12/24/2013

நபிமொழிகள் தொழுகை 5

 குளிர் தாங்க முடியாத போது தயம்மும் செய்தல்

 தாதுஸ்ஸலாஸில் எனும் இடத்தில் நடந்த போரில்
 குளிராக இருந்த ஒரு இரவில் எனக்குத் தூக்கத்தில் விந்து
 வெளியானது. நான் குளித்தால் நாசமாகி விடுவேன் என்று அஞ்சினேன்.
 எனவே, தயம்மும் செய்து என் சகாக்களுக்கு சுப்H தொழுவித்தேன்.
 இதை நபி(ஸல்) அவர்களிடம் (பின்னர்) தெரிவித்தேன்.
 அம்ரே! உமக்கு குளிப்பு கடமையாக இருந்த போது உமது சகாக்களுக்குத்
 தொழுவித்தீரா? என்று நபி(ஸல்) கேட்டனர்.
 குளிப்பதற்கு தடையாக இருந்த காரணத்தை அவர்களிடம் கூறினேன்.

 உங்களை நீங்களே  மாய்த்துக்கொள்ளாதீர்கள். அல்லாH உங்கள் மீது
 இரக்கம் உள்ளவனாக இருக்கிறான் என்று அல்லாH கூறுவதை நான்
 செவியுற்றுள்ளேன் (4:29) என்று விளக்கினேன். இதைக்கேட்ட
 நபி(ஸல்) அவர்கள் சிரித்தார்கள். வேறு எதையும் கூறவில்லை.
 அறிவிப்பவர் ; அம்ரு பின் அல் ஆஸ் (ரலி)
 நூல்கள் : அபூதாவூத் 283 , அகமத் 17144.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தொழுகை நேரங்கள்

தொழுகையாளிகள் நமது பள்ளிவாசலுக்கு தினமும் பஜ்ர் தொழுகைக்கு அதிகமானோர் வருகின்றனர். இரன்டு வரிசை குறையாமல் மக்கள் வருகின்றனர். வாரந்தோ...