12/29/2010

ஸிஹாஹ் ஸித்தா

ஹதீஸ் தொகுப்பு வரலாறு

அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் எவர் வழிப்படுகிறாரோ அவர் மகத்தான பாக்கியத்தை அடைந்து விட்டார். (33.71,24:52.)

எவர் அல்லாஹ்வின் தூதருக்குக் கீழ்படிகிறாரோ அவர் அல்லாஹ்வுக்குக் கீழ்படிந்தவர் ஆவார். (4:30)

இத்தூதருக்கு வழிப்படுங்கள் உங்கள் செயல்களை நீங்கள் வீணாக்கிவிடாதீர்கள். (47:33)

மேற்கண்ட ஆணைக்கொப்ப ஒவ்வொரு முஸ்லிமும் அல்லாஹ்வின் தூதர் நபி(ஸல்) அவர்களின் சொல், செயல், அங்கீகாரமான ஹதீஸை முழுமையாகப் பின்பற்ற வேண்டுமென்பதை உணருகிறோம்.

அதனடிப்படையில் நபித் தோழர்களும், அவர்களுக்குப்பின் வந்தர்வகளும் ரஸூல் (ஸல்) அவர்களின் ஹதீஸ்களைத் தொகுத்தளிக்க ஆரம்பித்தனர். அச்சு இயந்திரம் போன்ற வசதி இல்லாத அக்காலங்களில் அவை செவி வழி வந்த தொடர் செய்திகளாகவும், எழுத படிக்கத் தெரிந்தவர்கள் எழுதி வைத்த கைப் பிரதிகளாகவும் திகழ்ந்தன .

அந்த ஹதீஸ்களை அவர்களால் முடிந்தவரை மனனமும் செய்து வைத்திருந்தனர். இஸ்லாம் உலகலாவிய நிலையில் பரவிய போது இஸ்லாத்தில் இணைந்த அரபியல்லாதவர்கள் ஹதீஸின் முக்கியத்துவத்தை விளங்கி பெரும் நூல்களாகத் தொகுக்க ஆரம்பித்தனர்.

இவ்விதம் பெரும் ஹதீஸ் நூல்கள் தொகுக்கப்படுவது ஹிஜ்ரீ 100 லிருந்து ஆரம்பமாயிற்று. ஆனால் ஹிஜ்ரீ 200 லிருந்து 300 வரையிலான காலத்தை ஹதீஸ் தொகுப்பின் பொற்காலம் எனலாம்.

இக்காலக்கட்டத்தில் பற்பல ஹதீஸ் தொகுப்புகள் தொகுக்கப்பட்டாலும் முஸ்லிம்களிடையே இன்று ஆறு நூல்கள், உண்மையான ஆறு ஹதீஸ் நூல்களின் தொகுப்பு எனக் கருதப்பட்டு "ஸிஹாஹ் ஸித்தா" என்ற பெயரில் விளங்கி வருகின்றது இந்த ஆறு ஹதீஸ் நூல்கள் சஹீஹுல் புகாரி, ஷஹீஹ் முஸ்லிம், ஸூனன் நஸயீ, ஸூனன் அபூதாவூத், ஸூனன் திர்மிதீ,ஸூனன் இப்னுமாஜா என வரிசைப் படுத்தப்படுகின்றது . இந்த ஆறு நூல்களும் ஹிஜ்ரி 3ம் நூற்றாண்டில் தொகுக்கப் பட்டன .இந்நூல்களின் விபரம் வருமாறு.
பெயர்
1. புஹாரி(ரஹ்)

2. முஸ்லிம் (ரஹ்)

3. நஸயீ (ரஹ்)

4. அபூதாவூத் (ரஹ்)

5. திர்மிதீ

6. இப்னுமாஜ்ஜா

பிறப்பு -இறப்பு
194 - 256 ஹி

206 - 261 ஹி

214 - 303 ஹி

202 - 275 ஹி

209 - 279 ஹி

202 - 273 ஹி

ஊர் நாடு
புகாரா ரஷ்யா

நைஷாபூர் பாரசீகம்

ஈரான் (குராசான்)

ஸிஜிஸ்தான் இராக்

திர்மிதி குராசான்

கஸ்வின் அஜர்பைஜான்




இவை ஒவ்வொன்றும் சுமார் 4000-க்கும் மேற்ப்பட்ட ஹதீஸ்களைக் கொண்டவை. இந்நூல்கள் தொகுக்கப்பட்ட காலத்திலும்,இதற்கு முந்திய கால கட்டத்திலும், இவை போன்ற பல ஹதீஸ் நூல்கள் பற்பல ஹதீஸ் கலாவல்லுனர்களால் "முஸன்னஃப்" என்றும் "முஸ்னது" என்றும் தொகுக்கப்பட்டன .

இங்கு முஸன்னப் என்றால் என்ன? முஸ்னத் என்றால் என்ன? முஸன்னப் என்றால் மக்களின் கேள்வி ஞானத்திற்க் கொப்ப இஸ்லாமிய சட்ட அடிப்படையில் தலைப்பு களாகப் பிரித்து வேவ்வேறு ஸஹாபிகள், தாபியீன்கள் மூலம் கிடைத்த ஹதீஸ்களை ஒரே தலைப்பில் தொகுத்ததாகும். உதாரணம் தொழுகை என்ற தலைப்பை ஒழு, பாங்கு, இகாமத், ருகூஉ, ஸுஜுது போன்ற பல சிறு தலைப்புகளாகப் பிரித்து ஒவ்வொரு தலைப்பிலும் பற்பல ஸஹாபிகள், தாபியீன்கள் மூலம் கிடைத்த ஹதீஸ்களைத் தொகுத்தளித்தல்.

முஸ்னத் என்றால் தலைப்புகளின் அடிப்படையில் பிரிக்காமல் தொகுத்த ஹதீஸ் வல்லுனர் எந்தெந்த ஸஹாபி, தாபியீன் மூலம் கிடைத்தாக அறிவிக்கிறாரோ அந்த ஸஹாபி, தாபியீன்களின் அறிவிப்பாளர் (ஸனது) வரிசையில் தொகுத்ததாகும்.

மேலே குறிப்பிட்ட ஆறு ஹதீஸ் நூல்கள் தொகுக்கப்பட்ட காலத்திலும், அதற்கு முந்திய காலத்திலும் வேறு பல ஹதீஸ் நூல்களும் தொகுக்கப்பட்டன. அவற்றில் முக்கியமான சிலதை பார்ப்போம்.
பெயர்
1. முஅத்தா மாலிக்(ரஹ்)

2. முஸ்னது ஷாபிஈ (ரஹ்)

3. முஸ்னது அஹ்மது (ரஹ்)

4. முஸ்னது தவ்ரீ (ரஹ்)

5. முஸ்னது அவ்ஸஈ (ரஹ்)

6. முஸ்னது இப்னு முபாரக்

7. முஸ்னது முஹம்மதுபின் ஸலமா(ரஹ்)

8. முஸ்னது இப்னு உஜன்னா (ரஹ்)

9. முஸ்னது இப்னு முஅம்மர் (ரஹ்)

பிறப்பு-இறப்பு
92-179ஹி

150-204ஹி

164-241ஹி

97-161ஹி

--157ஹி

-181ஹி

-167ஹி

107-198ஹி

-191ஹி

ஊர் நாடு
மதீனா சவுதி

மக்கா சவுதி

பஸ்ரா ஈராக்

கூஃபா ஈரான்

ஷாம் ஈராக்

குராசான் ஈரான்

பஸ்ரா ஈராக்

கூஃபா ஈரான்

யமன் யமன்


இந்நூல்களில் முஅத்தா மாலிக் போன்ற ஓரிரு நூல்களைத் தவிர மற்ற அனைத்தும் முஸ்னதுகளாக (தலைப்புகளின் அடிப்படையில்) அமைந்தன. முஸ்னதுகளில் சாதரணமாக இஸ்லாமிய சட்டங்களை கண்டறிவது மிகவும் கடினம். ஒரு ஹதீஸை அறிவிப்பாளர் பெயர் தெரிந்த்தால் மட்டுமே அதனை பார்க்க முடியும்.

இமாம்களான அபூஹனீபா (ரஹ்),மாலிக்(ரஹ்), ஷாபிஈ(ரஹ்), ஹம்பலி(ரஹ்) போன்றோரில் இமாம் அபூஹனீபா(ரஹ்) எழுதிய ஹதீஸ் அல்லது மார்க்கச் சட்ட நூல்களில் இன்று எதுவும் தற்சமயம் காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தற்சமயம் ஹனபி மத்ஹபு பெயரில் புழங்கி வரும் பிக்ஹு நூல்கள் இமாம் அபூஹனீபா(ரஹ்) அவர்களால் எழுதப்பட்டவையல்ல. இமாமுல் அஃலம் என்ற சிறப்புப் பெயரைப் பெற்றுள்ள அபூஹனீபா அவர்களுக்குப் பின் வந்தவர்கள் தொகுத்தளித்ததாகும். இந்நூல்களுக்கும் இமாம் அபூஹனீபா(ரஹ்) அவர்களுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை. தங்களது சொந்த கருத்துக்கள் மக்களிடம் எடுபடாது என எண்ணி இமாம் அபூஹனீபா(ரஹ்) அவர்களின் பெயரில் அறங்கேற்றியுள்ளனர் .

இமாம் ஷாபீஈ(ரஹ்) முஸ்னது ஷாபீஈ என்ற ஹதீஸ் தொகுப்பையும், இமாம் அஹ்மது இப்னு ஹம்பல் (ரஹ்) முஸ்னது அஹ்மது என்ற ஹதீஸ் தொகுப்பையும் எழுதினார்கள் .
ஆனால் இமாம் மாலிக்(ரஹ்) தனது தொகுப்பு முஅத்தா மாலிக் என்ற ஹதீஸ் தொகுப்பை முஸன்னஃபாக (பாடங்கள் தலைப்பிட்டு) கொடுத்தார். அதில் சுமார் 2000 ஹதீஸ்கள் உள்ளன. இந்நூல் ஸிஹாஹ் ஸித்தா எனப்படும்

ஆறு ஹதீஸ் நூல்கள் வருவதற்கு சுமார் 75 முதல் 100 வருடங்கள் முன்பாகவே மதினாவில் வாழ்ந்த மாலிக்(ரஹ்) ஹதீஸ் நூலாகவும், மார்க்கச் சட்ட நூலாகவும் தொகுத்தார்கள்.

ஹிஜ்ரீ 3ம் நூற்றாண்டிற்குள் பெரும் ஹதீஸ் தொகுப்புக்கள் பல வெளிவந்துவிட்டன. ஹதீஸ் தொகுப்புகளின் பொற்காலமான 3, 4, 5 வது நூற்றாண்டிலும் இப்னு மாஜ்ஜா இந்த தரமிக்க ஹதீஸ் தொகுப்புகளுடன் இணைக்கப்படவில்லை. ஆனால் பெரும் பான்மையானவர்கள் புஹாரி, முஸ்லிம் இவ்விரண்டயும் "ஸஹீஹைன்" (உண்மையான ஹ்தீஸ்களின் இருநூல்கள்) என்றும், மற்றவைகளை "ஸூனன்" என்றே அழைத்தனர் .

ஹிஜ்ரீ 5ம் நூற்றாண்டின் இறுதியில் அபுல்காஸிம் அலி இப்னு முஹம்மது இப்னு அஸாகிர் (இறப்பு 571ஹி) என்ற ஹதீஸ்கலா வல்லுனர் அபூதாவூது, நஸயீ, திர்மிதீ, இப்னுமாஜ்ஜா என்ற நான்கு நூல்களிலிருந்து ஹதீஸ்களை தேர்தெடுத்து ஒரே நூலாக "அல்-அஷ்ராப் அலா மஃரிபத்துல் அத்ராஃப்" எனத் தொகுத்தார். அவரைத் தொடர்ந்து அப்துல் கனி பின் அப்துல் வாஹித் அல்-மக்தஸீ (இறப்பு 600ஹி) என்பவர் புஹாரி, முஸ்லிம், நஸயீ, அபூதாவூத், திர்மிதீ, இப்னுமாஜ்ஜா என்ற ஆறு தொகுப்புகளில் இடம் பெறும் அறிவிப்பாளர் களைப் பற்றி ஒரு ஆய்வு நூல் "அல்-கமால்" என்ற நூல் எழுதினார் .

இந்நூல் இவருக்குப்பின் வந்த பெரும் ஹதீஸ் கலாவல்லுனர்களான தஹபி, இப்னுகதீர், முஃகலாதி, இப்னு ஹஜர் போன்றோருக்கு சிறந்த உதவியாக இருந்தது. இவர்களும் இந்த ஆறு நூல்களின் தொகுப்புக்கு தனி பெயரைக் கொடுக்கவில்லை. ஆனால் இவர்களுக்குப்பின் வாழ்ந்த அல்-ஹாபில் அல்ஹஜ்ஜாஜ் அல்-மஜ்ஜி (இறப்பு 742ஹி) என்பவர் ஆறு நூல்களின் தொகுப்புக்கு "துஹ்பத்துல் அஷ்ராப் பீ மஃரிபத்துல் அத்ராப் என பெயர் நல்கினார். இது நாளடைவில் மக்களிடையே "ஸிஹாஹ் ஸித்தா" எனப் பெயர் பெறலாயிற்று .

