8/30/2014


அபூகிலாபா கூறியதாவது : நபி(ஸல்) அவர்களின் தொழுகை எவ்வாறு இருந்தது என்பதை மாலிக் பின் அல்ஹுவைரிஸ் (ரழி) எங்களுக்குத் தொழுது காட்டினார்கள். இவ்வாறு அவர்கள் செய்து காட்டியது எந்தத் தொழுகையின் நேரமாகவும் இருக்கவில்லை. அவர்கள் நின்றார்கள். நன்கு நின்றார்கள். பின்னர் ருகூவு செய்தார்கள். நன்கு ருகூவு செய்தார்கள். பின்னர் தம் தலையை உயர்த்திச் சிறிது நேரம் மவுனமாக நின்றார்கள்.
பின் நமது பெரியார் அபூபுரைத் தொழுவது போலவே மாலிக் பின் அல்ஹுவைரிஸ் தொழுது காட்டினார்கள். இந்த அபூபுரைத் தொழும்போது (இரண்டாம்) ஸஜ்தாவிலிருந்து தலையை உயர்த்திச் சற்று நேரம் உட்கார்ந்து விட்டு (இரண்டாம் ரக்அத்துக்காக) எழக்கூடியவராக இருந்தார் என்று அய்யூப் குறிப்பிடுகிறார். (புகாரி (ர.அ.) : 802)
கள், சாராயம் குடிப்பதிலும், விபச்சாரம் செய்வதிலும், திருடுவதிலும், நீங்கள் என்ன கருத்துக் கொள்கிறீர்கள் என்று நபி(ஸல்) வினவினார்கள். இவற்றிற்கான தண்டனைகள் (பற்றிய வசனங்கள்) அருளப்படுவதற்கு முன்னர், அல்லாஹ்வும் அவனது தூதரும் தாம் மிக அறிந்தவர்கள் என்று மக்கள் கூறினர். அவை தீய செயல்களாகும். அன்றி அவற்றிற்குத் தண்டனைகளும் உண்டு. மேலும் எவன் தன் தொழுகையைத் திருடுகின்றானோ அவனே மிகத் தீய திருடனாவான் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினர். யாரசூலல்லாஹ் அவன் எவ்விதம் தன் தொழுகையைத் திருடுகிறான் என்று மக்கள் கேட்டனர். அதன் ருகூவுகளையும், ஸுஜூதுகளையும் அவன் பூரணமாகச் செய்ய மாட்டான் என்று நபி(ஸல்) கூறினர். நுஹ்மான் இப்னு முர்ரா, முஅத்தா, அல்ஹதீஃத் : 2852

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தொழுகை நேரங்கள்

தொழுகையாளிகள் நமது பள்ளிவாசலுக்கு தினமும் பஜ்ர் தொழுகைக்கு அதிகமானோர் வருகின்றனர். இரன்டு வரிசை குறையாமல் மக்கள் வருகின்றனர். வாரந்தோ...