1/29/2010

வெள்ளிக்கிழமை குத்பா

இன்றைய குத்பா நல்ல ஒரு பாடமாக
அனைவருக்கும் அமைந்தது என்றால் மிகையல்ல.
இன்றைய உரை மனத்தூய்மை பற்றிய பாடம்.
மனிதனின் மனம் எப்படி பட்டது?
அது எத்தனை வகைப்படும்?
இறையச்சம் உள்ள இதயங்கள்?
பாவத்தில் ஊறிய இதயங்கள்?
இரண்டையும் கலந்த இதயங்கள்?
என அழகாக உரையாற்றினார்.
இதயத்தை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும்.
இறைவனை அதிகமதிமாக தியானிக்க வேண்டும்
இறைவனை நினைக்க வேண்டும்.
எனவும் வலியுறுத்தினார்.
யா அல்லாஹ் எங்கள் அனைவருக்கும்
இதயத்தை தூயமை படுத்திக் கொடுத்து
நீண்ட ஆயுளையும்
ஆரோக்யமான உடல் நலத்தையும் கொடுப்பாயாக! ஆமின்

1/24/2010

உலகத்தை விட சிறந்தது

Dear all brothers,



Assalamu Alaikum,



Please see below the picture of FAJAR Prayer in Malaysia!!!



Then think about our prayer, are we punctual in Fajr prayer? Please be Punctual and try to reach Masjid to perform Fajr Prayer also like all other Waqth.



If you are aware of the above then please inform your friends and relatives.



Wish you good luck with pray,


1/23/2010

வெள்ளிக்கிழமை குத்பா உரை

வெள்ளிக்கிழமை குத்பா உரை
குத்பா உரையை நமது இமாம் அவர்கள் நிகழ்த்தினார்கள்.
நேற்றையை உரையில் ஹராம் ,ஹலால் என தொடங்கி
உலகில் வாழும் நாம் உலக ஆசையில் மூழ்கி,
உலக செழிப்பில் மயங்கி
செல்வத்தை தேடி அதிலேயே மூழ்க வேண்டாம்.
நமக்கு நாளை ஒரு உலகம் இருக்கு
அதுதான் நமக்கு நிரந்தரம்
அதற்கா நல் அமல்கள் செய்யவேண்டும்.
அதான் மறுமை வாழ்க்கை.

நமது உம்மத்திற்கு மிகப்பெரும் சோதனையாக இருப்பது
செல்வம் தான் என நேற்றைய உரையை தொகுத்து உரையாற்றினார்.
பள்ளி வழக்கம்போல நிரம்பியது.
பல பெரியவர்களும் இப்போது நமது பள்ளிக்கு
குத்பா உரை மற்றும் ஜும்மா தொழுகைக்காக வருகின்றனர்.
எல்லா புகழும் இறைவனுக்கே!

1/16/2010

மில்லேன்னியும் கிரகணம்

வெள்ளிக்கிழமை
சூரியன் உதயமாகும் நாளில்
சிறப்பான நாள். நேற்று குத்பா உரையை
நமது பள்ளி இமாம் முனிர்ஸலாஹி அவர்கள் நிகழ்த்தினார்கள்.


நேற்றைய முதலாம் உரையில் நட்புகளை எப்படி தேர்ந்து எடுப்பது?
கூடா நட்பு எது? நல்ல நட்புகளால் ஏற்படும் பயன்கள் என
அனைத்தையும் விரிவாக விளக்கினார்.
இன்னும் விரிவாக பார்த்து இருந்தால் நன்றாக இருக்கும்.


இரன்டாவது உரையில் சூரியகிரகணம் பற்றியும்
அது ஏற்பட்டால் நாம் என்ன செய்யவேண்டும் என விளக்கினார்.
பள்ளி நிரம்பியது. மக்கள் வெளியேயும் பாய் போட்டு தொழுதனர்.



நபி(ஸல்)காலத்தில் சூரியகிரகணம் ஏற்பட்டபோது
அழைப்பாளர் ஒருவரை அனுப்பி "அஸ்ஸலாது ஜாமி ஆ"
என்று மக்களை அழைக்குமாறு நபி(ஸல்)கூறினார்கள்.
அறிவிப்பாளர்: அப்துல்லா இப்னு அம்ரு
நூல்: முஸ்லிம்

ஜும் ஆ தொழுகைக்குப்பின் கிரகணத்தொழுகையும் நடத்தப்பட்டது.
கிரகணத்தொழுகை கிட்டத்தட்ட 45 நிமிடங்களுக்கு
குறையாமல் இரன்டு ரக் அத்கள் நடத்தப்பட்டது.
ஜூம் ஆ வுக்கு வந்த அனைவரும் கலந்துக்கொண்டனர்.
பெண்களும் ஆர்வமாக இத்தொழுகையில் பங்குபெற்றன்ர்.

1/10/2010

கோவை ஜாஹிர் சொற்பொழிவில்



கோவை ஜாஹிர் வந்தபோது நடைபெற்ற ஒரு சொற்பொழிவில்





பாங்கோசை

அந்தி சாயும் நேரத்தில்
இறை இல்லத்தில் இருந்து
படைக்கப்பட்டவனை வணங்க
அழைக்கப்படும் அழைப்பு..

இறைவனின் அருட்கொடை

நமதூரில் கடந்த இரண்டு நாட்களாக
நல்ல மழை தொடர்ந்து பெய்து வருகிறது.
இதோ மழை பெய்யும் போது...

நமது இனையம் வந்து சென்ற பார்வையாளர்கள்
அதை நாடுகளின் பார்வையில்
சதவீத அடிப்படையில் உங்கள் பார்வைக்கு தருகிறோம்.
அதிக இடங்களை பிடித்து முதல் இடத்தில்
அமீரகமும், இரன்டாம் இடத்தில் இந்தியாவும்,
பிற நாடுகள் வரிசை பட்டியலில் தொடர்கிறது.


1/01/2010

அன்பான சகோதரர்களே
இன்றைய வெள்ளிக்கிழமை குத்பா உரை
நமது பள்ளியின் இமாம் முனிர்ஸலாஹி அவர்கள் நிகழ்த்தினார்.
இன்றைய உரையில் முஹர்ரம் மாதம் என்பதால்
மூஸா(அலை)அவர்கள் பிர் அவ்னை கடலில் மூழ்கடித்ததில் இருந்து
தொடர்ச்சியாக அவரது வாழ்க்கை சம்பவங்களை நினைவு கூர்ந்தார்.
இரன்டாவது உரையில் புத்தாண்டு கொண்டாட்டங்களை கூடாது எனவும்,
அது யூத, கிறிஸ்துவ கலாச்சாரம் எனவும், அதை விட்டு,
நம் மக்கள் தவிக்கவேண்டும் எனவும் அழகாக வலியுறுத்தினர்.
இன்றைய தொழுகைக்கு பள்ளி நிரம்பியது.
பள்ளியின் வெளிப்புறமும் பாய் விரிக்கப்பட்டு தொழுகை நடைபெற்றது.
இறைவனின் மாபெரும் அருளை மட்டும் நம்பி,
நமது பள்ளியின் மேல்தளத்தை எழுப்பும் முயற்ச்சியை தொடங்கியுள்ளோம்.

தொழுகை நேரங்கள்

தொழுகையாளிகள் நமது பள்ளிவாசலுக்கு தினமும் பஜ்ர் தொழுகைக்கு அதிகமானோர் வருகின்றனர். இரன்டு வரிசை குறையாமல் மக்கள் வருகின்றனர். வாரந்தோ...