12/25/2010

Holy Quran



1. Successful indeed are the believers.

2. Those who offer their Salat (prayers) with all solemnity and full submissiveness.

3. And those who turn away from Al-Laghw (dirty, false, evil vain talk, falsehood, and all that Allah has forbidden).

4. And those who pay the Zakat .

5. And those who guard their chastity (i.e. private parts, from illegal sexual acts)

6. Except from their wives or (the captives and slaves) that their right hands possess, for then, they are free from blame;

7. But whoever seeks beyond that, then those are the transgressors;

8. Those who are faithfully true to their Amanat (all the duties which Allah has ordained, honesty, moral responsibility and trusts etc.) and to their covenants;

9. And those who strictly guard their (five compulsory congregational) Salawat (prayers) (at their fixed stated hours).

10. These are indeed the inheritors.

11. Who shall inherit the Firdaus (Paradise). They shall dwell therein forever.

செயல்களில் சிறந்தது தொழுகை

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு

அவர்களில் ஒருவனுக்கு மரணம் வரும்போது, அவன்; "என் இறைவனே! என்னை (உலகுக்குத்) திருப்பி அனுப்புவாயாக!' என்று கூறுவான். "நான் விட்டுவந்ததில் நல்ல காரியங்களைச் செய்வதற்காக" (என்றும் கூறுவான்). அவ்வாறில்லை! அவன் கூறுவது வெறும் வார்த்தையே(யன்றி வேறில்லை); அவர்கள் எழுப்பப்படும் நாள் வரையிலும் அவர்கள் முன்னே ஒரு திரையிருக்கிறது. (அல்குர்ஆன் 23:99-100)


செயல்களில் சிறந்தது தொழுகையை அதன் நேரத்தில் தொழுவதாகும் என்று அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : இப்னு மஸ்வூத் (ரழி). நூல்கள் : புஹாரி, முஸ்லிம்.

பாங்குக்கும் இகாமத்துக்குமிடையில் பிரார்த்தனை தட்டப்படுவதில்லை என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூதாவூத்)

நமக்கும் அவர்களுக்குமிடையே (காபிர்களுக்கு மிடையே) இறைவன் ஏற்படுத்திய வித்தியாசம் தொழுகையேயாகும். யார் அதனை விட்டுவிட்டாரோ அவர் காஃபிராகி விட்டார் என்று அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : புரைதா (ரழி). நூல்கள் : திர்மிதி, அபூதாவுத், அஹ்மது, இப்னுமாஜா, நஸயீ, இப்னு ஹிப்பான்.

யார் ஸுப்ஹுத் தொழுகையை தொழுகின்றாரோ அவர் (அன்றைய தினம்) அல்லாஹ்வின் பொறுப்பிலிருக்கின்றார் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)

ஒரு அடியான் தன் இரட்சகனிடம் மிக சமீபமாக உள்ள நேரம், அவன் சுஜுது செய்யும் நேரமாகும். ஆகவே (அந்த நேரத்தில்) அதிகம் பிரார்த்தியுங்கள் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)

யார் இஷாத் தொழுகையை ஜமாஅத்துடன் தொழுகின்றாரோ அவருக்கு பாதி இரவு நின்று வணங்கிய நன்மை கிடைக்கும், யார் சுப்ஹுத் தொழுகையையும் ஜமாஅத்துடன் தொழுகின்றாரோ அவருக்கு முழு இரவும் நின்று வணங்கிய நன்மை கிடைக்கும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)

இரண்டு தொழுகைகள் முனாஃபிக்கீன்களுக்கு பாரமாக இருக்கிறது. ஃபஜ்ருடைய ஜமாஅத்தும், இஷாவுடைய ஜாமாஅத்தும். இந்த இரண்டிலும் உள்ள நன்மைகளை அவர்கள் அறிவார்களேயானால், பள்ளிக்கு தவழ்ந்து வந்தாயினும் தொழுகையில் கலந்து விடுவர் என்று அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூஹூரைரா (ரழி). நூல்கள் : புஹாரி, முஸ்லிம், முஅத்தா, அபூதாவூத், திர்மிதீ, நஸயி.

இறந்தவர் அடக்கம் செய்யப்பட்ட இடம் (கப்ரு) மற்றும் குளியலறையைத் தவிர, பூமி முழுவதுமே அல்லாஹ்வை தொழும் இடம் (மஸ்ஜித்) ஆகும். என்று அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூ ஸயீத் அல் குத்ரி(ரழி). நூல் :திர்மிதீ.

தொழுகையில் இமாமுக்கு மறதி ஏற்படும்போது ஆண்கள் ''ஸூப்ஹானல்லாஹ்'' என்று கூறவேண்டும், பெண்கள் கையைத் தட்ட வேண்டும் என்று அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூஹூரைரா (ரழி). நூல்கள் : புஹாரி, முஸ்லிம்.
மனிதர்கள் பள்ளிவாசல்களைக் காட்டி பெருமையடிப்பது யுக முடிவு நாளின் அடையாளங்களில் ஒன்றாகும் என்பது நபிமொழி.

நூல்கள் : நஸயி 682, அபூதாவூத் 379, இப்னுமாஜா 731, அஹ்மத் 11931, 12016,
12079, 12925, 13509.
அல்லாஹ்விற்காக யார் ஒரு பள்ளியை கட்டுகின்றாரோ, அல்லாஹ் அவருக்காக அதுபோன்ற (வீட்டை) சுவர்க்கத்தில் கட்டுகின்றான் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)
பள்ளிவாசல்கள் பாதைகளாக ஆக்கப்படுவதும் யுக முடிவு நாளின் அடையாளம் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர்.
அன்பான சகோதரர்களே!

நமது இனனையத்தில் மொழிமாற்றத்திற்காக
நமது வலைத்தளம் வரும் அனைவரும் இஸ்லாத்தை தெரிந்துக்கொள்வதற்காக
இனி குர்ஆன் மற்றும் ஹதீஸ்கள் ஆங்கிலத்தில் இடம்பெறும்.
எல்லா மக்களும் இஸ்லாத்தை ஏற்று அதன்படி வாழ்ந்து
இரு உலகிலும் வெற்றி பெற வேண்டும் என்பதே நமது பிரார்த்தனை..
எல்லா புகழும் இறைவனுக்கே!

12/23/2010

MTCT news

அன்பான அனைவருக்கும் அழகிய முகமன் கூறுவதோடு
ஊரில் இனிதே நமது இறைப்பணிகள் நடந்து வருகிறது.
இன்னும் நமது பள்ளிக்கு இமாம் வரவில்லை.
இன்ஷால்லாஹ் விரைவில் நல்ல இமாம் வந்துவிடுவார்.
கடந்த முஹர்ரம் பிறை ஒன்பது, மற்றும் பத்தாம் நாட்களில்
சிறப்பான இந்த நோன்பை நோற்கும் நோன்பாளிகளுக்காக
நோன்பு திறக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டது.
அது போல ரமலான் மாதத்தை நினைவுபடுத்தும் விதத்தில்
நோன்பு கஞ்சி காய்ச்சி அனைவருக்கும் வழங்கப்பட்டது.
எல்லா புகழும் இறைவனுக்கே!

12/20/2010

அளவற்ற அருளாளனும்....

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன்.


1. அநாதையைப் பொறுப்பேற்றல்:
"அநாதையைப் பொறுப்பேற்றவரும், நானும் சுவர்க்கத்தில் இவ்வாறு இருப்போம் என்று கூறிய நபி (ஸல்) அவர்கள் தனது ஆள்காட்டி விரலையும், நடு விரலையும் இணைத்துக் காட்டினார்கள்" (புஹாரி).

2. கடமையான தொழுகைக்குப் பின் ஆயத்துல் குர்ஸி ஓதி வருதல்:
"எவர் கடமையான தொழுகைக்குப் பின் 'ஆயத்துல் குர்ஸியை'ஓதி வருவாரோ மரணத்தைத் தவிர அவருக்கு சுவர்க்கம் நுழைய எதுவும் தடையாக இருக்காது" என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள் (நஸாஈ).

ஆயத்துல் குர்ஸி:

"அல்லாஹூ லாஇலாஹ இல்லா ஹூவல் ஹய்யுல் கய்யூம் லா தஃஹுதுஹு ஸினத்துவ்வலா நவ்ம் லஹு மாபிஃஸ் ஸமாவாதி வமாபில் அர்லி மன்தல்லதி யஷ்பஃஉ இன்தஹு இல்லா பி இத்னிஹி யஃலமு மாபயின அய்தீஹிம் வமா கல்பஹும் வலா யுஹீதூன பிஷய்இம்மின் இல்மிஹி இல்லா பிமா ஷாஅ வஸிஅ குர்ஸிய்யுஹுஸ் ஸமாவாதி வல்அர்ல வலா யஊதுஹு ஹிப்லுஹுமா வஹுவல் அலிய்யுல் அழீம" (பகரா 2:255).
اللَّهُ لا إِلَهَ إِلا هُوَ الْحَيُّ الْقَيُّومُ لا تَأْخُذُهُ سِنَةٌ وَلا نَوْمٌ لَهُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الأرْضِ مَنْ ذَا الَّذِي يَشْفَعُ عِنْدَهُ إِلا بِإِذْنِهِ يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ وَلا يُحِيطُونَ بِشَيْءٍ مِنْ عِلْمِهِ إِلا بِمَا شَاءَ وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالأرْضَ وَلا يَئُودُهُ حِفْظُهُمَا وَهُوَ الْعَلِيُّ الْعَظِيمُ
அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. அவன் என்றென்றும் உயிருடன் இருப்பவன். அவனுக்கு சிறு உறக்கமோ, ஆழ்ந்த உறக்கமோ ஏற்படாது. வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் அவனுக்கே உரியன. அவன் அனுமதித்தால் தவிர அவனிடம் யார் தான் பரிந்து பேச முடியும்? அவர்களுக்கு முன்னேயும் பின்னேயும் உள்ளதை அவன் அறிகிறான். அவன் அறிந்திருப்பவற்றில் எதையும் அவர்களால் அறிய முடியாது, அவன் நாடியதைத் தவிர. அவனது ஆசனம் வானங்களையும், பூமியையும் உள்ளடக்கும். அவ்விரண்டையும் காப்பது அவனுக்குச் சிரமமானதன்று அவன் உயர்ந்தவன், மகத்துவமிக்கவன்.

3. வுழூச் செய்த பின் ஓதவேண்டியவை:
'உங்களில் ஒருவர் அழகான முறையில் வுழூச் செய்து பின்பு:
أشهد أن لا اله الاالله وحده لا شريك له واشهد أن محمدا عبده ورسوله
'அஷ்ஹது அல் லா இலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீக லஹு வ அஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வரஸுலுஹு' (வணக்கத்திற்குரிய நாயன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை, அவன் தனித்தவன், அவனுக்கு எந்த இணையுமில்லை என்றும், முஹம்மத் அல்லாஹ்வின் அடியாரென்றும் தூதரென்றும் சான்று பகருகிறேன்) என்று சொல்வாரானால் அவருக்கு சுவர்க்கத்தின் எட்டு வாயில்களும் திறக்கப்படுகின்றன. அவர் விரும்பிய வாயிலால் நுழைய முடியும்' என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்).

4. அஸர் தொழுகையையும் சுபஹ் தொழுகையையும் தொடர்ச்சியாக தொழுது வருதல்:
'எவர் அஸர் தொழுகையையும், சுபஹ் தொழுகையையும் (பேணிப் பாதுகாத்து) தொழுது வருவாரோ அவர் சுவர்க்கம் நுழைந்து விட்டார்' என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி, முஸ்லிம்)

5. ஐவேளை தொழுகையை அதற்குரிய நேரத்தில் தொழுது வருதல்:
"எவர் தொழுகையை அதற்குரிய நேரத்தில் தொழுது வருவாரோ அல்லாஹ்விடத்தில் அவரை சுவர்க்கத்தில் நுழைவிக்கும் ஓர் உடன்படிக்கை இருக்கிறது" என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அஹ்மத், அபூதாவூத், நஸாஈ).

6. ஸலாத்தை பரப்புதல்:
"உங்களில் எவரும் நம்பிக்கை கொள்ளாத வரை, சுவர்க்கம் நுழைய முடியாது. நீங்கள் ஒருவரை ஒருவர் நேசிக்காத வரை விசுவாசம் கொண்டவராகக் கருதப்பட மாட்டீர். உங்களுக்கு மத்தியில் நேசத்தை ஏற்படுத்தும் ஒரு காரியத்தை சொல்லித் தரட்டுமா? உங்களுக்கு மத்தியில் ஸலாத்தை அதிகமாகப் பரப்புங்கள்" என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

7. வுழூச் செய்த பின் இரண்டு ரக்அத் மனப்பூர்வமாகத் தொழுதல்:
'ஒரு முஸ்லிம் அழகான முறையில் வுழூச் செய்து உளப் பூர்வமாக இரண்டு ரக்அத் தொழுவாரானால் அவருக்கு சுவர்க்கம் கடமையாகி விட்டது' என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

8. கல்வியைத் தேடல்:
"எவர் கல்வியைத் தேடி வெளியேறிச் செல்கிறாரோ அவருக்கு அல்லாஹ் சுவர்க்கத்தின் பாதையை இலகு படுத்துகிறான்" என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)

9. பெற்றோருக்கு நன்மை செய்தல்:
அவனது மூக்கு மண்ணை கவ்வட்டும், பின்பு அவனது மூக்கு மண்ணை கவ்வட்டும், பின்பு அவனது மூக்கு மண்ணை கவ்வட்டும். இறைத் தூதரிடம் அவர் யார் எனக் கேட்கப்பட்டது? "பெற்றோர்களின் இருவரையோ அவர்களின் ஒருவரையோ முதிய வயதில் அடைந்து, பின்பு அவன் (அவர்கள் மூலம்) சுவர்க்கம் நுழையவில்லையானால் அவனேயாவான்" என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)

10. நாவையும், மர்மப் பகுதியையும் பேணுதல்:
"எவர் இரு தாடைகளுக்கும், தொடைகளுக்கும் மத்தியில் உள்ளதை பாதுகாக்கிறேன் என பொறுப்பேற்றுக் கொள்கிறாரோ அவருக்கு நான் சுவர்க்கத்தை பொறுப்பேற்றுக் கொள்கிறேன்" என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி).

