9/03/2014

பெண் குழந்தைகள்




அன்றும் இன்றைய நவீன உலகிலும் பெற்றோர் ஆண் குழந்தைகளை விரும்புவது போல் அதிகமாக பெண் பிள்ளைகளை விரும்பவில்லை. வேண்டா வெறுப்புட னேயே பெண் குழந்தை பிறந்த செய்தியை ஏற்கின்றனர். ஆனால் இஸ்லாம் பெண்களின் மூலம் பெற்றோர் அடையும் நன்மைகளை பின்வருமாறு குறிப்பிடுகின்றது.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் தம் இரு பெண் பிள்ளைகளை அவர்கள் பருவ மெய்தும்வரை நன்கு பரிபாலித்து நல்லொழுக்கப் படுத்துகிறாரோ அவர் மறுமை நாளில் வருவார்; அவரும் நானும் இவ்வாறு இருப்போம் எனக் கூறி நபி(ஸல்) தங்கள் விரல்களுக்கு மத்தியில் இணைத்துக் காண்பித்தார்கள். (நூல் :முஸ்லிம்)

அன்னை ஆயிஷா(ரழி) கூறினார்கள்:- என்னிடம் தன் இரு பெண் பிள்ளைகளைச் சுமந்தவளாக ஓர் ஏழைப் பெண்மணி வந்தாள். அவளுக்கு நான் மூன்று பேரீத்தம் பழங்களைக் கொடுத்தேன். அதனை அப்பெண் தன் இரு பெண் பிள்ளைகளுக்கும் ஒவ்வொன்றாக கொடுத்துவிட்டு, தான் உண்பதற்காக ஒரு பழத்தை தமது வாயின் பக்கம் உயர்த்தினாள். அதற்குள்ளாக அவ்விரு பெண் பிள்ளைகளும் அப்பழத்தையும் உண்ணக் கேட்டனர். உடனே அப்பெண், தான் உண்ண விரும்பிய அப்பழத்தை இரண்டாகப் பிளந்து அவ்விரு பெண்பிள்ளைகளுக்கும் கொடுத்தாள். அப்பெண்ணின் செயல் என்னை வியப்பில் ஆழ்த்தியது. நான் இதனை நபி(ஸல்) அவர்களிடம் கூறினேன். அதற்கவர்கள், அப் பெண்ணுக்கு இதற்காக சுவனத்தை அல்லாஹ் அவசியமாக்கிவிட்டான்;; நரகை விட்டு அப்பெண்ணை விடுவித்து விட்டான் எனக் கூறினார்கள். (நூல் :- முஸ்லிம் )

அன்று அரேபியாவில் சில பிரிவினர் பெண் குழந்தை பிறந்தால் உயிருடன் புதைத்தனர். அதனை இஸ்லாம் முற்றாகத் தடுத்தது. நீங்கள் வறுமைக்குப் பயந்து உங்களுடைய குழந்தைகளைக் கொலை செய்யாதீர்கள்;; அவர்களுக்கும் உங்க ளுக்கும் நாமே உணவை (வாழ்க்கை வசதிகளையும்) அளிக்கிறோம். அவர்களைக் கொல்லுதல் நிச்சயமாகப் பெரும் பிழையாகும். (அல்குர்ஆன்;:-17 :31)

