் தொழுது வந்துள்ளனர்.இவை தவிர குறிப்பிட்ட பெயரையுடைய, உதாரணமாக லுஹா தொழுகை,மழைத் தொழுகை இன்னும் இது போன்ற பெயர்களில் அமைந்த சுன்னத் தொழுகைகளும் உள்ளன.

ஃபஜ்ருடைய முன் சுன்னத்

ஃபஜ்ருடைய முன் சுன்னத் இரண்டு ரகஅத்துக்களாகும். நபி صلى الله عليه وسلم அவர்கள் பஜ்ருடைய சுன்னத் அளவிற்கு வேறு எந்த உபரியான தொழுகை க்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்ததில்லை. அறிவிப்பவர்: ஆயிஷா [ரலி] நூல்: புகாரி

பஜ்ருடைய இரண்டு ரகஅத்துகள் இந்த உலகம் இன்னும் அதில் உள்ளவை அனைத்தை விடவும் மிகச் சிறந்தவையாகும் என்று நபி صلى الله عليه وسلم] அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அயிஷா[ரலி] நூல் : முஸ்லிம்

அல்லாஹ்வின் தூதர் صلى الله عليه وسلم அவர்கள் பஜ்ருக்கு முன்சுன்னத் தொழும் விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்தி உள்ளதாலும், அத்தொழுகையை சிறப்பித்துக் கூறியுள்ளதாலும் பஜ்ருடைய முன் சுன்னத்தை நாம் தவறவிடாமல் கவனமாகத் தொழ வேண்டும்.

அல்லாஹ்வின் தூதர் صلى الله عليه وسلم அவர்கள் பஜ்ருடைய இரண்டு ரகஅத்துகளைத் தொழுபவர்களாக இருந்தனர். அவ்விரண்டு ரகஅத்துகளிலும் சூரத்துல் பாத்திஹாவை ஒதினார்களா என்று நான் எண்ணுமளவுக்கு சுருக்கமாகத் தொழுவார்கள். அறிவிப்பவர் : அயிஷா[ரலி] நூல்: புகாரி முஸ்லிம்

அல்லாஹ்வின் தூதர் صلى الله عليه وسلم அவர்கள் இகாமத் தனது காதுகளில் விழுந்து விட்டதை போல் சுபுஹ் தொழுகையின் முன் இரண்டு ரகஅத்துகளை (விரைந்து)தொழுவார்கள். அறிவிப்பவர் : இப்னு உமர்[ரலி] நூல் : புகாரி

பஜ்ருடைய சுன்னத்தில் ஒத வேண்டியவை

அல்லாஹ்வின் தூதர் صلى الله عليه وسلم அவர்கள் பஜ்ருடைய இரண்டு ரக அத்துகளில் குல்யா அய்யுஹல் காஃபிரூன் மற்றும் குல்ஹு"வல்லாஹு" ஆகிய அத்தியாயங்களை ஒதுவார்கள். அறிவிப்பவர் : அபூஹ"ரைரா[ரலி] நூல்: முஸ்லிம்

வலப்புறமாகப் படுக்கவேண்டுமா?

அல்லாஹ்வின் தூதர் صلى الله عليه وسلم அவர்கள் ஃபஜ்ருடைய சுன்னத் தொழுததும் வலப்புறம் சாய்ந்து படுத்துக் கொள்வார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா[ரலி] நூல்: புகாரி

நபி صلى الله عليه وسلم அவர்கள் ஃபஜ்ருடைய சுன்னத் தொழுததும் நான் விழித்திருந்தால் என்னுடன் பேசிக் கொண்டிருப்பார்கள். இல்லாவிட்டால், தொழுகைக்கு அழைக்கும் வரை படுத்துக்கொள்வார்கள். அறி: ஆயிஷா [ரலி] நூல் : புகாரி

பஜ்ருக்கு முன் தொழாவிட்டால்

அல்லாஹ்வின் தூதர் صلى الله عليه وسلم அவர்கள் ஒருவரை சுபுஹ"க்குப் பின் இரண்டு ரக அத்துகள் தொழக் கண்டார்கள் அப்போது அவர்கள்,"சுபுஹ் தொழுகை இரண்டு ரகஅத்துகள்தான்" என்று சொன்னார்கள். அதற்கு அவர்,"சுபுஹ"க்கு முந்திய இரண்டு ரகஅத்துகளைத் தொழவில்லை, அவ்விரண்டையும் இப்போது தொழுதேன்" என்று பதிலளித்ததும், நபி صلى الله عليه وسلم அவர்கள் மவ்னமாகி விட்டார்கள். அறிவிப்பவர் : கைஸ் பின் அம்ர்[ரலி] நூல்: திர்மிதீ, அபூதாவூத், இப்னுமாஜா