11. முஅத்தீனின் அழைப்புக்கு மறுமொழி பகருதல்:
"முஅத்தீன் (அழைப்பாளர்) பாங்கு சொல்லும் போது அதை செவிமடுப்பவர் அதே போன்று சொல்ல் வேண்டும், 'ஹய்யஅலஸ் ஸலாஹ், ஹய்யஅலல் பலாஹ்' என்று சொல்லும் போது மாத்திரம் 'லா ஹவ்ல வலா குவ்வத இல்லா பில்லாஹி' என்று சொல்ல வேண்டும், பின்பு முஅத்தீன் 'லா இலாஹ இல்லல்லாஹ்'என்று சொல்லும் போது யார் தூய உள்ளத்துடன் 'லா இலாஹ இல்லல்லாஹ்' என்று பதில் சொல்கிறாரோ அவர் சுவர்க்கம் நுழைந்து விட்டார்' என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)

12. ஒரு நாளைக்கு பன்னிரண்டு ரக்அத் ஸுன்னத் தொழுது வருதல்:
"எவர் ஒரு நாளைக்கு பன்னிரண்டு ரக்அத் ஸுன்னத் தொழுது வருவாரோ அவருக்கு அல்லாஹ் சுவர்க்கத்தில் ஒரு மாளிகையை எழுப்புகிறான். அவைகளாவன: லுஹருக்கு முன் 4ரக்அத்துகள், லுஹருக்குப் பின் 2 ரக்அத்துகள், மஃரிபுக்குப் பின் 2ரக்அத்துகள், இஷாவுக்குப்பின் 2 ரக்அத்துகள், பஜ்ருக்கு முன் 2ரக்அத்துகள்". (திர்மிதி)

13. அல்லாஹ்வின் 99 திருநாமங்களை மனனமிட்டு அதன்படி செயல்படுதல்:
"அல்லாஹ்விற்கு 99 திருநாமங்கள் உள்ளன. எவர் அவைகளை மனனமிட்டு அதன்படி செயல்படுவாரோ அவர் சுவர்க்கம் நுழைந்துவிட்டார்" என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி).

14. நான்கு விடயங்கள் ஒரு சேர பெற்று விட்டவர் சுவர்க்கம் நுழைந்து விட்டார்:
"உங்களில் இன்று நோன்பு நோற்றவர் யார்? என நபி (ஸல்) அவர்கள் குழுமியிருந்த தனது தோழர்களிடம் வினவினார். அபூபக்ர் (ரலி) அவர்கள் அதற்கு நான் என்றார்கள். இன்று உங்களில் நோயாளியை சுகம் விசாரிக்க சென்றது யார்? என அன்னார் வினவினார், அதற்கும் நான் என அபூபக்ர் (ரலி) அவர்கள் கூறினார்கள். இன்று உங்களில் ஜனாஸாவில் கலந்து கொண்டவர் யார்? என அன்னார் கேட்டபோது, அதற்கும் அபூபக்ர் (ரலி) அவர்கள் நான் என்றார்கள். இன்று உங்களில் ஏழைகளுக்கு உணவளித்தவர் யார்? என அன்னார் கேட்டார், அதற்கும் அபூபக்ர் (ரலி) அவர்கள் நான் என்றார்கள். எவருக்கு மேற் கூறப்பட்ட இவ்விடயங்கள் ஒரே நாளில் ஒரு சேர கிடைத்துவிடுமோ அவர் சுவர்க்கத்தில் நுழைந்து விடுவார்" என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்).

15. இணைகற்பிக்காத நிலையில் மரணித்தால் சுவர்க்கம்:
"முஆதே! எவர் அல்லாஹ்வுக்கு எந்த ஒன்றையும் இணையாக்காத நிலையில் மரணிக்கிறாரோ அவர் சுவர்க்கம் நுழைந்து விட்டார்" என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அஹ்மத்).

16."லா இலாஹ இல்லல்லாஹ்" வை உளத்தூய்மையுடன் மொழிதல்:
"எவர் "லா இலாஹ இல்லல்லாஹ்" வணக்கத்திற்குரிய நாயன் அல்லாஹ்வைத் தவிர வேறு எவரும் இல்லை என்பதை உளத்தூய்மையுடன் சொல்கிறாரோ அவர் சுவர்க்கம் நுழைந்து விட்டார்" என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அஹ்மத்).

17. எழுபதாயிரம் பேர் கேள்வி கணக்கின்றி சுவர்க்கம் நுழைவர்:
"நபி (ஸல்) அவர்கள்: எனது சமுதாயத்தில் எழுபதாயிரம் பேர் எந்த விசாரணையும், தண்டனையுமின்றி சுவர்க்கம் நுழைவார்கள் எனக் கூறிவிட்டு வீட்டுக்குள் நுழைந்து விட்டார்கள். அங்கிருந்தோர் தங்களுக்குள் அந்த எழுபதாயிரம் பேர் நபியோடு தோழமை கொண்டு இருந்தவர்கள், மற்றும் சிலர் இல்லை அவர்கள் இஸ்லாத்தில் பிறந்து அல்லாஹ்வுக்கு எந்த ஒன்றையும் இணையாக்காதவர்கள். வீட்டைவிட்டு வெளியில் வந்த நபி (ஸல்) அவர்கள் நீங்கள் எதைப் பற்றி பேசிக் கொண்டிருந்தீர்கள் எனக் கேட்க நடந்தவைகளைக் கூறினர். நபி (ஸல்) அவர்கள் அந்த எழுபதாயிரம் பேர்:

மந்திரித்துப் பார்க்காதவர்கள், மந்திரித்துப் பார்க்குமாறு கோராதவர்கள், பறவை சாஸ்த்திரம் பார்க்காதவர்கள் முழுமையாக அல்லாஹ்வையே சார்ந்திருக்கக் கூடியவர்கள் எனக் கூறினார்கள். அங்கிருந்த ஒருவர் எழுந்து நபியே நானும் அவர்களுடன் இருக்க பிரார்த்தியுங்கள், நீரும் அவர்களுடன் இருப்பீர் எனக் கூறினார்கள். மற்றொருவர் எழுந்து தனக்கும் பிரார்த்திக்குமாறு வேண்டினார், அதற்கு நபியவர்கள் "உக்காஷா"உம்மை முந்திவிட்டார் எனக்கூறினார்கள். (முஸ்லிம்).

"நிச்சயமாக நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்தோருக்கு ஃபிர்தவ்ஸ் எனும் சொர்க்கச் சோலைகள் தங்குமிடங்களாக உள்ளன. அதிலே நிரந்தரமாக இருப்பார்கள். அங்கிருந்து இடம் பெயர்வதை விரும்ப மாட்டார்கள்" (குர்ஆன் 8:107,108).

12/19/2010

அன்புள்ள அனைவருக்கும்
நலம் நலமறிய பேராவல்
நமது வலைத்தளத்தின் கட்டுமான பணிகள் நடப்பதால்
புதிய செய்திகள் பதிவேற்றம் தாமதமாகின..
இன்ஷால்லஹ் புதிய செய்திகளுடன்..

12/05/2010

மழையினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில்

மழையினால் பாதிப்பான மக்களுக்கு








எல்லா புகழும் இறைவனுக்கே!

உணவு வழங்குவதற்காக நமது சிறிய முயற்சி

11/30/2010

உங்கள் சந்தேகங்களுக்கு

அன்பான சகோதரர்களே!

உங்களுக்கு ஏற்படும் மார்க்க சந்தேகங்களுக்கு,
இஸ்லாம் குறித்த ஐயங்களுக்கு,
விளக்கம் கொடுக்க
நமது இனையம் தயாராக உள்ளது.
அதாவது உங்கள் கேள்விகளை
நீங்கள் மின்னஞ்சலில் எழுதி அனுப்பவும்.
உங்களுக்கான பதில்கள் குர் ஆன், சுன்னாவின் அடிப்படையில்
நல்ல பதில்களாக கிடைக்கும்.
இதற்காக மவ்லவி அப்துல் காதிர் உமரீ அவர்கள்
பதில்கள் கொடுக்க இருக்கிறார்கள்..

எல்லா புகழும் இறைவனுக்கே

11/26/2010

இலங்கையில் இருந்து வரும் வாசகர்களுக்கு
அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும்
உங்கள் மீது உண்டாகட்டும்!

அல்குர்ஆனில் இடம்பெற்ற துஆக்கள்

رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنتَ السَّمِيعُ الْعَلِيم

"எங்கள் இறைவனே! எங்களிடமிருந்து (இப்பணியை) ஏற்றுக் கொள்வாயாக, நிச்சயமாக நீயே (யாவற்றையும்) கேட்பவனாகவும் அறிபவனாகவும் இருக்கின்றாய்" . (2:127)

رَبَّنَا وَاجْعَلْنَا مُسْلِمَيْنِ لَكَ وَمِن ذُرِّيَّتِنَا أُمَّةً مُّسْلِمَةً لَّكَ وَأَرِنَا مَنَاسِكَنَا وَتُبْ عَلَيْنَآ إِنَّكَ أَنتَ التَّوَّابُ الرَّحِيمُ

"எங்கள் இறைவனே! எங்கள் இருவரையும் உன்னை முற்றிலும் வழிபடும் முஸ்லிம்களாக்குவாயாக, எங்கள் சந்ததியினரிடமிருந்தும் உன்னை முற்றிலும் வழிபடும் ஒரு கூட்டத்தினரை (முஸ்லிம் சமுதாயத்தை)ஆக்கி வைப்பாயாக, நாங்கள் உன்னை வழிபடும் வழிகளையும் அறிவித்தருள்வாயாக, எங்களை(க் கருணையுடன் நோக்கி எங்கள் பிழைகளை) மன்னிப்பாயாக, நிச்சயமாக நீயே மிக்க மன்னிப்போனும், அளவிலா அன்புடையோனாகவும் இருக்கின்றாய்." (2:128)

رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ

"எங்கள் இறைவனே எங்களுக்கு இவ்வுலகில் நற்பாக்கியங்களைத் தந்தருள்வாயாக. மறுமையிலும் நற்பாக்கியங்களைத் தந்தருள்வாயாக. இன்னும் எங்களை (நரக) நெருப்பின் வேதனையிலிருந்தும் காத்தருள்வாயாக!". (2:201)

رَبَّنَا أَفْرِغْ عَلَيْنَا صَبْرًا وَثَبِّتْ أَقْدَامَنَا وَانصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِينَ

"எங்கள் இறைவா! எங்களுக்குப் பொறுமையைத் தந்தருள்வாயாக! எங்கள் பாதங்களை உறுதியாக்குவாயாக! காஃபிரான இம்மக்கள் மீது (நாங்கள் வெற்றியடைய) உதவி செய்வாயாக!" (2:250)

رَبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوَاجِنَا وَذُرِّيَّاتِنَا قُرَّةَ أَعْيُنٍ وَاجْعَلْنَا لِلْمُتَّقِينَ إِمَامً

எங்கள் இறைவா! எங்கள் மனைவியரிடமும், எங்கள் சந்ததியரிடமும் இருந்து எங்களுக்குக் கண்களின் குளிர்ச்சியை அளிப்பாயாக! இன்னும் பயபக்தியுடையவர்களுக்கு எங்களை இமாமாக (வழிகாட்டியாக) ஆக்கியருள்வாயாக! 25:74

رَبَّنَا لاَ تُؤَاخِذْنَا إِن نَّسِينَا أَوْ أَخْطَأْنَا رَبَّنَا وَلاَ تَحْمِلْ عَلَيْنَا إِصْرًا كَمَا حَمَلْتَهُ عَلَى الَّذِينَ مِن قَبْلِنَا رَبَّنَا وَلاَ تُحَمِّلْنَا مَا لاَ طَاقَةَ لَنَا بِهِ وَاعْفُ عَنَّا وَاغْفِرْ لَنَا وَارْحَمْنَآ أَنتَ مَوْلاَنَا فَانصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِينَ

"எங்கள் இறைவா! நாங்கள் மறந்து போயிருப்பினும், அல்லது நாங்கள் தவறு செய்திருப்பினும் எங்களைக் குற்றம் பிடிக்காதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்களுக்கு முன் சென்றோர் மீது சுமத்திய சுமையை போன்று எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்கள் சக்திக்கப்பாற்பட்ட (எங்களால் தாங்க முடியாத) சுமையை எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் பாவங்களை நீக்கிப் பொறுத்தருள்வாயாக! எங்களை மன்னித்தருள் செய்வாயாக! எங்கள் மீது கருணை புரிவாயாக! நீயே எங்கள் பாதுகாவலன்; காஃபிரான கூட்டத்தாரின் மீது (நாங்கள் வெற்றியடைய) எங்களுக்கு உதவி செய்தருள்வாயாக!" (2:286)

رَبَّنَا لاَ تُزِغْ قُلُوبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَنَا وَهَبْ لَنَا مِن لَّدُنكَ رَحْمَةً إِنَّكَ أَنتَ الْوَهَّابُ

"எங்கள் இறைவனே! நீ எங்களுக்கு நேர் வழியைக் காட்டியபின் எங்கள் இதயங்களை (அதிலிருந்து) தவறுமாறு செய்து விடாதே! இன்னும் நீ உன் புறத்திலிருந்து எங்களுக்கு (ரஹ்மத் என்னும்) நல்லருளை அளிப்பாயாக! நிச்சயமாக நீயே பெருங் கொடையாளியாவாய்! (3:8)

رَبَّنَا إِنَّكَ جَامِعُ النَّاسِ لِيَوْمٍ لاَّ رَيْبَ فِيهِ إِنَّ اللّهَ لاَ يُخْلِفُ الْمِيعَادَ

"எங்கள் இறைவா! நிச்சயமாக நீ மனிதர்களையெல்லாம் எந்த சந்தேகமுமில்லாத ஒரு நாளில் ஒன்று சேர்ப்பவனாக இருக்கின்றாய். நிச்சயமாக அல்லாஹ் வாக்குறுதி மீற மாட்டான்". (3:9)

رَبَّنَا إِنَّنَا آمَنَّا فَاغْفِرْ لَنَا ذُنُوبَنَا وَقِنَا عَذَابَ النَّارِ

"எங்கள் இறைவனே! நிச்சயமாக நாங்கள் (உன்மீது) நம்பிக்கை கொண்டோம்; எங்களுக்காக எங்கள் பாவங்களை மன்னித்தருள்வாயாக! (நரக) நெருப்பின் வேதனையிலிருந்து எங்களைக் காப்பாற்றுவாயாக!"(3:16)

