8/30/2009

தடைசெய்யப்பட்ட நாட்கள் (தொடர் 3)

வெள்ளிக்கிழமை

வெள்ளிக்கிழமை மட்டும் நோன்பு நோற்பது கூடாது.
வியாழன், வெள்ளி அல்லது சனி என்று முன்போ, பின்போ
ஒரு நாட்கள் சேர்த்து வேண்டுமானால் நோன்பு நோற்கலாம்.
' உங்களில் எவரும் வெள்ளிக்கிழமைக்கு முன் ஒரு நாளைச் சேர்க்காமல்
அல்லது அதற்குப் பின் ஒரு நாளைச் சேர்க்காமல் நோன்பு நோற்க வேண்டாம்'
என்று நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹூரைரா (ரலி)
நூல்கள் : புகாரி(1985), முஸ்லிம், அபூதாவூத், திர்மிதீ.

சனிக்கிழமை

வெள்ளி, சனி என்று இரண்டு நாள் நோன்பு நோற்கலாம். ஆனால்,
சனிக்கிழமை மட்டும் நோன்பு நோற்பதை நபி(ஸல்) அவர்கள்
தடை செய்துள்ளார்கள்.
'உங்கள் மீது கடமையாக்கப்பட்ட நாட்களில் தவிர (வேறு)
சனிக்கிழமைகளில் நீங்கள் நோன்பு நோற்கக்கூடாது.
சனிக்கிழமைகளில் உண்பதற்கு திராட்சை தோல் அல்லது மரக்குச்சியைத் தவிர
வேறு எதுவும் கிடைக்காவிட்டால் அதையாவது மென்று விடட்டும்'
என்று நபி(ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு புஸ்ர்(ரலி)
நூல்கள் : திர்மிதீ, அபூதாவூத், ஹாகிம்

ஷஅபான் 15

பரா அத் இரவு என்று கூறப்படும் ஷபான் 15ல்,
நோன்பு நோற்பதை நபி(ஸல்)அவர்கள் தடை செய்துள்ளார்கள்.
15அதற்கு மேல் ரமலான் வரை உபரியான எந்த நோன்பும் நோற்கக்கூடாது.
'ஷபான் பாதி நாட்கள் மீதமிருக்கும்போது நீங்கள்
நோன்பு நோற்கலாகாது' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹீரைரா (ரலி)
நூல்கள் : திர்மிதீ, அபூதாவூத், இப்னு ஹிப்பான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தொழுகை நேரங்கள்

தொழுகையாளிகள் நமது பள்ளிவாசலுக்கு தினமும் பஜ்ர் தொழுகைக்கு அதிகமானோர் வருகின்றனர். இரன்டு வரிசை குறையாமல் மக்கள் வருகின்றனர். வாரந்தோ...