யார் ஃபஜ்ருடைய(சுன்னத்) இரண்டு ரகஅத்துகளைத் தொழவில்லையோ அவர் அவ்விரு ரகஅத்துகளையும் சூரியன் உதித்தபின் தொழுவாராக என்று அல்லாஹ்வின் தூதர் صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹ"ரைரா[ரலி] நூல்: திர்மிதி

உபரியான வணக்கங்கள்

அல்லாஹ் தன்னை வணங்குவதற்காக இந்த மனித சமுதாயத்திற்கு சில வணக்கங்களைக் கடமையாக ஆக்கியுள்ளான். இந்தக் கடமையான வணக்கங்களை இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட ஒவ்வொருவரும் கண்டிப்பாக நிறைவேற்றியே ஆக வேண்டும். அவ்வாறு நிறைவேற்றும் போது அதற்காக அல்லாஹ் நற்கூலியும், அவற்றை நிறைவேற்றாதவர்களுக்கு தண்டனையும் வழங்குகின்றான்.

நஜ்த் என்ற ஊரைச் சேர்ந்த ஒருவர் தலை பரட்டையாக நபி صلى الله عليه وسلم அவர்களிடம் வந்தார். அவருடைய குரல் செவியில் ஒலித்தது. ஆனால் அவர் என்ன சொல்கிறார் என்று புரியவில்லை. நபி (صلى الله عليه وسلم அவர்களின் அருகில் வந்ததும் இஸ்லாத்தைப்பற்றி கேட்டார். அப்போது நபி صلى الله عليه وسلم அவர்கள், "இஸ்லாம் (என்பது) இரவிலும் பகலிலும் ஐவேளை தொழுகைகள்" என்றார்கள். உடனே அவர், "அந்தத் தொழுகையைத் தவிர வேறு (தொழுகை) ஏதாவது என் மீது கடமை உண்டா?" என்றார். அதற்கு அவர்கள்,"நீர் விரும்பிச் செய்தாலே ஒழிய வேறில்லை"என்றார்கள்

அடுத்து, "ரமலான் மாதம் நோன்பு நோற்பதும் ஆகும் "என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள். உடனே அவர்,அதைத் தவிர வேறு ஏதேனும் (நோன்பு) என் மீது கடமை உண்டா?" என்றார். அதற்கு அவர்கள், "நீர் விரும்பி செய்தாலே ஒழிய வேறில்லை என்றார்கள்.

அவரிடம் நபி صلى الله عليه وسلم அவர்கள் ஸகாத் பற்றியும் சொன்னார்கள். அதற்கு அவர், "அதைத் தவிர வேறு (ஸகாத்) ஏதும் என் மீது கடமையா?" என்றார். அதற்கு அவர்கள் "நீராக விரும்பிச் செய்தாலே தவிர வேறு தர்மங்கள் கடமை இல்லை" என்றார்கள். உடனே அந்த மனிதர், "அல்லாஹ்வின் மீது ஆணையாக! நான் இவற்றை விட கூட்டவும் மாட்டேன், குறைக்கவும் மாட்டேன்" என்று கூறியவாறு திரும்பிச் சென்று விட்டார். அப்போது நபி صلى الله عليه وسلم அவர்கள், "இவர் கூறியதற்கு ஏற்ப நடந்து கொண்டால் வெற்றி அடைந்து விட்டார்" என்று கூறினார்கள். அறிவிப்பவர் : தல்ஹா பின் உபைதுல்லாஹ்(ரழி)நூல் : புகாரி

இந்த ஹதீஸில் கடமையைத்தவிர வேறு எதையும் செய்ய மாட்டேன் என்று கூறிய ஒருவரை வெற்றியாளர் என நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறுவதிலிருந்து கடமையான வணக்கங்களை ஒருவர் நிறைவேற்றுவதே மறுமையில் வெற்றி பெறுவதற்குப் போதுமானது என்பதை அறிய முடிகின்றது. எனினும் ஒரு மனிதர் அல்லாஹ்விடத்தில் தன்னுடைய அந்தஸ்தை உயர்த்திக் கொள்வதற்காக உபரியான வணக்கங்களைச் செய்து கொள்வதற்கு மார்க்கம் அனுமதி வழங்கியுள்ளதோடு ஆர்வ மூட்டியும் உள்ளது. அல்லாஹ்வின் தூதர் நபி صلى الله عليه وسلم அவர்கள் இது போன்ற உபரியான வணக்கங்களை நமக்குக் கற்றுத் தந்துள்ளார்கள்.

