12/27/2009

முஹர்ரம் மாதத்தில் இப்தார்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால்
அவனது சத்திய மார்க்கத்தை அதன் தூயவடிவில்
யதார்த்த முறையில் மக்களுக்கு எடுத்துச் சொல்லி
அதை விளங்க வைத்து அதற்காக பல தியாகம் செய்த
நமது சகோதரர்களின் முயற்சிகள் வீண்போக வில்லை என சொல்லலாம்.
அல்லாஹ்வின் மார்க்கத்தை வளர்ப்பது அவனது செயல் அல்லவா?

அன்றைய காலங்களில் இது போன்ற
நோன்புகள் வைப்பவர்கள் மிகக்குறைவே.
இன்னும் சொல்லப்போனால் விரல் விட்டு என்னிவிடலாம்.
அப்படித்தான். அதாவது நபிவழியை அறிந்தவர்கள் மட்டும்
இது போன்ற சுன்னாவை பேணி வந்தார்கள்.

இன்று என்னவென்றால் நாம் முதன் முதலாக
நம் உயிரினும் மேலான நாயகத்தின் சுன்னாவை ஆர்வமூட்ட,
இப்தார் ஏற்பாடு செய்து இருந்தோம்.
கஞ்சியும் காய்ச்சி வினியோகமும் செய்தோம்.
ரமலானில் உள்ள அதே அளவுக்கு கூட்டம் அலைமோதியது.
நோன்பு திறக்க, 78 பேர் வந்து இருந்தார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தொழுகை நேரங்கள்

தொழுகையாளிகள் நமது பள்ளிவாசலுக்கு தினமும் பஜ்ர் தொழுகைக்கு அதிகமானோர் வருகின்றனர். இரன்டு வரிசை குறையாமல் மக்கள் வருகின்றனர். வாரந்தோ...