இன்றும் பல நாடுகளில் பெண் குழந்தைகள் கொலை செய்யப்படுவதை நாம் அறிகின்றோம். ஆனால் 1434 ஆண்டுகளுக்கு முன்பே அல்லாஹ் அல்குர்ஆனை அருளியதன் மூலம் இஸ்லாமிய உலகம் இப்பெண் குழந்தைகளின் கொலையை முற்றாக தடுத்து விட்டது. இவ்வாறு பெண்களுக்கு கண்ணியம் வழங்கிய மார்க்கம் அல்லாஹ்வின் இயற்கை மார்க்கமான இஸ்லாம் மார்க்கமாகும். இன்று பெண் உரிமை வேண்டும் என ஆபாசத்திற்கும், பெண்களை மானபங்கப்படுத்துவதற்கும் சில ஷைத்தானிய கொள்கைவாதிகள் சில சிலை வணங்கிகளுடன் சேர்ந்து முயற்சித்து வருவதைக் காண்கின்றோம். ஆனால் அவ்வகையான நாடுகளில் எல்லாம் பெண் சிசுக் கொலைகளும், பாலியல் ரீதியான பெண்கள் துன்புறுத்தல்களும் கோடிக்கணக்கில் இடம்பெறுவதைக் காண்கிறோம். இவற்றிலிருந்து நீங்கி பெண்கள் கண்ணியம் அடைவதற்கு இஸ்லாமிய மார்க்கத்தில் முழுமையாக நுழைந்து விடுவதே ஒரே வழியாகும். இஸ்லாம் பெண்களின் உரிமைகளை எவ்வாறு பாதுகாக்கின்றது என்பதை தொடர்ந்து அவதானிப்போம்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:- பெண்களுக்கு நலவை நாடுங்கள்! நிச்சயமாக பெண், விலா எலும்பிலிருந்து படைக்கப்பட்டவள். விலா எலும்புகளின் மேற்பகுதி, மற்றவைகளைவிட மிக வளைவாக உள்ளது. அந்த எலும்பை நேராக்க நீர் சென்றால் அதனை நீர் முறித்து விடுவீர்! அதனை அப்படியே விட்டு விடுவீரானால் அது வளைவாகவே இருக்கும். (ஆகவே நடுநிலைமையைக் கடைப்பிடியுங்கள்.) (நூல்:புகாரி,முஸ்லிம்.)

அன்று நபி(ஸல்) அவர்கள் மூலம் அல்லாஹ் பெண்களின் உரிமைகள் பேணப்படவேண்டும் என்பதற்காக முன் வைத்த சத்தியக் கருத்துகளை, கட்டளைகளை அவதானியுங்கள்.

நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள்:- ஒரு முஃமினான ஆண்(கணவன்) ஒரு முஃமினான பெண்ணை (அவன் மனைவியை) வெறுக்க வேண்டாம். அவன் அவளிடம் ஒரு குணத்தை வெறுத்தால் அவளிடமுள்ள வேறொரு (நற்)குணத்தைக் கொண்டு பொருந்திக் கொள்வானாக! (நூல்;: முஸ்லிம்)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:- முஃமின்களில் ஈமானால் பரிபூரணமானவர், அவர்களில் குணத்தால் மிக அழகானவரே! உங்களின் மனைவியரிடம் சிறந்தவர்களே, உங்களில் சிறந்தவர்கள். (திர்மிதி)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:- அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடி நீ செலவ ழிக்கும் ஒவ்வொரு செலவுக்கும் உனக்கு நற்கூலி கொடுக்கப்படாமல் இல்லை; எந்த அளவிற்கென்றால், உன் மனைவியின் வாயில் நீ ஊட்டும் உணவுக் கவளம் வரை. (நூல் :- புகாரி , முஸ்லிம்)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:- உலகம் (சிறிது காலம்) சுகம் பெறப்படும் ஒரு பொருளாகும். அவ்வாறு சுகம் பெறப்படும் உலகப் பொருள்களிலே மிகச்சிறந்தது, நல்ல ஸாலிஹான மனைவியாவாள்.

இன்னும், உங்களில் வாழ்க்கைத் துணை இல்லா (ஆடவர், பெண்டி)ருக்கும், அவ்வாறே (வாழ்க்கைத் துணையில்லா) ஸாலிஹான உங்கள்(ஆண், பெண்) அடிமைகளுக்கும் விவாகம் செய்து வையுங்கள். அவர்கள் ஏழையாக இருந்தால், அல்லாஹ் தன் நல்லருளைக் கொண்டு அவர்களைச் சீமான்களாக்கி வைப்பான்;; மேலும் அல்லாஹ் (கொடையில்) விசாலமானவன், (யாவற்றையும்) நன்கறிந்தவன். (அல்குர்ஆன்:-24: 32)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தொழுகை நேரங்கள்

தொழுகையாளிகள் நமது பள்ளிவாசலுக்கு தினமும் பஜ்ர் தொழுகைக்கு அதிகமானோர் வருகின்றனர். இரன்டு வரிசை குறையாமல் மக்கள் வருகின்றனர். வாரந்தோ...