11/27/2009

இன்றைய குத்பா உரை

இன்று வெள்ளிக்கிழமை குத்பாவை
நமது பள்ளியின் இமாம் முனிர்ஸ்லாஹி அவர்கள் உரையாற்றினார்கள்.
இன்றைய உரையில் இப்றாஹிம் நபி அவர்களின் தியாகத்தில்
தனது மகனை அறுக்க சென்ற சம்பவத்தை நினைவு கூர்ந்து,
அந்த சம்பவங்களை எடுத்துச் சொல்லியும், அதிலிருந்து,
அந்த தியாகத்தை நினைவு கூர்ந்து நாம் அனைவரும் குர்பானி
(animal sacrifice)கொடுக்கவேண்டும் என வலியுறுத்தினார்.

குர்பானி தனியாகவோ அல்லது கூட்டாகவோ சேர்ந்து
கொடுக்கலாம் என கூறினார்.
கூட்டாக சேர்ந்து கொடுப்பவர்கள் மாடு அல்லது ஒட்டகம்
கொடுக்கலாம் என கூறினார்.. குர்பானியின் தோலை, கயிறை
அதை அறுப்பவருக்கு கூலியாக கொடுக்கக்கூடாது, அதேபோல
அதன் இறைச்சியை குடும்பத்தார்களுக்கும் , உறவினர்களுக்கும், ஏழைகளுக்கும்,
கொடுக்கவேண்டும் என கூறினார். அதே போலே இறைச்சியை
மூன்று நாட்களுக்கும் மேலேயும் வைத்து உபயோகிக்கலாம் என கூறினார்.




பெருனாளைக்கு அடுத்து வரும் மூன்று நாட்களும் அய்யாமுல் தஷ்ரீக் என
சொல்லப்படும் நாட்களாகும் .. இந்த நாட்களில் எந்த நோன்பும் வைக்கக்கூடாது.
(கூடுதல் விபரங்கள் தடை செய்யப்பட்ட நாட்கள் என்ற கட்டுரையை பார்க்கவும்)

குர்பானி கொடுக்க இருப்பவர்கள்
பிறை 13 சூரியன் மறையும் வரை கொடுக்கலாம்.
அதன் பின்னர் கொடுக்கக்கூடாது
குர்பானிக்காக பிராணியை அறுக்கக்கூடாது.
நல்ல அழகான உரை.
பயணத்தில் இருந்து வந்த பலரும்
இன்றைய ஜும்மாவில் ஆஜரானார்கள்..
அல்ஹம்துலில்லாஹ்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தொழுகை நேரங்கள்

தொழுகையாளிகள் நமது பள்ளிவாசலுக்கு தினமும் பஜ்ர் தொழுகைக்கு அதிகமானோர் வருகின்றனர். இரன்டு வரிசை குறையாமல் மக்கள் வருகின்றனர். வாரந்தோ...