رَبَّنَا آمَنَّا بِمَا أَنزَلَتْ وَاتَّبَعْنَا الرَّسُولَ فَاكْتُبْنَا مَعَ الشَّاهِدِينَ

"எங்கள் இறைவனே! நீ அருளிய (வேதத்)தை நாங்கள் நம்புகிறோம், (உன்னுடைய) இத்தூதரை நாங்கள் பின்பற்றுகிறோம்;. எனவே எங்களை (சத்தியத்திற்கு) சாட்சி சொல்வோருடன் சேர்த்து எழுதுவாயாக!" (3:53)

ربَّنَا اغْفِرْ لَنَا ذُنُوبَنَا وَإِسْرَافَنَا فِي أَمْرِنَا وَثَبِّتْ أَقْدَامَنَا وانصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِينَ

"எங்கள் இறைவனே! எங்கள் பாவங்களையும் எங்கள் காரியங்களில் நாங்கள் வரம்பு மீறிச் செய்தவற்றையும் மன்னித் தருள்வாயாக! எங்கள் பாதங்களை உறுதியாய் இருக்கச் செய்வாயாக! காஃபிர்களின் கூட்டத்தாருக்கு எதிராக எங்களுக்கு நீ உதவி புரிவாயாக". (3:147)

رَبَّنَا مَا خَلَقْتَ هَذا بَاطِلاً سُبْحَانَكَ فَقِنَا عَذَابَ النَّارِ

"எங்கள் இறைவனே! இவற்றையெல்லாம் நீ வீணாகப் படைக்கவில்லை, நீ மகா தூய்மையானவன்; (நரக) நெருப்பின் வேதனையிலிருந்து எங்களைக் காத்தருள்வாயாக!" . (3:191)

رَبَّنَا إِنَّكَ مَن تُدْخِلِ النَّارَ فَقَدْ أَخْزَيْتَهُ وَمَا لِلظَّالِمِينَ مِنْ أَنصَارٍ

"எங்கள் இறைவனே! நீ எவரை நரக நெருப்பில் புகுத்துகின்றாயோ அவரை நிச்சயமாக நீ இழிவாக்கிவிட்டாய்;. மேலும் அக்கிரமக்காரர்களுக்கு உதவி செய்வோர் எவருமில்லை!" . (3:192)

رَّبَّنَا إِنَّنَا سَمِعْنَا مُنَادِيًا يُنَادِي لِلإِيمَانِ أَنْ آمِنُواْ بِرَبِّكُمْ فَآمَنَّا رَبَّنَا فَاغْفِرْ لَنَا ذُنُوبَنَا وَكَفِّرْ عَنَّا سَيِّئَاتِنَا وَتَوَفَّنَا مَعَ الأبْرَارِ

"எங்கள் இறைவனே! உங்கள் இறைவன் மீது நம்பிக்கை கொள்ளுங்கள் என்று ஈமானின் பக்கம் அழைத்தவரின் அழைப்பைச் செவிமடுத்து நாங்கள் ஈமான் கொண்டோம்; "எங்கள் இறைவனே! எங்களுக்கு, எங்கள் பாவங்களை மன்னிப்பாயாக! எங்கள் தீமைகளை எங்களை விட்டும் அகற்றி விடுவாயாக! இன்னும், எங்க(ளுடைய ஆன்மாக்க)ளைச் சான்றோர்களு(டைய ஆன்மாக்களு)டன் கைப்பற்றுவாயாக!". (3:193)

رَبَّنَا وَآتِنَا مَا وَعَدتَّنَا عَلَى رُسُلِكَ وَلاَ تُخْزِنَا يَوْمَ الْقِيَامَةِ إِنَّكَ لاَ تُخْلِفُ الْمِيعَادَ

"எங்கள் இறைவனே! இன்னும் உன் தூதர்கள் மூலமாக எங்களுக்கு நீ வாக்களித்தை எங்களுக்குத் தந்தருள்வாயாக! கியாம நாளில் எங்களை இழிவுபடுத்தாது இருப்பாயாக! நிச்சயமாக நீ வாக்குறுதிகளில் மாறுபவன் அல்ல. (3:194)

رَبَّنَا ظَلَمْنَا أَنفُسَنَا وَإِن لَّمْ تَغْفِرْ لَنَا وَتَرْحَمْنَا لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ

"எங்கள் இறைவனே! எங்களுக்கு நாங்களே தீங்கிழைத்துக் கொண்டோம் - நீ எங்களை மன்னித்துக் கிருபை செய்யாவிட்டால், நிச்சயமாக நாங்கள் நஷ்டமடைந்தவர்களாகி விடுவோம்" . (7:23)

رَبَّنَا لاَ تَجْعَلْنَا مَعَ الْقَوْمِ الظَّالِمِينَ

"எங்கள் இறைவனே! எங்களை (இந்த) அக்கிரமக்காரர்களுடனே சேர்த்து விடாதே" . (7:47)

رَبَّنَا أَفْرِغْ عَلَيْنَا صَبْرًا وَتَوَفَّنَا مُسْلِمِينَ

"எங்கள் இறைவனே! எங்கள் மீது பொறுமையையும் (உறுதியையும்) பொழிவாயாக முஸ்லீம்களாக (உனக்கு முற்றிலும் வழிப்பட்டவர்களாக எங்களை ஆக்கி), மரணிக்கச் செய்வாயாக!. (7:126)

رَبَّنَا لاَ تَجْعَلْنَا فِتْنَةً لِّلْقَوْمِ الظَّالِمِينَ

எங்கள் இறைவனே! அநியாயம் செய்யும் மக்களின் சோதனைக்கு எங்களை ஆளாக்கிவிடாதே!" . (10:85)

رَبَّنَا إِنَّكَ تَعْلَمُ مَا نُخْفِي وَمَا نُعْلِنُ وَمَا يَخْفَى عَلَى اللّهِ مِن شَيْءٍ فَي الأَرْضِ وَلاَ فِي السَّمَاء

"எங்கள் இறைவனே! நாங்கள் மறைத்து வைத்திருப்பதையும், நாங்கள் பகிரங்கப்படுத்துவதையும் நிச்சயமாக நீ அறிகிறாய் ! இன்னும் பூமியிலோ, மேலும் வானத்திலோ உள்ள எந்தப் பொருளும் அல்லாஹ்வுக்கு மறைந்ததாக இல்லை." (14:38)

رَبَّنَا اغْفِرْ لِي وَلِوَالِدَيَّ وَلِلْمُؤْمِنِينَ يَوْمَ يَقُومُ الْحِسَابُ

எங்கள் இறைவா! என்னையும், என் பெற்றோர்களையும், முஃமின்களையும் கேள்வி கணக்குக் கேட்கும் (மறுமை) நாளில் மன்னிப்பாயாக" . (14:41)

رَبَّنَا آتِنَا مِن لَّدُنكَ رَحْمَةً وَهَيِّئْ لَنَا مِنْ أَمْرِنَا رَشَدًا

"எங்கள் இறைவா! நீ உன்னிடமிருந்து எங்களுக்கு ரஹ்மத்தை அருள்வாயாக! இன்னும் நீ எங்களுக்காக எங்கள் காரியத்தை(ப் பலனுள்ள தாக)ச் சீர்திருத்தித் தருவாயாக!" . (18:10)

رَبَّنَا آمَنَّا فَاغْفِرْ لَنَا وَارْحَمْنَا وَأَنتَ خَيْرُ الرَّاحِمِينَ

"எங்கள் இறைவா! நாங்கள் உன் மீது ஈமான் கொள்கிறோம்; நீ எங்கள் குற்றங்களை மன்னித்து, எங்கள் மீது கிருபை செய்வாயாக! கிருபையாளர்களிலெல்லாம் நீ மிகவும் மேலானவன்" . (23:109)

رَبَّنَا وَسِعْتَ كُلَّ شَيْءٍ رَّحْمَةً وَعِلْمًا فَاغْفِرْ لِلَّذِينَ تَابُوا وَاتَّبَعُوا سَبِيلَكَ وَقِهِمْ عَذَابَ الْجَحِيمِ

"எங்கள் இறைவனே! நீ ரஹ்மத்தாலும், ஞானத்தாலும், எல்லாப் பொருட்களையும் சூழந்து இருக்கிறாய்! எனவே, பாவமீட்சி கோரி, உன் வழியைப் பின்பற்றுபவர்களுக்கு, நீ மன்னிப்பளிப்பாயாக. இன்னும் அவர்களை நரக வேதனையிலிருந்தும் காத்தருள்வாயாக! (40:7)

رَبَّنَا اغْفِرْ لَنَا وَلِإِخْوَانِنَا الَّذِينَ سَبَقُونَا بِالْإِيمَانِ وَلَا تَجْعَلْ فِي قُلُوبِنَا غِلًّا لِّلَّذِينَ آمَنُوا رَبَّنَا إِنَّكَ رَؤُوفٌ رَّحِيمٌ

"எங்கள் இறைவனே! எங்களுக்கும், ஈமான் கொள்வதில் எங்களுக்கு முந்தியவர்களான எங்கள் சகோதரர்களுக்கும் மன்னிப்பு அருள்வாயாக, அன்றியும் ஈமான் கொண்டவர்களைப் பற்றி எங்களுடைய இதயங்களில் பகையை ஆக்காதிருப்பாயாக! எங்கள் இறைவனே! நிச்சயமாக நீ மிக்க இரக்கமுடையவன், கிருபை மிக்கவன்" . (59:10)

رَّبَّنَا عَلَيْكَ تَوَكَّلْنَا وَإِلَيْكَ أَنَبْنَا وَإِلَيْكَ الْمَصِيرُ

"எங்கள் இறைவா! உன்னையே முற்றிலும் சார்ந்திருக்கிறோம்; (எதற்கும்) நாங்கள் உன்னையே நோக்ககிறோம் மேலும், உன்னிடமே எங்கள் மீளுதலும் இருக்கிறது," (60:4)

رَبَّنَا أَتْمِمْ لَنَا نُورَنَا وَاغْفِرْ لَنَا إِنَّكَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ

"எங்கள் இறைவா! எங்களுக்கு, எங்களுடைய பிரகாசத்தை நீ முழுமையாக்கி வைப்பாயாக! எங்களுக்கு மன்னிப்பும் அருள்வாயாக! நிச்சயமாக நீ எல்லாப் பொருட்கள் மீதும் பேராற்றலுடையவன்" . (66:8)

رَبَّنَا افْتَحْ بَيْنَنَا وَبَيْنَ قَوْمِنَا بِالْحَقِّ وَأَنتَ خَيْرُ الْفَاتِحِينَ

எங்கள் இறைவா! எங்களுக்கும், எங்கள் கூட்டத்தாருக்குமிடையே நியாயமான தீர்ப்பு வழங்குவாயாக - தீர்ப்பளிப்பவர்களில் நீயே மிகவும் மேலானவன் 7:89

رَبَّنَا اكْشِفْ عَنَّا الْعَذَابَ إِنَّا مُؤْمِنُونَ

எங்கள் இறைவனே! நீ எங்களை விட்டும் இந்த வேதனையை நீக்குவாயாக! நிச்சயமாக நாங்கள் முஃமின்களாக இருக்கிறோம் 44:12

رَبِّ اجْعَلْنِي مُقِيمَ الصَّلاَةِ وَمِن ذُرِّيَّتِي رَبَّنَا وَتَقَبَّلْ دُعَاء

("என்) இறைவனே! தொழுகையை நிலைநிறுத்துவோராக என்னையும், என்னுடைய சந்ததியிலுள்ளோரையும் ஆக்குவாயாக! எங்கள் இறைவனே! என்னுடைய பிரார்த்தனையையும் ஏற்றுக் கொள்வாயாக!" (14:40)

11/18/2010









தியாக திருநாள்

தியாக திருநாள் வாழ்த்துக்கள்!
எல்லா புகழும் இறைவனுக்கே!

எல்லாம் வல்ல அல்லாஹ்வின் உதவியால்
நமது பள்ளியில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை
சிறப்பாக நடைபெற்றது. காலை 7.15 நிமிடத்திற்கு
தொழுகை என அறிவிப்பு கொடுத்து,
அதன்படி மக்கள் வந்தனர்.



சரியாக 7.20 மணிக்கு தொழுகை விளக்கம் கொடுத்து தொழுகை நடந்தது.
தொடர் மழையின் காரனமாக திடலில் தொழுகை வைக்க முடியவில்லை,
ஆகவே, தொழுகை பள்ளியில் நடைபெற்றது.
புதிய பள்ளியில் ஆண்களும், பழைய பள்ளியில் பெண்களும்,
தொழுதனர். பெண்கள் அதிகமாக வந்ததால் கூடுதலாக பெண்களுக்கு
இடங்கள் அர்ரஹ்மான் பள்ளியின் வகுப்பறையில் ஏற்பாடு செய்யப்பட்டது.
தொழுகை நடத்த சகோ. மீரான் அவர்கள் வந்து இருந்தார்.
எல்லா புகழும் இறைவனுக்கே!

தியாக திருநாள் வாழ்த்துக்கள்







11/16/2010

எல்லாபுகழும் இறைவனுக்கே

இன்ஷால்லாஹ் நாளை புதன்கிழமை பெரு நாள்
தியாக திருனாள் கொண்டாட தயாராகி வருகிறது
அனைவருக்கும் எமது தியாக திருனாள் வாழ்த்துக்கள்

11/06/2010

பல்வேறு நாடுகளிலிருந்து
நமது இனையம் வரும் வாசகர்களின்
வருகை பதிவு ஒரு பார்வை

வெள்ளிக்கிழமை

வெள்ளிக்கிழமை குத்பா உரையை
சகோ. அப்துல்ஸமது அவர்கள் உரையாற்றினார்கள்.
இந்த உரையில் சமூக நலங்களில் நமது பங்கு,
அதாவது சமுதாய காரியங்களில் நமது பங்களிப்பு என்ன என்பதை
நினைவு கூர்ந்து மிக அற்புதமான ஒரு உரையை தந்தார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்..
இந்த உரையில் நல்ல பல தகவல்களை தந்தார்கள்.
இன்று இந்த உலகில் எது நடந்தாலும் நமக்கென்ன என்று செல்லாமல்,
அனைத்து காரியங்களிலும் நம்மால் முடிந்த அளவு நல்லவைகள் செய்யவேண்டும் என
வலியுறுத்தி நல்ல உரையாக இருந்தது.
வழக்கம்போல பள்ளியில் நல்ல கூட்டம் இருந்தது.