அல்லாஹ்வின் தூதர் صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்:

நிச்சயமாக அல்லாஹ் கூறுகிறான்: யார் எனது நேசரை பகைத்துக் கொள்கிறாரோ அவருடன் நான் போர் தொடுக்கின்றேன் . நான் என் அடியான் மீது கடமையாக்கியிருக்கும் வணக்கத்தின் மூலமாகவே என் அடியான் எனக்கு நெருக்கமாகின்றான். அதுவே எனக்குப் பிரியமான வணக்கமாகும். எனது அடியான் உபரியான வணக்கங்கள் மூலம் என்னை நெருங்கிக் கொண்டிருக்கிறான். அதன் பயனாக அவனை நான் நேசிக்கிறேன். நான் அவனை நேசிக்கும் போது அவன் செவியுறுகின்ற செவியாகவும், அவன் பார்க்கின்ற பார்வையாகவும், அவன் நடக்கின்ற காலாகவும் நான் ஆகி விடுகின்றேன். அவன் என்னிடம் கேட்டால், நான் அவனுக்குக் கொடுக்கின்றேன். அவன் என்னிடம் பாதுகாவல் தேடினால் பாதுகாப்பு அளிக்கிறேன். முஃமினுடைய உயிரைக் கைப்பற்றும் போது அடையும் சங்கடத்தைப் போன்று நான் செய்கின்ற வேறு எந்தக் காரியத்திலும் நான் சங்கடம் அடைவதில்லை. [ஏனெனில்] என் அடியான் மரணத்தை வெறுக்கின்றான். நான் அவனுக்கு வேதனை அளிப்பதை வெறுக்கிறேன். அறிவிப்பவர் : அபூஹ"ரைரா(ரலி) நூல் : புகாரி

உபரியான வணக்கங்கள் புரிவது இறைவனிடம் நெருக்கத்தை அதிகப்படுத்தி நமது தேவைகளை அல்லாஹ் பூர்த்தி செய்வதற்கு வழி வகுக்கும் என்பதை மேற்கண்ட ஹ்தீஸ் விளக்குகின்றது. கடமையான வணக்கங்களை நிறைவேற்றும் போது மனிதர்கள் என்ற முறையில் குறைபாடுகள் எற்படலாம். இந்தக் குறை பாடுகள் அல்லாஹ்விடத்தில் நம்மைக் குற்றவாளிகளாக ஆக்கிவிடக் கூடாது. எனவே கடமையான வணக்கங்களில் எற்படும் குறைகளுக்கு ஒரு பரிகாரம் தேவைப்படுகிறது. அல்லாஹ்வின் தூதர் صلى الله عليه وسلم அவர்கள் கற்றுத் தந்த வழியில் உபரியான வணக்கங்கள் புரிவது கடமையான வணக்கங்களில் எற்படும் குறைகளை ஈடுசெய்வதாக அமைந்துள்ளது.

அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்கள் கூறுகின்றார்கள் :

நிச்சயமாக ஒர் அடியான் மறுமையில் முதன் முதலில் தொழுகையைப் பற்றி தான் விசாரிக்கப்படுவான். அவனது தொழுகை நிறைவானதாகக் காணப்பட்டால் அவனது தொழுகை நிறைவானது என்று எழுதப்படும். அவனது தொழுகையில் குறை இருந்தால் அல்லாஹ் மலக்குகளை நோக்கி," என்னுடைய அடியானுக்கு உபரியான வணக்கங்கள் இருக்கின்றனவா என்று பார்த்து அவனுடைய கடமையான தொழுகையில் குறைவானதை நிறைவாக்குங்கள். பிறகு ஸக்காத்தைப் பாருங்கள். மற்ற வணக்கங்களையும் இதே கணக்கின் அடிப்படையில் பார்த்து நிறைவாக்குங்கள்" என்று அல்லாஹ் கூறுகின்றான். அறிவிப்பவர் : தமீமுத் தாரி[ரலி] நூல் : தாரமீ

கடமையான வணக்கங்களில் எற்படும் குறைகளை உபரியான வணக்கங்கள் நீக்கி வடுவதுடன் இறைவனிடத்தில் நெருக்கத்தை எற்படுத்துபவையாகவும் அமைந்துள்ளன. எனவே கடமையான வணக்கத்தை நிறைவேற்றி விட்டோம் என்று அலட்சியமாக இருந்து விடாமல் உபரியான வணக்கங்களையும் நிறை வெற்றி அல்லாஹ்வின் அருளைப் பெற்றவர்களாக நாம் ஆக வேண்டும்.

தொழுகை நேரங்கள்

தொழுகையாளிகள் நமது பள்ளிவாசலுக்கு தினமும் பஜ்ர் தொழுகைக்கு அதிகமானோர் வருகின்றனர். இரன்டு வரிசை குறையாமல் மக்கள் வருகின்றனர். வாரந்தோ...