11/03/2010

எல்லா புகழும் இறைவனுக்கே!

அன்பானவர்களே!
நமது ஊரில் நமக்காக இதுவரை
ஒரு இஸ்லாமிய நூல் நிலையம் இல்லாமல் இருக்கிறது.
எல்லா காலங்களிலும் எல்லா நேரங்களிலும்
இஸ்லாமிய கல்வியின் அவசியம்,
அதன் தேடல் ஏற்பட்டுள்ள இன்றைய காலத்தில்
ஒரு நூல் நிலையம் இறைவனின் துனையோடு ஏற்படுத்த
முடிவு செய்துள்ளோம்.
இதற்காக உங்களிடம் இருந்து பங்களிப்புகளை எதிர்பார்க்கிறோம்.
இதன் பலன்கள் நிரந்தர நண்கொடையாக மறுமையில் எதிர்பார்க்கலாம்.

கூடுதல் விபரங்கட்கு
அன்வர்தீன்
9043 83 1275

ஒரு கணவின் கதை

அன்பான கொள்கை சகோதரர்களே!
நமக்காக ஒரு இனையத்தை ஏற்படுத்தி
அதில் நமது செய்திகள் வெளியிட்டு
பரந்து வாழும் நமது சகோதரர்களை இனைக்கும் ஒரு உறவுபாலமாக,
ஒரு வலைத்தளம் ஏற்படுத்தவேண்டும் என்ற நீண்ட நாள் நினைவில்,
எல்லாம் வல்ல இறைவனின் துணையோடு,
நாம் கண்ட கணவு வீண்போகாமல்
நமக்காக ஒரு இனையத்தை ஏற்படுத்தினோம்.
நமது சகோதரர்கள் எங்கு இருப்பினும்
ஒரு தொடர்பு அவர்களோடு நமக்கும்
அவர்களுக்கு ஒரு தொடர்பு நம்மோடும் இருக்கிறது.
இன்னும் சில நேரங்களில்
நமது வலைப்பதிவுக்கு வந்த வாசகர்களின் எண்ணிக்கை
5000த்தை தொட இருக்கிறது.

இந்த நல்வாய்ப்பினை ஏற்படுத்தி
இரு உலகிலும் நற்பாக்கியங்கள்!
எல்லாம் வல்ல இறைவனுக்கே
எல்லா புகழும்!!!

வெள்ளிக்கி௯ழமை குத்பா உரை

இந்த வார குத்பா உரையை
சகோ ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் உரையாற்றினார்கள்.
இந்த உரையில் ஸஹாபாக்களை நினைவு கூர்ந்தார்.
ஸஹாபாக்கள் அண்ணலாருடன் கொண்டிருந்த நேசத்தையும்
அண்ணலார் ஸஹாபாக்களுடன் கொண்டிருந்த நேசத்தையும்
அழகாக எடுத்துக்காட்டினார். நல்ல ஒரு உருக்கமான உரையாக இருந்தது.
அல்ஹம்துலில்லாஹ்.

10/26/2010

ஜப்பான் மற்றும் தைவானில், ஐரோப்பிய ராஜ்ஜியங்களில்
இருந்து புதியதாக வரும் சகோதரர்களை
வரவேற்கிறோம்.

10/24/2010

வெள்ளிக்கிழமை குத்பா உரை

இந்த வாரம் ஜும்மா பயானுக்காக
சகோ. மீரான் முகைதின் ஸலாஹி அவர்கள் வந்து இருந்தார்கள்
இந்த நாவின் பேச்சு நாவடக்கம் பற்றி நல்ல உரை நிகழ்த்தினார்கள்.
நமது நாவிலிருந்து வரும் பேச்சில் தான்
நமது நடவடிக்கைகள் மரியாதை அமையும் என
நல்ல ஒரு குத்பா உரையாக இருந்தது.
சில நபிகாளரின்(ஸல்) பொன்மொழிகளையும் நினைவுகூர்ந்தார்.

எவரது கரத்தினாலும், நாவினாலும்
பிற முஸ்லிம்கள் பாதுகாப்பு பெறுகிறார்களோ
அவரே உண்மையான முஸ்லிம் ஆவார்.

பள்ளியில் வழக்கம்போல நல்ல கூட்டம் இருந்தது.
ஏராளனமான பெண்களும் வந்து இருந்தனர்.

10/22/2010

அழகிய ஒரு துஆ

'அல்லாஹும்ம! இன்னீ அஊது பிக்க மின் ஸவாலி
நி;.மத்திக்க, வதஹவ்வுலி ஆ;.பியத்திக்க,
வ ;.புஜாஅத்தி நிக்மத்திக்க வ ஜமீஇ சகத்திக்க'

அப்துல்லாஹ் பின் உமர்(ரலி)
முஸ்லிம் 5289

இறைவா! உன் அருட்கொடை என்னை விட்டு நீங்குவதில் இருந்தும்,
நீ வழங்கிய நன்மைகள் என்னை விட்டு மாறிவிடுவதில் இருந்தும்,
திடீரென உனது தண்டனை வருவதில் இருந்தும்,
உனது கோபத்திற்குரிய அனைத்தில் இருந்தும்
உன்னிடம் நான் பாதுகாப்புத் தேடுகிறேன் என்று
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களின் பிரார்த்தித்து வந்தார்கள்.

10/18/2010

பள்ளிவாசலுக்கு.....

தஞ்சை மாவட்டத்தில்
ஏகத்துவ கொள்கையுடன் இயங்கிவரும்
பள்ளிகூடத்திற்கு அரபி ஆசிரியரும்,
பள்ளிவாசலுக்கு இமாம் மற்றும் ,முஅத்தின் (மோதினார்) தேவை.

மேலதிக விபரங்கட்கு
cell 090033 85399

நல்லறம் செய்திட நாள் நட்சத்திரமில்லை

நபி (ஸல்) அவர்கள் ஸபர் மாதத்தில் நோய்வாய்ப் பட்டிருந்ததால் அந்த மாதம் பீடை மாதம் என்ற நம்பிக்கை தமிழக முஸ்லிம்களில் சிலரிடம் இருந்து வருகின்றது. இந்த மாதத்தில் திருமணம் போன்ற நற்காரியங்கள் செய்யக்கூடாது என்றும் எண்ணிக் கொண்டிருக்கின்றனர். இப்படி நம்புவதற்கும் அதன் அடிப்படையில் செயல்படுவதற்கும் அனுமதி உண்டா என்று குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் ஆராய்வதற்கு முன் இது ஒரு மூட நம்பிக்கைதான் என்பதற்குறிய காரணங்களைப் பார்ப்போம்.

ஒரு நேரம், ஒரு நாள் ஒரு மாதம் எல்லோருக்கும் நன்மை செய்யக்கூடியது என்று நம்புவதும், அல்லது எல்லோருக்கும் கெடுதி செய்யகூடியது என்று நம்புவதும் இறைவன் ஏற்படுத்தியுள்ள நியதிக்கு மாற்றமாகும். ஒருவருக்கு மிகவும் நன்மைகள் வந்தடைந்த ஒருநாள் இன்னொருவருக்கு கேடுகள் வந்தடைந்த நாளாக இருப்பதைத்தான் நடைமுறையில் காண முடிகிறது. ஒரு நாளில் ஒருவருக்கு அழகான குழந்தை பிறந்திருக்கும். அதே நாளில் அவருக்கு பக்கத்து வீட்டில் உள்ள ஒருவர் மரணமடைந்திருப்பார். நல்ல நாள் என்று ஒன்று இருக்குமானால் உலகத்தில் வாழுகின்ற அனைவருக்கும் அந்த நாளில் வெறும் நன்மைகளாகவே நடக்க வேண்டும். ‘கெட்ட நாள் என்று ஒன்று இருக்குமானால் உலகத்து மாந்தர் அனைவருக்கும் அந்த நாளில் கெட்டவைகள் மட்டுமே சம்பவிக்க வேண்டும்.

எந்த நாளாக இருந்தாலும் அதில் சிலருக்கு நல்லவை ஏற்படுவதும், சிலருக்குக் கெட்டவைகள் ஏற்படுவதும் தான் நடைமுறை உண்மை. இதைப் புரிந்துகொள்ள பெரிய ஆதாரம் எதுவும் தேவையில்லை. தங்கள் வாழ்க்கையிலேயே அனைவரும் அனுபவ ரீதியாக உணர முடியும். முஹர்ரம் மாதம் பத்தாம் நாளை எடுத்துக் கொள்வோம். அந்த நாளில் ஹுஸைன்(ரலி) அவர்கள் படுகொலை செய்யப்பட்டதினால் அது கெட்ட நாள் என்று கூறினால் அதே நாள் மூஸா நபிக்கும் அவர்களைப் பின்பற்றிய மூமின்களுக்கும் நல்ல நாளாக அல்லவா இருந்துள்ளது. ரபீயுல் அவ்வல் பிறை 12ஐக் கவனியுங்கள் நபி (ஸல்) அவர்கள் அன்றுதான் பிறந்தார்கள் என்பதற்காக அது நல்ல நாள் என்று சொன்னால் அதே நாளில் தானே நபி (ஸல்) அவர்கள் மரணமடைந்திருக்கிறார்கள்.

மனிதர்களுக்கு அல்லாஹ் எதை விதித்திருக்கிறானோ அதுதான் நடக்கும். நாட்களால் அதில் எந்த மாறுதலையும் செய்ய முடியாது என்பதற்கு இவை தெளிவான சான்றுகளாகும். ஸபர் மாதத்தில் நபியவர்கள் நோய்வாய்ப்பட்டதினால் அந்த மாதமே பீடை மாதம் என்றால் (ஒரு கருத்துப்படி) ஸபர் மாதத்தில் அவர்கள் மேற்கொண்டுள்ள ஹிஜ்ரத் பயணம் மகத்தான வெற்றியை ஏற்படுத்தியுள்ளதே! அந்தப் பயணத்திற்குப் பின்புதான், இஸ்லாம் தனக்கென ஒரு நாட்டையே நிறுவ முடிந்தது.

பீடை மாதம் என்று ஒதுக்கிவிட்டு மற்ற நாட்களில் நம்மவர்கள் எல்லா நன்மையான காரியங்களையும் செய்கின்றனர் செய்தனர். தேர்ந்தெடுத்து நல்ல நாட்களில் நடத்தப்பட்ட பல திருமணங்கள் ஏன் ரத்து செய்யப்படுகின்றன? நாள் பார்த்து திருமணம் செய்த பல பெண்கள் விதவைகளாக இருப்பது ஏன்? நல்ல நாள் பார்த்துத் துவங்கப்பட்ட பல வியாபார நிறுவனங்கள் நஷ்டம் அடைந்தது ஏன்? நாள் பார்த்து அஸ்திவாரம் இட்டு நாள் பார்த்து திறப்பு விழா நடத்திய பல கட்டிடங்கள் இருந்த இடம் தெரியாமல் போனது ஏன்? அந்த நம்பிக்கையில் இருப்போர் பதில் சொல்ல வேண்டிய கேள்விகள் இவை.

சின்ன நகஸு, பெரிய நகஸூ என்றெல்லாம் கனித்துத் மக்களுக்குத் தொண்டு? செய்து வருகின்ற ஜோசியர்களை, பால்கிதாபு, மோர்கிதாபு என்று சொல்லி மக்களை மடமையிலேயே நீடித்திருக்க வைக்கும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளவர்களைக் கொஞ்சம் கவனியுங்கள்! இவர்கள் தங்களுக்கு மிகச் சிறந்த நல்ல நாளாகக் கணித்து அந்த நாளில் தங்கள் காரியங்களைத் துவக்கி நல்ல நிலையில் இருக்கிறார்களா? குறைந்த பட்சம் நல்ல நாளில் ஒரு தொழிலைத் துவக்கி மிகப்பெரும் செல்வந்தர்களாக மாறியுள்ளார்களா? இல்லையே! மாறாக மக்களிடம் ஐந்தையும் பத்தையும் கேட்டுப் பெறுகின்ற நிலமையில் தானே அவர்கள் உள்ளனர். பால்கிதாபு என்பதும் நகஸு என்று சொல்வதும் பித்தலாட்டம் என்பதற்கு இதைவிட வேறு என்ன ஆதாரம் வேண்டும்?

இதே ஸபர் மாதத்தின் இறுதி புதனில் தான் நபியபவர்கள் குணமடைந்து குளித்தார்களாம். அதனால் நாமும் ஒடுக்கத்துப்புதனில் குளித்து நமது முஸீபத்தை நீக்க வேண்டுமாம். இந்த நம்பிக்கையின் பெயரால் நாட்டில் இன்னும் பல மடமைகளும் நாட்டில் நடக்கின்றன.

ஓலை, மாயிலை என்று பல பெயர்களால் சில வாசகங்களை எழுதி கரைத்துத் குடிக்க ஒன்று, தலையில் தெளித்துக் கொள்ள ஒன்று, வீடு வாசல்களில் தெளிக்க வேறொன்று என்று மக்களை ஏமாற்றி வயிறு வளர்க்க சிலர் போட்ட திட்டமே ஒடுக்கத்து புதன் என்பது. அன்றைய தினத்தில் கடற்கரைக்கு சென்று முஸீபத்தை நீக்குகிறோம் என்று நீராடி வருவதும் சில பகுதிகளில் நடந்து வருகிறது. அன்றைய தினத்தில் நிறைய முஸீபத்துகள் இறங்கிக் கொண்டிருக்கிறதாம்! கடலில் குளித்தால் அது நீங்குமாம். இது போன்ற சடங்குகளை அறவே வெறுத்து வருகின்ற எத்தனையோ நாடுகளில் முஸீபத்துக்குப் பதிலாக செல்வங்கள் குவிந்துள்ளது ஏன்? என்றெல்லாம் மக்கள் இன்று சிந்திக்கத் துவங்கிவிட்டார்கள்.

அன்றை அரபிகள் ஷவ்வால் மாதத்தைப் பீடை மாதமாகக் கருதி வந்தனர். அந்த நாட்களில் எந்த நல்ல நிகழ்ச்சியும் நடத்தாதிருந்தனர். இந்த மடமை எண்ணத்தைத் தகர்த்தெரியும் வகையில் அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் “நான் ஷவ்வாலில் தான் மணமுடிக்கப்பட்டேன். ஷவ்வாலில் தான் என் இல்லறத்தைத் துவங்கினேன். நபி(ஸல்) அவர்களுக்கு என்னைவிட உகந்த மனைவியாக யார் இருந்தார்கள்?” என்று கூறினார்கள். (முஸ்லிம், அஹ்மத்)

நீங்கள் பீடை எண்ணி இருக்கின்ற ஷவ்வாலில் திருமணம் முடித்த நான் எவ்வளவு மகிழ்ச்சியோடு வாழ்ந்திருக்கிறேன் என்று அன்னை ஆயிஷா(ரலி) அவர்கள் கேட்டது இன்று ஸபரை பீடையாகக் கருதுவோர்க்கு பொருந்தாதா? சிந்தியுங்கள்!

S.கமாலுத்தீன் மதனி

பித்ராவின் பயணங்களில்

10/07/2010

லுஹருடைய முன் சுன்னத்

லுஹருடைய முன் சுன்னத்

நான் நபி صلى الله عليه وسلم அவர்களுடன் லுஹருக்கு முன் இரண்டு ரகஅத்துகளையும், லுஹருக்கு பின் இரண்டு ரகஅத்துகளையும், மக்ரிபுக்கு பின் இரண்டு ரக அத்துகளையும், இஷாவுக்கு பின் இரண்டு ரகஅத்துகளையும், ஜும்ஆ வுக்குப் பின் இரண்டு ரகஅத்துகளையும் தொழுது இருக்கிறேன். மக்ரிப், இஷா (தொழுகையினுடைய சுன்னத்)தொழுகைகளை நபி صلى الله عليه وسلم அவர்களது வீட்டில் தொழுது இருக்கிறேன். அறிவிப்பவர் இப்னு உமர்[ரலி] நூல்: புகாரி

நான் ஆயிஷா[ரலி] அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் صلى الله عليه وسلم அவர்களின் உபரியான வணக்கத்தை பற்றி வினவினேன். அதற்கு அவர்," நபி صلى الله عليه وسلم அவர்கள் என்னுடைய வீட்டில் லுஹருக்கு முன் நான்கு ரகஅத்துகள் தொழுது விட்டு, புறப்பட்டுச் சென்று மக்களுக்குத் தொழவிப்பார்கள். பிறகு என்னுடைய வீட்டுக்கு வந்து இரு ரகஅத்துகள் தொழுவார்கள்" என்று விளக்கமளித்தார்கள். அறிவிப்பவர் :அப்துல்லாஹ் பின் ஷிக்கீர்[ரலி] நூல் : முஸ்லிம்

அல்லாஹ்வின் தூதர் صلى الله عليه وسلم அவர்கள் லுஹர் தொழுகைக்குமுன் நான்கு ரகஅத்து களையும், ஃபஜ்ரு தொழுகைக்கு முன் இரண்டு ரகஅத்துகளையும் விடவே மாட்டார்கள். அறிவிப்பவர் : ஆயிஷா[ரலி] நூல் : புகாரி

நபி صلى الله عليه وسلم அவர்கள் லுஹருக்கு முன்பு நான்கு ரகஅத்துகளைத் தொழவில்லை என்றால் அந்நான்கு ரகஅத்துகளை லுஹருக்குப் பின் தொழுவார்கள். அறிவிப்பவர் : அயிஷா[ரலி] நூல் : திர்மிதி


லுஹருடைய பின் சுன்னத்

நான் நபி صلى الله عليه وسلم அவர்களுடன் லுஹருக்கு முன் இரண்டு ரகஅத்துகளையும், லுஹருக்கு பின் இரண்டு ரகஅத்துகளையும், மக்ரிபுக்கு பின் இரண்டு ரகஅத்துகளையும், இஷாவுக்கு பின் இரண்டு ரக அத்துகளையும், ஜும்ஆவுக்குப் பின் இரண்டு ரகஅத்துகளையும் தொழுது இருக்கிறேன். மக்ரிப், இஷா (தொழுகையினுடைய சுன்னத்) தொழுகைகளை நபி صلى الله عليه وسلم அவர்களது வீட்டில் தொழுது இருக்கிறேன். அறிவிப்பவர் : இப்னு உமர்[ரலி] நூல் : புகாரி

யார் லுஹருக்கு முன்பு நான்கு ரகஅத்துகளும் பின்பு நான்கு ரகஅத்துகளும் தொழுகின்றாரோ அவருக்கு நரகத்தை அல்லாஹ் தடுத்து விடுகிறான் என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் கூற நான் செவியுற்றேன். அறிவிப்பவர் : உம்மு ஹபீபா[ரலி] நூல் : திர்மிதி

அஸருடைய முன் சுன்னத்

நபி صلى الله عليه وسلم அவர்கள் அஸருக்கு முன் நான்கு ரகஅத்துகள் தொழுபவர்களாக இருந்தனர். அறிவிப்பவர் : அலி[ரலி] நூல் : திர்மிதி, நஸயீ, அபூதாவூத், இப்னுமாஜா

நபி صلى الله عليه وسلم அவர்கள் அஸருக்கு முன் இரண்டு ரகஅத்துகள் தொழுதார்கள். அறிவிப்பவர்: அலி[ரலி] நூல்: அபூதாவூத்

மக்ரிபுடைய முன் சுன்னத்

மக்ரிபுக்கு முன் இரண்டு ரகஅத்துகள் தொழுங்கள்! மஃரிபுக்கு முன் இரண்டு ரகஅத்துகள் தொழுங்கள்! விரும்புகிறவர் மஃரிபுக்கு முன் இரண்டு ரகஅத்துகள் தொழுங்கள்! என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் முகப்பல்(ரலி) நூல்:அஹ்மத்,புகாரி,அபூதாவூத்

நபி صلى الله عليه وسلم அவர்கள் மக்ரிபு தொழுகைக்கு முன் இரண்டு ரகஅத்துகள் தொழுதார்கள். அறிவிப்பவர் : அப்துல்லஹ் பின் முகப்பல்[ரலி]நூல் : இப்னு ஹிப்பான்

மஃரிபுடைய பின் சுன்னத்

நபி صلى الله عليه وسلم அவர்கள் மக்ரிபுக்குப் பின் இரண்டு ரகஅத்துகள் தொழுபவர்களாக இருந்தனர். அறிவிப்பவர்: ஆயிஷா[ரலி] நூல்: முஸ்லிம்,அஹ்மத், அபூதவூத்,திர்மிதி

இஷாவுடைய முன் சுன்னத்

இஷாவுக்கு முன்சுன்னத் உள்ளதா என்பதற்கு நேரடியாக எந்த ஆதாரத்தையும் காண முடியவில்லை. ஆயினும் ஒவ்வொரு தொழுகைக்கும் முன் சுன்னத் இருக்கின்றது என்று பொதுவாக ஹதீஸ் உள்ளதால் அதனடிப்படையில் இஷாவுக்கு முன் சுன்னத் தொழலாம். ஒவ்வொரு பாங்குக்கும் இகாமத்துக்கும் இடையில் ஒரு தொழுகை உண்டு. விரும்பியவர்கள் தொழலாம் என்று அல்லாஹ்வின் தூதர் صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் முகப்பல்[ரலி] நூல் : புகாரி, முஸ்லிம், திர்மிதி, நஸயி

இஷாவுக்குப் பின் சுன்னத்

நபி صلى الله عليه وسلم அவர்கள் இஷாவுக்குப்பின் இரண்டு ரகஅத்துகள் தொழுபவர்களாக இருந்தனர். அறிவிப்பவர்: இப்னு உமர்[ரலி] நூல்: புகாரி,முஸ்லிம், அஹ்மத்.


source : readislam

ஃபஜ்ருடைய முன் சுன்னத்

கடமையான தொழுகையின் முன் பின் சுன்னத்துகள்

அல்லாஹ்வின் தூதர் صلى الله عليه وسلم அவர்கள் ஒவ்வொரு கடமையான தொழுகைக்கும் முன்போ அல்லது பின்போ வழமையாக சுன்னத் தொழுகைகளைத் தொழுது வந்துள்ளனர்.இவை தவிர குறிப்பிட்ட பெயரையுடைய, உதாரணமாக லுஹா தொழுகை,மழைத் தொழுகை இன்னும் இது போன்ற பெயர்களில் அமைந்த சுன்னத் தொழுகைகளும் உள்ளன.

ஃபஜ்ருடைய முன் சுன்னத்

ஃபஜ்ருடைய முன் சுன்னத் இரண்டு ரகஅத்துக்களாகும். நபி صلى الله عليه وسلم அவர்கள் பஜ்ருடைய சுன்னத் அளவிற்கு வேறு எந்த உபரியான தொழுகை க்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்ததில்லை. அறிவிப்பவர்: ஆயிஷா [ரலி] நூல்: புகாரி

பஜ்ருடைய இரண்டு ரகஅத்துகள் இந்த உலகம் இன்னும் அதில் உள்ளவை அனைத்தை விடவும் மிகச் சிறந்தவையாகும் என்று நபி صلى الله عليه وسلم] அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அயிஷா[ரலி] நூல் : முஸ்லிம்

அல்லாஹ்வின் தூதர் صلى الله عليه وسلم அவர்கள் பஜ்ருக்கு முன்சுன்னத் தொழும் விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்தி உள்ளதாலும், அத்தொழுகையை சிறப்பித்துக் கூறியுள்ளதாலும் பஜ்ருடைய முன் சுன்னத்தை நாம் தவறவிடாமல் கவனமாகத் தொழ வேண்டும்.

அல்லாஹ்வின் தூதர் صلى الله عليه وسلم அவர்கள் பஜ்ருடைய இரண்டு ரகஅத்துகளைத் தொழுபவர்களாக இருந்தனர். அவ்விரண்டு ரகஅத்துகளிலும் சூரத்துல் பாத்திஹாவை ஒதினார்களா என்று நான் எண்ணுமளவுக்கு சுருக்கமாகத் தொழுவார்கள். அறிவிப்பவர் : அயிஷா[ரலி] நூல்: புகாரி முஸ்லிம்

அல்லாஹ்வின் தூதர் صلى الله عليه وسلم அவர்கள் இகாமத் தனது காதுகளில் விழுந்து விட்டதை போல் சுபுஹ் தொழுகையின் முன் இரண்டு ரகஅத்துகளை (விரைந்து)தொழுவார்கள். அறிவிப்பவர் : இப்னு உமர்[ரலி] நூல் : புகாரி

பஜ்ருடைய சுன்னத்தில் ஒத வேண்டியவை

அல்லாஹ்வின் தூதர் صلى الله عليه وسلم அவர்கள் பஜ்ருடைய இரண்டு ரக அத்துகளில் குல்யா அய்யுஹல் காஃபிரூன் மற்றும் குல்ஹு"வல்லாஹு" ஆகிய அத்தியாயங்களை ஒதுவார்கள். அறிவிப்பவர் : அபூஹ"ரைரா[ரலி] நூல்: முஸ்லிம்

வலப்புறமாகப் படுக்கவேண்டுமா?

அல்லாஹ்வின் தூதர் صلى الله عليه وسلم அவர்கள் ஃபஜ்ருடைய சுன்னத் தொழுததும் வலப்புறம் சாய்ந்து படுத்துக் கொள்வார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா[ரலி] நூல்: புகாரி

நபி صلى الله عليه وسلم அவர்கள் ஃபஜ்ருடைய சுன்னத் தொழுததும் நான் விழித்திருந்தால் என்னுடன் பேசிக் கொண்டிருப்பார்கள். இல்லாவிட்டால், தொழுகைக்கு அழைக்கும் வரை படுத்துக்கொள்வார்கள். அறி: ஆயிஷா [ரலி] நூல் : புகாரி

பஜ்ருக்கு முன் தொழாவிட்டால்

அல்லாஹ்வின் தூதர் صلى الله عليه وسلم அவர்கள் ஒருவரை சுபுஹ"க்குப் பின் இரண்டு ரக அத்துகள் தொழக் கண்டார்கள் அப்போது அவர்கள்,"சுபுஹ் தொழுகை இரண்டு ரகஅத்துகள்தான்" என்று சொன்னார்கள். அதற்கு அவர்,"சுபுஹ"க்கு முந்திய இரண்டு ரகஅத்துகளைத் தொழவில்லை, அவ்விரண்டையும் இப்போது தொழுதேன்" என்று பதிலளித்ததும், நபி صلى الله عليه وسلم அவர்கள் மவ்னமாகி விட்டார்கள். அறிவிப்பவர் : கைஸ் பின் அம்ர்[ரலி] நூல்: திர்மிதீ, அபூதாவூத், இப்னுமாஜா

யார் ஃபஜ்ருடைய(சுன்னத்) இரண்டு ரகஅத்துகளைத் தொழவில்லையோ அவர் அவ்விரு ரகஅத்துகளையும் சூரியன் உதித்தபின் தொழுவாராக என்று அல்லாஹ்வின் தூதர் صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹ"ரைரா[ரலி] நூல்: திர்மிதி

உபரியான வணக்கங்கள்

அல்லாஹ் தன்னை வணங்குவதற்காக இந்த மனித சமுதாயத்திற்கு சில வணக்கங்களைக் கடமையாக ஆக்கியுள்ளான். இந்தக் கடமையான வணக்கங்களை இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட ஒவ்வொருவரும் கண்டிப்பாக நிறைவேற்றியே ஆக வேண்டும். அவ்வாறு நிறைவேற்றும் போது அதற்காக அல்லாஹ் நற்கூலியும், அவற்றை நிறைவேற்றாதவர்களுக்கு தண்டனையும் வழங்குகின்றான்.

நஜ்த் என்ற ஊரைச் சேர்ந்த ஒருவர் தலை பரட்டையாக நபி صلى الله عليه وسلم அவர்களிடம் வந்தார். அவருடைய குரல் செவியில் ஒலித்தது. ஆனால் அவர் என்ன சொல்கிறார் என்று புரியவில்லை. நபி (صلى الله عليه وسلم அவர்களின் அருகில் வந்ததும் இஸ்லாத்தைப்பற்றி கேட்டார். அப்போது நபி صلى الله عليه وسلم அவர்கள், "இஸ்லாம் (என்பது) இரவிலும் பகலிலும் ஐவேளை தொழுகைகள்" என்றார்கள். உடனே அவர், "அந்தத் தொழுகையைத் தவிர வேறு (தொழுகை) ஏதாவது என் மீது கடமை உண்டா?" என்றார். அதற்கு அவர்கள்,"நீர் விரும்பிச் செய்தாலே ஒழிய வேறில்லை"என்றார்கள்

அடுத்து, "ரமலான் மாதம் நோன்பு நோற்பதும் ஆகும் "என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள். உடனே அவர்,அதைத் தவிர வேறு ஏதேனும் (நோன்பு) என் மீது கடமை உண்டா?" என்றார். அதற்கு அவர்கள், "நீர் விரும்பி செய்தாலே ஒழிய வேறில்லை என்றார்கள்.

அவரிடம் நபி صلى الله عليه وسلم அவர்கள் ஸகாத் பற்றியும் சொன்னார்கள். அதற்கு அவர், "அதைத் தவிர வேறு (ஸகாத்) ஏதும் என் மீது கடமையா?" என்றார். அதற்கு அவர்கள் "நீராக விரும்பிச் செய்தாலே தவிர வேறு தர்மங்கள் கடமை இல்லை" என்றார்கள். உடனே அந்த மனிதர், "அல்லாஹ்வின் மீது ஆணையாக! நான் இவற்றை விட கூட்டவும் மாட்டேன், குறைக்கவும் மாட்டேன்" என்று கூறியவாறு திரும்பிச் சென்று விட்டார். அப்போது நபி صلى الله عليه وسلم அவர்கள், "இவர் கூறியதற்கு ஏற்ப நடந்து கொண்டால் வெற்றி அடைந்து விட்டார்" என்று கூறினார்கள். அறிவிப்பவர் : தல்ஹா பின் உபைதுல்லாஹ்(ரழி)நூல் : புகாரி

இந்த ஹதீஸில் கடமையைத்தவிர வேறு எதையும் செய்ய மாட்டேன் என்று கூறிய ஒருவரை வெற்றியாளர் என நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறுவதிலிருந்து கடமையான வணக்கங்களை ஒருவர் நிறைவேற்றுவதே மறுமையில் வெற்றி பெறுவதற்குப் போதுமானது என்பதை அறிய முடிகின்றது. எனினும் ஒரு மனிதர் அல்லாஹ்விடத்தில் தன்னுடைய அந்தஸ்தை உயர்த்திக் கொள்வதற்காக உபரியான வணக்கங்களைச் செய்து கொள்வதற்கு மார்க்கம் அனுமதி வழங்கியுள்ளதோடு ஆர்வ மூட்டியும் உள்ளது. அல்லாஹ்வின் தூதர் நபி صلى الله عليه وسلم அவர்கள் இது போன்ற உபரியான வணக்கங்களை நமக்குக் கற்றுத் தந்துள்ளார்கள்.

அல்லாஹ்வின் தூதர் صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்:

நிச்சயமாக அல்லாஹ் கூறுகிறான்: யார் எனது நேசரை பகைத்துக் கொள்கிறாரோ அவருடன் நான் போர் தொடுக்கின்றேன் . நான் என் அடியான் மீது கடமையாக்கியிருக்கும் வணக்கத்தின் மூலமாகவே என் அடியான் எனக்கு நெருக்கமாகின்றான். அதுவே எனக்குப் பிரியமான வணக்கமாகும். எனது அடியான் உபரியான வணக்கங்கள் மூலம் என்னை நெருங்கிக் கொண்டிருக்கிறான். அதன் பயனாக அவனை நான் நேசிக்கிறேன். நான் அவனை நேசிக்கும் போது அவன் செவியுறுகின்ற செவியாகவும், அவன் பார்க்கின்ற பார்வையாகவும், அவன் நடக்கின்ற காலாகவும் நான் ஆகி விடுகின்றேன். அவன் என்னிடம் கேட்டால், நான் அவனுக்குக் கொடுக்கின்றேன். அவன் என்னிடம் பாதுகாவல் தேடினால் பாதுகாப்பு அளிக்கிறேன். முஃமினுடைய உயிரைக் கைப்பற்றும் போது அடையும் சங்கடத்தைப் போன்று நான் செய்கின்ற வேறு எந்தக் காரியத்திலும் நான் சங்கடம் அடைவதில்லை. [ஏனெனில்] என் அடியான் மரணத்தை வெறுக்கின்றான். நான் அவனுக்கு வேதனை அளிப்பதை வெறுக்கிறேன். அறிவிப்பவர் : அபூஹ"ரைரா(ரலி) நூல் : புகாரி

உபரியான வணக்கங்கள் புரிவது இறைவனிடம் நெருக்கத்தை அதிகப்படுத்தி நமது தேவைகளை அல்லாஹ் பூர்த்தி செய்வதற்கு வழி வகுக்கும் என்பதை மேற்கண்ட ஹ்தீஸ் விளக்குகின்றது. கடமையான வணக்கங்களை நிறைவேற்றும் போது மனிதர்கள் என்ற முறையில் குறைபாடுகள் எற்படலாம். இந்தக் குறை பாடுகள் அல்லாஹ்விடத்தில் நம்மைக் குற்றவாளிகளாக ஆக்கிவிடக் கூடாது. எனவே கடமையான வணக்கங்களில் எற்படும் குறைகளுக்கு ஒரு பரிகாரம் தேவைப்படுகிறது. அல்லாஹ்வின் தூதர் صلى الله عليه وسلم அவர்கள் கற்றுத் தந்த வழியில் உபரியான வணக்கங்கள் புரிவது கடமையான வணக்கங்களில் எற்படும் குறைகளை ஈடுசெய்வதாக அமைந்துள்ளது.

அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்கள் கூறுகின்றார்கள் :

நிச்சயமாக ஒர் அடியான் மறுமையில் முதன் முதலில் தொழுகையைப் பற்றி தான் விசாரிக்கப்படுவான். அவனது தொழுகை நிறைவானதாகக் காணப்பட்டால் அவனது தொழுகை நிறைவானது என்று எழுதப்படும். அவனது தொழுகையில் குறை இருந்தால் அல்லாஹ் மலக்குகளை நோக்கி," என்னுடைய அடியானுக்கு உபரியான வணக்கங்கள் இருக்கின்றனவா என்று பார்த்து அவனுடைய கடமையான தொழுகையில் குறைவானதை நிறைவாக்குங்கள். பிறகு ஸக்காத்தைப் பாருங்கள். மற்ற வணக்கங்களையும் இதே கணக்கின் அடிப்படையில் பார்த்து நிறைவாக்குங்கள்" என்று அல்லாஹ் கூறுகின்றான். அறிவிப்பவர் : தமீமுத் தாரி[ரலி] நூல் : தாரமீ

கடமையான வணக்கங்களில் எற்படும் குறைகளை உபரியான வணக்கங்கள் நீக்கி வடுவதுடன் இறைவனிடத்தில் நெருக்கத்தை எற்படுத்துபவையாகவும் அமைந்துள்ளன. எனவே கடமையான வணக்கத்தை நிறைவேற்றி விட்டோம் என்று அலட்சியமாக இருந்து விடாமல் உபரியான வணக்கங்களையும் நிறை வெற்றி அல்லாஹ்வின் அருளைப் பெற்றவர்களாக நாம் ஆக வேண்டும்.

9/25/2010

இபாதுர் ரஹ்மான்

வெள்ளிக்கிழமை குத்பா உரை
இபாதுர் ரஹ்மான் அழகிய தலைப்பில்
நல்ல ஒரு வகுப்பாக அமைந்தது என்றால் மிகையல்ல..

அல்லாஹ்வின் நல்லடியார்கள் எப்படி பட்டவர்கள்,
அவர்கள் எப்படி இருக்கவேண்டும் என்பதை பாடமாக
நமது இமாம் முனிர்ஸலாஹி அவர்கள் குத்பா உரையில்
தொகுத்து சொற்பொழிவாற்றினார்கள்..
இந்த பாடத்தில்.. இறைவேதத்தில் இருந்தும்,
அண்ணலாரின் வாழ்வில் இருந்தும்,
அவர்களின் சொல், செயல், அங்கீகாரம் ஆகியவற்றை உதாரனமாக எடுத்து,
நல்ல உரையாக சொன்னார்.

அந்த உரையில்... நாயகம்(ஸல்)அவர்கள்
சிறுவர்கள், பெரியவர்கள் அனைவருக்கும் ஸலாம் சொல்வது,
நல்லடியார்கள் இரவின் மூன்றாம் ஜாமத்தில் எழுந்து,
அல்லாஹ்வை பயந்தவர்களாக தஹஜ்ஜத் தொழுவது,
எந் நேரமும் இறைவனை நினைவு கூர்வது,
எதையும் வீண் விரயம் செய்யாதது,
அது போல பொருளாதாரத்தையும் தேவையுடன் செலவு செய்வது,
எல்லோருக்கும் உதவிகள் செய்வது, இஸ்லாமிய சட்டங்களை மதித்து நடப்பது,
பாவமான காரியங்கள் செய்யாமல் இருப்பது, அப்படி பாவமான காரியங்கள்
செய்துவிட்டால் இறைவனிடத்தில் பாவமன்னிப்பு தேடுவது,
என நல்ல ஒரு பாடமாக குத்பா உரையை நிகழ்த்தினார்.
ஆண்களும், பெண்களும் தொழுகைக்கு வந்து இருந்தனர்.
பள்ளி வாசல் தொழுகையாளிகளால் அலங்கரிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

9/17/2010

"ஜகாத்" செலுத்தாதவர்களின் நிலை

உலக மக்கள் கொஞ்சம் நிதானமாக சிந்தித்தால் 1421 வருடங்களூக்குமுன் மனிதன் நாகரீகமடையாத அந்தக்காலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட வாழ்க்கை நெறி இஸ்லாம். இன்று இந்த நாகரீகக் காலத்திலும் அதன் நிலை மங்காமல் எந்த மாற்றத்திற்கும் அவசியமில்லை என்று நிலை நாட்டிக்கொண்டிருப்பது அதியசமன்றோ. அது மட்டுமல்ல உலகம் அழியும் வரை மக்கள் கடைபிடிக்க எளிதாகவும் தெளிவாகவும் இருப்பதும் அதிசமன்றோ.

இதற்குக் காரணம் என்ன? மனிதனால் அல்லது மனிதர்களில் அறிஞர்கள் அடங்கிய குழுவினரால் திட்டமிடப்பட்ட ஒரு வாழ்க்கை நெறியாக அது அமைந்திருந்தால் அது சாத்தியமா? நிச்சயமாக இல்லை. இஸ்லாம் அப்துல்லாஹ்வின் மகனார் முஹம்மது(ஸல்) என்ற தனி மனிதராலோ அல்லது அவர்களும், அவர்களது தோழர்களும் இணைந்த ஒரு குழுவினராலோ அலசி ஆராயப்பட்டு அமைக்கப்பட்ட ஒரு வாழ்க்கை நெறித் திட்டம் அல்ல. மாறாக இஸ்லாம் அகில உலகங்களையும் அவற்றிலுள்ள அனைத்தையும் படைத்து பரிபாலித்து வரும் சர்வ வல்லமை மிக்க இறைவனால், அவனது இறுதித்தூதர் முஹம்மது(ஸல்) அவர்கள் மூலம் அகில உலக மக்களுக்கும் நிறைவு செய்யப்பட்ட வாழ்க்கை நெறியாகக் கொடுக்கப்பட்டதாகும்.

அந்த வல்லோனாகிய ஏக இறைவன் இவ்வுலக வாழ்க்கையை மனிதர்களுக்கு இவ்வுல வாழ்க்கை ஒரு சோதனை என்று தனது இறுதி மறை அல்குர்ஆனில் தெளிவுபடுத்தியுள்ளான். உங்களில் எவர் செயல்களால் மிகவும் அழகானவர் என்பதைச் சோதிப்பதற்காக அவன், மரணத்தையும் வாழ்வையும 67:2 எனவே இவ்வுலக வாழ்க்கையில் ஏழை பணக்காரன், தொழிலாளி முதலாளி, அதிகாரம் வகிப்பவன் அதற்கு கட்டுபடுபவன் போன்ற பாகுபாடுகளுடன் நடமாடவிட்டிருப்பது சோதனையின் காரணமாகவே.

கணக்கில் அடங்காத மறு உலக வாழ்க்கையோடு விரல் விட்டு எண்ணும் ஆண்டுகளுடைய இவ்வுலக வாழ்க்கையை அதாவது மிக மிக அற்பமானதொரு வாழ்க்கையை ஒப்பிட்டு அறிபவர்களே இந்த உண்மையை ஏற்க முடியும். தினசரி கோடிக்கணக்கான ரூபாய்களுடன் புழங்கும் ஒருவனே சில சில்லறை நோட்டுகளை புறக்கணிக்கதக்க நிலையை உணர முடியும். அன்றாடம் சில சில்லறைக் காசுகளை மட்டும் பார்த்து வருபவனுக்கு அதுவே பெரும் சொத்தாகத் தெரியும்.

இதே போல நிரந்தரமான கணக்கிலடங்காத மறு உலக வாழ்க்கையில் உறுதியான நம்பிக்கை உடையவர்களுக்கே அற்பமான புறக்கணிக்கத்தக்க இவ்வுலக வாழ்க்கையின் நிலை புரியும். மறு உலக வாழ்க்கையில் நம்பிக்கை இல்லாதவர்கள் அழிந்து போகும் இவ்வுல வாழ்க்கையைவிட பெரியதொரு வாழ்க்கை இருப்பதை ஏற்க முடியாதுதான். அவர்களுக்கு இவ்வுலகமே சர்வமும்.

இவ்வுலகின் ஆசாபாசங்களுக்கும், சொத்து சுகங்களுக்கும், பணம் காசுக்கும் அடிமைப்பட்டு கிடப்பவன், மறுமையின் அழியாத நித்தியமான பதவிகளையும் சுகங்களையும் அறியாதவனாகத்தான் இருப்பான். அந்த அளவுக்கு அவனது அக புற கண்கள் குருடாகத்தான் இருக்கும். எனவே அவனிடமே கஞ்சத்தனமும், அற்பத்தனமும் நிறைந்து காணப்படும்.

மறுமையின் நிறந்தர நித்திய வாழ்க்கையை அறிந்து வைத்திருப்பவன் இவ்வுலகில் தனக்கு அல்லாஹ்வால் கொடுக்கப்பட்டிருக்கும் சொத்து சுகங்களும், செல்வங்களும் சோதனைக்காக கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஏழை எளியவர்களின் மற்றும் தேவையுடையோரின் பங்கும் இருக்கிறது. அவற்றை முறைப்படிக் கணக்கிட்டு உரியவர்களிடம் ஒப்படைத்துவிட வேண்டும். அப்படி ஒப்படைக்கத் தவறினால் வைகோல் போரை நாய் காத்து கிடந்த கதையாகத்தான் முடியும் என்பதை உணர்ந்து கொள்வான்.

இவ்வுலக சொத்து சுகங்களை, பணங்காசை உரியவர்களுக்குப் பங்கிட்டு கொடுக்காமல் கஞ்சத்தனத்தால் அவற்றைக் கட்டிக்காத்தவன் நிச்சயமாக ஒரு நாளைக்கு அவற்றைத் துறந்து மரணிக்கத்தான் போகிறான். அவற்றை பிரிவது மட்டுமல்ல, அவற்றை உரியவர்களுக்குக் கொடுக்காமல் கட்டிக்காத்து கிடந்ததற்குறிய தண்டனையை இனிமேல்தான் அடையப் போகிறான். ஆயினும் இப்படிப்பட்ட கடுந்தண்டனையை அவன் இங்கு உணர்வதாக இல்லை. அங்கு நேரில் கண்கூடாகக் கண்ட பின்னர்தான் அழுது பிரலாபிக்கப் போகிறான். ஆயினும் அது அவனுக்குப் பலன் தராது.

ஏழை எளியவர்கள் மற்றும் தேவையுடையவர்களுக்குரிய பங்கை - ஜகாத்தை கணக்கிட்டு கொடுக்காததின் காரணமாக அவன் சேர்த்து வைத்த தங்கமும் வெள்ளியும் உருக்கி காய்ச்சப்பட்டு அவனது நெற்றியிலும் விலாப்புறங்களிலும் முதுகிலும் சூடு போடப்படும். அல்லாஹ் அளித்துள்ள செல்வத்திலிருந்து ஜகாத்தை முறைப்படிச் செலுத்துவதன் அவசியம் பற்றியும் அதை முறையாக செலுத்தாதவர்களின் நிலை பற்றியும் கீழ் வரும் வசனங்களை படித்து உணர வேண்டியது ஒவ்வொரு முஸ்லிமான ஆண் பெண் மீது நீங்காக் கடமையாகும். அவையாவன: 2:43,83,110,177,277 4:77,162 5:12,55 7:156 9:5,11,18,34,35,60,71 19:31,55 21:73 22:41,78 27:3 30:39 31:4 33:33 41:6,7 58:13 73:20 98:5

இவற்றில்

நம்பிக்கை கொண்டோரே! மத குருமார்களிலும், பாதிரிகளிலும் அதிகமானோர் மக்களின் செல்வங்களைத் தவறான முறையில் உண்ணுகின்றனர். அல்லாஹ்வின் வழியை விட்டும் (மக்களைத்) தடுக்கின்றனர். ''அல்லாஹ்வின் பாதையில் செலவிடாமல் தங்கத்தையும், வெள்ளியையும் சேர்த்து வைப்போருக்கு துன்புறுத்தும் வேதனை உண்டு'' என்று எச்சரிப்பீராக! அல்குர்ஆன் 9:34

அவை அந்நாளில் நரக நெருப்பில் பழுக்கக் காய்ச்சப்பட்டு, அதனால் அவர்களின் நெற்றிகளிலும், விலாப்புறங்களிலும், முதுகுகளிலும் சூடு போடப்படும். ''இதுவே உங்களுக்காக நீங்கள் சேகரித்தது. எனவே நீங்கள் சேகரித்தவற்றை அனுபவியுங்கள்!'' (என்று கூறப்படும்) அல்குர்ஆன் 9:35


ஆகிய இரு கடுமையான எச்சரிக்கைகளையும் உண்மையான முஸ்லிம்கள் தங்கள் நெஞ்சில் நிறுத்தி இந்தக் கொடுமையான தண்டனையிலிருந்து விடுபட தங்கள் சொத்துக்களிலிருந்து ஜகாத்தை முறையாக கணக்கிட்டுக் கொடுத்துவிட கடமைப்பட்டிருக்கிறார்கள்.

9/11/2010

இனிய பெருனாள் - 2





இனிய பெருனாள்





பித்ராவின் பயணங்களில்..







பித்ராவின் பணிகளில்...





9/05/2010

செய்திகள்

புனித ரமலான் மாதம் இறையருளால் செல்கிறது.
தினந்தோறும் பஜ்ர் தொழுகைக்குப்பின் சிறிது நேரம்
குர் ஆன் விரிவுரை வகுப்புகள் நடைபெறுகிறது.

தினமும் அஸர் தொழுகைக்குப்பின் குர் ஆன் விரிவுரை வகுப்புகள் நடைபெறுகிறது.
இதில் நபிமார்களின் வாழ்க்கை வரலாறு இடம் பெறுகிறது.

பள்ளியில் இப்தார் நேரங்கள் சங்கையாக உள்ளது.
தினமும் 125பேருக்கு குறையாமல் நோன்பு திறக்க வருகிறார்கள்.
அவர்களுக்கு இப்தார் உணவாக , சர்பத், பேரீட்சை, கஞ்சி,
பழங்கள், வடை, சமூசா, சில சமயங்களில் பப்ஸ் வைக்கப்படுகிறது.

இரவுத்தொழுகை சிறப்பாக நடைபெறுகிறது.
அதிகாலை 3.00 மணிக்கு இரவுத்தொழுகை தொடங்கி,
4.00 மணிக்கு முன் முடிந்து விடும்.
தொழுகை முடிந்ததும் அனைவருக்கு ஸஹர் உணவாக
சூடு ஆறாமல், உணவுப் பொட்டலங்கள் கொடுக்கப்படுகிறது.
தினமும் ஆண்கள் சுமார் 60பேருக்கு குறையாமலும்,
பெண்கள் நூற்றுக்கு மேற்ப்பட்டவர்களும் கலந்துக்கொள்கிறார்கள்.
ஒற்றைப்படை இரவுகளில் இதன் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்.

பித்ராவின் பணிகள் தொடங்கிவிட்டது.
இதற்காக பொறுப்புகள் கொடுக்கப்பட்டு
அதன் செயல்பாடுகளை பார்த்து வருகிறார்கள்.
எல்லா புகழும் இறைவனுக்கே!

9/02/2010

லைலத்துல் கத்ர்

ரமழான் மாதத்தில் மகத்துவமிக்க ஓர் இரவு உள்ளது. அந்த ஒரு இரவு ஆயிரம் மாதங்களைவிட சிறப்பானதாக அமைந்துள்ளது.

இந்தத் திருக்குர்ஆனை மகத்துவ மிக்க ஓர் இரவில் நாம் அருளியுள்ளோம். மகத்துவமிக்க இரவைப்பற்றி உமக்குத் தெரியுமா அந்த மகத்துவமிக்க இரவு ஆயிரம் மாதங்களைவிட சிறந்ததாகும். (அல்குர்ஆன் 97:1-3)

இந்த மகத்துவமிக்க இரவு இதுதான் என்று வரையறுத்து குர்ஆனிலோ ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களிலோ கூறப்படவில்லை. ஆனாலும் ரமழான் மாதத்தின் கடைசிப் பத்து நாட்களில் ஒற்றைப்படை இரவுகளில் அந்த இரவு அமைந்திருக்கலாம் என்பது தான் ஹதீஸ்களிலிருந்து பெறப்படும் உண்மையாகும்.

லைலத்துல் கத்ர் இரவை ரமழானின் கடைசி பத்து நாட்களில் ஒற்றை இரவுகளில் நீங்கள் தேடுங்கள் என்பது
நபி (ஸல்)மொழி. அறிவிப்பவர் ஆயிஷா(ரலி) நூல்: புகாரி

நபி (ஸல்) அவர்கள் மக்களிடம் வந்தார்கள். அப்போது அவர்கள் மக்களிடம் வந்தார்கள். அப்போது இரண்டு மனிதர்கள் வழக்காடிக் கொண்டிருந்தனர். அவ்விருவருடன் ஷைத்தான் இருந்தான். எனவே அதை நான் மறந்துவிட்டேன். எனவே அதை கடைசி பத்து நாட்களில் தேடுங்கள் என்று நபி (ஸல்) கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஸயீத் (ரலி) முஸ்லிம், அஹ்மத்

குறிப்பிட்ட இரவு லைலத்துல் கத்ர் இரவு என்று சில ஹதீஸ்கள் வந்திருந்தாலும் கடைசிப் பத்து நாட்களில் ஏதேனும் ஒரு இரவாக இருக்கும் சாத்தியம் உள்ளது என்று இந்த ஹதீஸ்கள் கூறுவதால் இந்தப் பத்து நாட்களும் முயற்சிப்பதே சிறப்பானதாகும்.

லைலத்துல் கத்ரின் அமல்கள்

லைலத்துல் கத்ர் இரவுக்கென்று விசேஷமான தொழுகையோ பிரத்தியேகமான வணக்கமோ ஹதீஸ்களில் காணப்படவில்லை. ஆயினும் கடைசி பத்து நாட்களும் பள்ளிவாசலிலேயே தங்கியிருக்கும் இஃதிகாப் எனும் வணக்கத்தை நபி (ஸல்)யவர்கள் செய்துள்ளார்கள்.

8/25/2010

குர்ஆன் ஓதுவதின் சிறப்புகள்

1) நீங்கள் குர்ஆனை ஓதுங்கள். நிச்சயமாக அது நாளை மறுமையில் அதை ஓதியவருக்கு ''பரிந்துரை" செய்யும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: முஸ்லிம்)
2) குர்ஆனை ஓதி அதன்படி அமல் செய்தவரையும், குர்ஆனையும் நாளை மறுமையில் கொண்டு வரப்படும், குர்ஆனின் இரண்டு சூராக்கள் அல்பகரா, ஆல இம்ரான் முன் வந்து அந்த இரண்டையும் ஓதியவருக்காக அல்லாஹ்விடத்தில் வாதாடும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: முஸ்லிம்)
3) உங்களில் சிறந்தவர், குர்ஆனைக் கற்று அதை பிறருக்கு கற்றுக் கொடுத்தவர் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: புகாரி)
4) குர்ஆனை உரிய முறையில் ஓதி அதன் படி செயல்பட்டவர் நாளை மறுமையில் சங்கையான உயர்ந்த மலக்குகளுடன் இருப்பார். கஷ்டப்பட்டு திக்கித் திக்கி ஓதுபவருக்கு இரண்டு மடங்கு கூலி கிடைக்கும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: புகாரி, முஸ்லிம்)
5) அல்லாஹ்வுடைய வேதத்திலிருந்து (குர்ஆனிலிருந்து) யார் ஒரு எழுத்தை ஓதுகின்றாரோ, அவருக்கு ஒரு நன்மை கிடைக்கும். ஒரு நன்மை செய்தால், அதை பத்து மடங்காக்கப்படும். அலிஃப், லாம், மீம் என்பது ஒரு எழுத்து என்று நான் கூற மாட்டேன். அலிஃப் என்பது ஒரு எழுத்தாகும். லாம் என்பது ஒரு எழுத்தாகும், மீம் என்பது ஒரு எழுத்தாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: திர்மிதி)
6) ""எவருடைய உள்ளத்தில், குர்ஆனில் கொஞ்சம் கூட மனனம் இல்லையோ, அவருடைய உள்ளம் பாழடைந்த வீட்டைப்போல்"" என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: திர்மிதி)

ஜகாத் என்னும் தானங்கள்

ஜகாத் என்னும் தானங்கள்

1) தரித்திரர்களுக்கும்
2) ஏழைகளுக்கும்
3) தானத்தை வசூல் செய்யும் ஊழியர்களுக்கும்
4) இஸ்லாத்தின்பால் அவர்கள் உள்ளங்கள் ஈர்க்கப்படுபவர்களும்
5) அடிமைகளை விடுதலை செய்வதற்கும்
6) கடன்பட்டிருப்பவர்களுக்கும்
7) அல்லாஹ்வின் பாதையில்(போர் புரிவோருக்கும்)
8) வழிப்போக்கர்களுக்கும் உரியது...

அத் தவ்பா ;60

தொழுகை நேரங்கள்

தொழுகையாளிகள் நமது பள்ளிவாசலுக்கு தினமும் பஜ்ர் தொழுகைக்கு அதிகமானோர் வருகின்றனர். இரன்டு வரிசை குறையாமல் மக்கள் வருகின்றனர். வாரந்தோ...